27 மே, 2010

விமானத்தில் குண்டு புரளி : முஷாரப் பயணம் பாதிப்பு

வாஷிங்டன் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியதால், விமானத்திலிருந்து அவர் கீழே இறக்கப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், 2008ல் பதவி விலகினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தங்கியுள்ள முஷாரப் மீது பாகிஸ்தான் அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. நாடு திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், முஷாரப் வெளிநாடுகளில் தங்கியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் நியூஜெர்சியிலிருந்து லண்டன் புறப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அப்புறப்படுத்தப்ட்டனர். இந்த விமானத்தில் இருந்த முஷாரப், நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்ற தகவலையடுத்து, பயணிகள் மீண்டும் இந்த விமானத்தில் ஏற்றப்பட்டு லண்டன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக