22 செப்டம்பர், 2010

ஐ.தே.க ஆதரவாளர்களிடம் இருந்த நெற்களஞ்சிய சாலைகளை மீளப்பெற அரசு நடவடிக்கை


ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது 2002-2004 காலப் பகுதியில் தமது ஆதரவாளர்களுக்கு கையளித்த நெற்களஞ்சிய சாலைகளை மீளப்பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டிலுள்ள விலை மதிக்க முடியாத பல நெற்களஞ்சிய சாலைகள் இவ்வாறு கையளிக்கப் பட்டுள்ளன. இது ஒருவகையில் சட்டவிரோத அபகரிப்பாக மட்டுமல்லாது தேசிய விரயமாகவும் உள்ளது. ஏனெனில் ஒரு புறம் நெற்களஞ்சியமின்மை காரணமாக நெல் பழுதடைவது தேசிய விரயத்தை ஏற்படுத்துகிறது.

மருபுறம் இக்களஞ்சியங்களது மொத்தப் பெறுமதி பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகும். எனவே இன்னும் ஒரு வாரகாலத்தில் அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக