25 மே, 2010

வெள்ளப் பாதிப்புகளுக்கு நட்டஈடு *குடும்பம் ரூ. 50,000 *வயல் ரூ. 20,000 *மரணம் ரூ. 15,000


கடும் மழை வெள்ளம் காரணமாக சேதமடைந்த சொத்துக்கள் பாதிக்கப்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு நட்ட ஈட்டினை வழங்குவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இதற்கென தேவையான நிதியினைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை உடனடியாகத் திரட்டித் தருமாறு சகல மாவட்டச் செயலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள், சேதமடைந்துள்ள சொத்துக்களுக்கு நட்ட ஈடுகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கென போதியளவு நிதியைப் பெற்றுக் கொடுக்க வும் அரசாங்கம் தயாராகவுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை வெள்ளப் பெருக்கு காரணமாக 93,955 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உணவு மற்றும் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதுடன், இச் செயற் பாடுகள் முறையாக இடம்பெறு கின்றனவா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் விசேட குழுவொன் றையும் அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளது.

நட்டஈடாக, முற்றாகப் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு 50,000 ரூபாவையும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகளுக்காக 20,000 ரூபாவையும் பெற்றுக் கொடுப்பதற்கும் மரணமடைந்தோரின் குடும்பமொன்றுக்கு 15,000 ரூபாவை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் பாதிப்புகளை சீர் செய்யும் வகையிலான உடனடி மற்றும் நீண்டகால திட்டங்கள் மற்றும் அதற்கான மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சகல மாவட்டச் செயலாளர்களையும் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப் பட்ட கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு நிவாரணங் களுக்கென நிதியொதுக்கப்பட்டுள் ளதுடன் உலருணவுக்காக உலக உணவுத் திட்டத்தின் கீழ் 56 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. உலருணவு வழங்கும் செயற்பாடுகள் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வெள்ளம் படிப்படியாக வடிந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் தற்காலிக நிவாரண நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளது டன் மேலும் 10,655 பேர் நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள 62 நிலையங்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, வெள்ளம் வடிந்துள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபா யம் உள்ளதால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக