தமிழ் - சிங்கள புத்தாண்டுப் பண்டிகை காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ள
மோதல் சம்பவங்கள், வாகனம் மற்றும் பட்டாசு வெடி விபத்துக்கள் என்பவை காரணமாக 750 பேர் காயமடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துமுள்ளனர்.
காயமடைந்த 486 பேர் சிகிச்சை பெற வந்ததாகவும் அவர்களில் 196 பேர் வைத்தியசாலையில்; தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துச் சேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ஆரியவன்ச தெரிவித்தார்.
"வாகன விபத்துக்களுக்குள்ளாகிய 160 பேரும் கத்தி குத்துக்கு இலக்காகிய 58 பேரும் விளையாட்டின்போது காயமடைந்த 29 பேரும் சிகிச்சை பெற வந்தனர். பட்டாசு வெடி விபத்து காரணமாக ஒருவரே சிகிச்சை பெற வந்தார்.
புத்தாண்டு காலப் பகுதியில் சிகிச்சை பெற வந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கைகலப்பு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு தெற்கில்.....
அதேவேளை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகையில்,
"புத்தாண்டு காலப்பகுதியில் 264 பேர் சிகிச்சை பெற வந்தனர். இவர்களில் 61 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
வீதி விபத்து காரணமாக 43 பேரும், கைகலப்பு காரணமாக 21 பேரும், வீட்டு வன்முறை காரணமாக 37 பேரும், பட்டாசு வெடி விபத்து காரணமாக 3 பேரும் சிகிச்சை பெற வந்தனர்" என்றார்.
மாத்தளையில்.....
மாத்தளை வைத்தியசாலையில் காயங்கள் காரணமாக இதுவரை 35 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுள் பெண்கள் ஏழு பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தளை, மகவல, ரத்தோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவர்கள் எனத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக