25 செப்டம்பர், 2010

இலங்கை மண்ணில் எந்த ஒரு பயங்கரவாதிக்கும் கால் வைக்க முடியாது: கோத்தபாய

இலங்கை மண்ணில் எந்த ஒரு பயங்கரவாதிக்கும் கால் வைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இலங்கையில் பாகிஸ்தான் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘லஸ்கர்-அல்-தொய்பா’ பயங்கரவாத அமைப்பு பயிற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக அவர் கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கை முற்று முழுதாக பயங்கரவாதத்தை அடியோடு அழித்துள்ள வேளை இலங்கை மண்ணில் ஒரு பயங்கரவாதி காலெடுத்து வைக்க முடியாத அளவு நாம் சக்தி பெற்றுள்ளோம். நாம் மிக விழிப்பாக இருக்கின்றோம். எனவே இங்கு அப்படி பயிற்சிகள் பெற வாயப்பு இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக