12 மார்ச், 2010

அவசர காலச் சட்டங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன : அமெரிக்கா குற்றச்சாட்டு

பயங்கரவாத மற்றும் அவசர காலச் சட்டங்களை சில அரசாங்கங்கள் மிகையாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை மீறல் அறிக்கையிலேயே இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீதும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் சில முக்கியஸ்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரை சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக