14 ஏப்ரல், 2010

அனைத்து மக்களிடையேயும் சமாதானம் ஏற்பட புதுவருடம் வழிக்கோலட்டும் : ரணில் வாழ்த்து




அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த இந்த புதுவருடம் வழிகோலட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சித்திரைப் புதுவருடம் தமிழ்-சிங்கள மக்களிடையே இன ஐக்கியத்தை வெளிப்படுத்தி நிற்கும் முக்கிய நிகழ்வாகும்.

அமைதியானதும் சுபீட்சமானதுமான முறையில் இந்த பண்டிகையைக் கொண்டாடுவதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிட்ட வேண்டும்.

இன ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் சமூகத்தில் சில செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தருணமாக தமிழ்-சிங்களப் புதுவருடத்தை நாம் கருதுகின்றோம்.

உதயமாகும் புதுவருடம் இனங்களுக்கு இடையே சமாதானத்தை வியாபிக்கக் கூடிய ஓர் ஆண்டாக அமைய வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக