5 அக்டோபர், 2010

அரசின் பங்காளியாக ரிஷாட் இருப்பது எமக்கெல்லாம் பெருமை’




“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனி இடத்தைப் பெற்றவர்” எனத் தெரிவித்துள்ள இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும “ரிஷாத் பதியுதீன் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் பதவிக்கு சமமானவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் நாகவில்லு தொழில் பயிற்சி நிலையத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“இன்றைய அரசாங்கத்தை ஆட்சியில் நிலையாக வைக்க வேண்டும் என்பதில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆற்றிய பணியை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஜனாதிபதி அதிகமாக நேசிப்பவர்களில் ரிஷாத் பதியுதீனும் மிக முக்கியமானவர்.

கடந்த காலங்களில் அவர் வகித்த மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண அமைச்சர் பதவி மூலம் ஆற்றிய பணிகள் வரலாறாகும், எனவே இவரைப் போன்ற தலைவர்களை எமது அரசாங்கம் கொண்டிருப்பதானது பெருமைக்குரிய விடயமாகும்.

எவ்வித அரசியல் இலாபமும் எதிர்பாராது, சமூகத்தின் நலன் குறித்து அவரால் ஆற்றப்படும் சேவைக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என்றும் அமைச்சர் டலஸ் அழகப் பெரும கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக