
நோர்வே ஓஸ்லோ நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தாக்குதல் நடத்திய எட்டுப் பேருக்கு எதிராக நோர்வே அரசாங்கத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களுள் ஏழுபேர் இலங்கையிலிருந்து நோர்வே சென்று குடியுரிமை பெற்றவர்கள் என்றும், எட்டாமவர் இலங்கையிலிருந்து சென்ற சட்டவிரோத குடியேறியெனவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் ஏனையோர் 25வயதுக்கு உட்பட்டவர்களாவர். தூதுவராலய உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக