17 ஜூன், 2010

மில்ரோய் - முரளிதரன் இன்று யாழ். விஜயம்



மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இன்று யாழ்ப்பாணம் பயணமாகின்றனர்.

இதன் போது அவர்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் மற்றும பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றும் அங்கு இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக