10 மே, 2010

கப்பம் கோரும் சம்பவங்கள் வவுனியாவில் அதிகரிப்பு : ததேகூ தெரிவிப்பு

யுத்த சூழ்நிலைக்கு பின்னர் வவுனியா மாவட்டத்தில் தொலைபேசியூடாகக் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா மகா வித்தியாலயத்தின் தரம் 5 ஆண்டு பாடசாலை மாணவர் ஒருவரைக் கடத்தப் போவதாகக் கூறி, அவரது தந்தையாரிடம் (பாடசாலை அதிபர்) 5 லட்சம் ரூபாவைக் கோரியது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எமது இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் வர்த்தகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர், கடத்தல் சம்பவங்கள் குறித்துப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக