29 ஆகஸ்ட், 2010

சட்டவிரோத பதாகைகளை அகற்ற காலக்கெடு

கொழும்பு மாநகரசபை எல்லைக்குற்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத விளம்பர பதாகைகளை அகற்றுவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகரசபையின் விசேட ஆணையாளர் ஒமர் காமில் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,.

“சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றுவதற்கு இருவார காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அகற்றப்படாவிடின் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி பதாகைகள் கொழும்பு மாநகரசபையின் அனுமதியின்றி பொது இடங்களிலும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக