18 ஆகஸ்ட், 2010

ஐநாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலய தலைவர் டாக்டர் மொன்ட்செராட் பிக்ஸாஸ் தெரிவித்துள்ளார்.



தமிழகத்திலிருந்து இதுவரை 1000 பேர் தாயகம் வருகை
இலங்கையில் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து தமிழ் நாட்டுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் ஜனவரி மாதம் தொடக்கம் ஆயிரம் பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளதாக
தமிழக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், 'இந்தியாவிலுள்ள அகதிகள்' எனும் தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தாயகம் திரும்ப விரும்புவோருக்குச் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருபவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றனர் எனவும் இலங்கை, மியன்மார், ஆப்கானிஸ்தான், திபெத் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு மருத்துவ வசதி, கல்வி போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"நாம் அகதிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை. இந்தியா வரும் அகதிகள் தொடர்பில் எவ்வித கைச்சாத்துக்களும் இடம்பெறவில்லை.

எமது நாட்டுக்கு வரும் அகதிகள் தொடர்பில் ஐநாவின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்திடம் 147 நாடுகள் கைச்சாத்து பெற்றுக் கொண்டுள்ளன" என மொன்செராட் பெக்ஸா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக