30 செப்டம்பர், 2010

முன்னாள் புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 418 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா கலாசார மண்டபத்தில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டி.ஈ.டபிள்யூ குணசேகர தலைமையில், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,

"இறுதிக் கட்டப் போரின் போது, 11ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் இலங்கைப் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இவர்கள் பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 12 நலன்புரி நிலையங்களில் இவர்களுக்கு தொழில் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களில் 4,000 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 2000 பேர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவர்" எனத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, புனர்வாழ்வுத்துறை ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக