21 செப்டம்பர், 2010

முன்னாள் புலிப் போராளிகளுக்கு தொழில் உபகரணங்கள் விநியோகம்

தொழில் பயிற்சியளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழில் உபகரணங்களை வழங்கினார்.

வெலிக்கந்த சேனபுரவிலுள்ள பாதுகாப்பான தங்குமிடவசதி மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொழில் பயிற்சியை முடித்த 250 போராளிகளுக்கு இதன்போது தொழில் உபகரணங்களை முதலமைச்சர் சந்திரகாந்தன் வழங்கினார்.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் மற்றும் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் காமினி உட்பட படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக