27 ஜூன், 2010

இலங்கை, தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினை குறித்து சென்னையில் கூட்டம்


இலங்கை தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆகஸ்ட் மாதம் சென்னையில் விசேட கூட்டங்கள் நடை பெறவுள்ளதாக இலங்கை வந்துள்ள தென்னிந்திய மீனவர் சங்கங்களின் சம் மேளனத்தின் ஆலோசகர் வி. விவேகானந்தன் தெரிவித்தார்.

இந்தியக் கடல் எல்லைக்குள் செல்லும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப் படுவதும், இலங்கை கடல் எல்லைக்குள் வரும் தமிழக மீனவர்கள் கைது செய் யப்படுவதும் என இரு சாராருக்கும் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு வந்துள்ளன.

இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் மேற்படி தென்னிந்திய சம் மேளனத்தின் பிரதிநிதிகளாக வி. விவே கானந்தன், பு. அருளானந்தம், சூசை எஸ்ரேன் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர்.

முதற்கட்டமாக இவர்கள் மூவரும் யாழ். குடாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தினர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ணவுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான தென்னிந்திய பிரதிநிதிகளை அழைத்துச் சென் றார்.

மிழக மீனவர் சங்கங்கள் சார்பாக முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ராஜித, இலங்கை - தமிழக மீனவர் சங்கங் களுக்கிடையேயான பேச்சுக்கள் நடத்தப்படல் வேண்டும் என் பதையும் உறுதி செய்தார்.

இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கையிலிருந்து கடற் றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் குழுவினர் தமிழகம் செல் லவுள்ளனர். அங்கு தமிழக மீன் பிடித்துறை முகங்களை பார் வையிடுவதுடன் விசேட கலந்துரை யாடல்களிலும் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இறுதியாக நடத்தப்படும் மாநாட்டில் இலங்கையின் சார்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இலங்கையின் கடற் றொழில் தொடர்புடைய அதி காரிகளும் கலந்து கொள்ள வுள்ளனர்.

அத்துடன் இந்திய மத்திய அரசினதும், தமிழக அரசினதும் கடற்றொழில் அமைச்சர்களும் கடற் றொழில் சங்கப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை வந்துள்ள தென்னிந்திய மீனவர் சங்கங்களின் சம் மேளனத்தின் ஆலோசகர் வி. விவேகானந்தன் நிரபராதி மீன வர்களின் விடுதலைக்கான அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் பு. அருளானந்தம், மேற்படி சம் மேளனத்தின் முதன்மை நிர்வாகி சூசை எஸ்ரேன் ஆகியோர் இன்று தமிழகம் திரும்புகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக