21 மார்ச், 2010

அரசியல் யாப்பை மாற்றியமைக்க 2/3 பெரும்பான்மையை தாருங்கள்




திருமலை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர்
வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவென சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுவது அவசியம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று திருமலையில் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சமத்துவத்திற்கும், துரித அபிவிருத்திக்கும் தடையாக இருக்கும் அரசியல் யாப்பை மாற்றியமைத்து நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் யாப்பை அறிமுகப்படுத்துவதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருகின்றோம் என்றும் பிரதமர் கூறினார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவட்ட மட்டத்தில் நடாத்தும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று திருமலை விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற் றும் போதே பிரதமர் மேற்கண்ட வாறு கூறினார்.

பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா தொடந்தும் உரையாற்று கையில்,

அதனால் இப்படியான அரச சார் பற்ற நிறுவனங்களின் செயற்பா டுகளைக் கட்டுப்படுத்துவது அவசி யம் இதற்காக சட்டத்தில் ஏற் பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அதே நேரம் கிராமங்களின் அபிவிருத்தியைக் கிராமத்தவர்களின் யோசனைபடி மேற்கொள்ளுவ தற்காக மக்கள் சபை (ஜனசபா) முறையை அறிமுகப்படுத்தவிருக்கின் றோம்.

அத்தோடு கிராம மன்ற முறையும் (கண்சபா) மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இவை நாட்டின் துரித அபிவிருத்திக்குப் பெரிதும் உதவும்.

சிறு கட்சிகளின் தயவில் தங்கி நிற்கும் அரசு எமக்கு அவசிய மற்றது. அது எமது துரித அபிவி ருத்தி பயணத்தைத் தாமதப்படுத்த முடியும். நிபந்தனைகளின் கீழ் செயற்பட நேரிடும். இதனை மக்கள் உணர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எமது துரித அபிவிருத்தியை மேற்கு நாடுகளைப் போன்று இயந் திரப்படுத்த நாம் விரும்பவில்லை. மாறாக ஒழுக்கத்தை மதித்து நடக்கும் நற்பண்புகள் நிறைந்த சமு தாயத்தை கட்டியெழுப்பும் வகை யில் அதனை மேற்கொள்ள நட வடிக்கை எடுத்திருக்கின்றோம்.

ஐ.தே.க.வின் திருமலை மாவட்ட முன்னாள் எம். பி.யும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம். ஏ. எம். மஃரூப் (சின்ன மஃரூப்) இக்கூட்டத்தில் நன்றியு ரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக