20 அக்டோபர், 2010

வாகனங்களின் வரிக்குறைப்பால் செப்டம்பர் மாதம் வரை 10,601 மில். ரூபா வருமானம்

வாகனங்களுக்கான வரி குறைக்க ப்பட்டதால் வாகன இறக்குமதி அதிகரித்துள்ளதோடு கடந்த செப்டம்பர் வரை 10,601 மில். ரூபா வருமானம் கிடைத்ததாக பிரதி நிதி அமைச்சர் சந்தரசிரி கஜதீர கூறினார்.

வாய்மூல விடைக்காக தயாசிரி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மேலும் கூறிய தாவது,

2010 ஜூன் மாதம் முதல் வாகன இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டது. கடந்த வருடங் களில் குறைவாகவே வகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் வரிக்குறைப்பை அடுத்து வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொசீடன் லீடர் கப்பலின் மூலம் 280 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக