14 மே, 2010

தேசிய கல்விக் கொள்கை; பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்


தேசிய கல்விக் கொள்கையொன்றை வகுப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய அரசும் மாகாண அரசும் ஒத்தியங்குவதற்கு வசதியான தேசிய கொள்கையை வகுப்பதில் கலாநிதி குணவர்தனவின் அறிக்கையும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மாகாண சபைகளில் கல்விக்குப் பொறுப்பான அமைச்சர்களையும் ஈடுபடுத்திக் கொள்வதுடன் கலாநிதி குணவர்தனவின் பரிந்துரைகளும் விரிவாக ஆராயப்படுமென்று அமைச்சர் கூறினார்.

மத்திய, மாகாண அரசுகள் ஒத்துழைப்புடன் செயற்பட்டு தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்த பரிந்துரைகளும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவால் முன்வைக்க ப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக