23 ஆகஸ்ட், 2010

மேர்வின் சில்வா யாழ். குடா நாட்டிற்கு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ். குடா நாட்டிற்கு சென்றுள்ளார். இவர் யாழ். குடா நாட்டிற்கு இன்றைய தினம் சென்றுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, நலன்புரி நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளதாகவும், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நலன்புரி நிலையங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளதாகவும் அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, நாளைய தினம் களனி விகாரைக்கு வர்ணம் பூசுவதற்கான அனுசரணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக