10 பிப்ரவரி, 2010


பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி தேர்தலில் பயன்படுத்த எதிர்க்கட்சி முயற்சி

கைது அரசியல், தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல



சரத் பொன்சேகாவின் கைது அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியானதொன்றல்ல. இராணுவச் சட்டதிட்டங்களை மீறிப் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் உட்பட்டமையே கைதுக்கான காரணமாகுமென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எனினும் சரத் பொன்சேகாவின் கைதை அரசியலாக்கி, எதிர்வரும் தேர்தலில் அதனைப் பயன்படுத்தும் நோக்கிலேயே எதிர்க்கட்சி பல்வேறு கருத்துக்களை நாடுமுழுவதும் பரப்பி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணை அரசாங்கம் சம்பந்தப்பட்டதல்ல. முழுமை யாக இராணுவம் சம்பந்தப்பட்டது. இதில் சிவில் மக்களை சம்பந்த ப்படுத்த வேண்டாமென சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவி த்தார்.

தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்த தாவது:

இராணுவச் சீருடையிலிருந்து கொண்டே அரசியல் நடவடிக்கை களில் ஈடுபட்டமை, முப்படைகளின் தளபதிக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டமை, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படையினரை ஆயிர க்கணக்கானோருக்குப் பாதுகாப்பளி த்தமை, இராணுவ ஆயுதக் கொள் வனவுகளில் இடம்பெற்றுள்ள மோசடிகள் என பல்வேறு குற்றச் சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிணங்க முறைப்படி விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

விசாரணைகள் முடிவுறும் வரை இது குறித்து கருத்துக்களை வெளி யிடக்கூடாது. இன்னும், விசார ணைகள் முற்றாக நிறைவடைய வில்லை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இராணுவ சட்டதிட்டங்களின்படி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி யொருவர் இராணுவ சட்டதிட்டங் களை மீறுவாறேயாகில் இராணுவப் பொலிஸாரால் அவர் கைது செய்ய ப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் நிமித்தம் இராணுவ நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது வழமையான தொரு நடைமுறையாகும்.

இதன்படி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இராணுவ சட்டமுறைமைகளுக்கமைந்த செயற்பாடே. எனினும் சிவில் பிர ஜைகளோ அல்லது வெளியாரோ கருத்துக்களை வெளியிடுவது இவ் விசாரணைகளுக்குப் பங்கமாக அமையலாம். விசாரணை முடிவில் அவரது குற்றங்கள் வெளியிடப்படும்.

சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு வழ ங்கிய பேட்டியொன்றில் அவர் சர்வ தேசம் சென்று சாட்சி சொல்லவும் தயார் எனக் குறிப் பிட்டிருந்ததுடன் சவால்களையும் விடுத்திருந்தார்.

நாட்டின் இராணுவத் தளபதி யொருவர் இவ்வாறு தெரிவிக்க முடியுமா? அவ்வாறு அவர் செயற் பட்டால் நாட்டுக்கு அபகீர்த்தியும் பாரிய நட்டமுமே ஏற்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


பொன்சேகா மீது தாக்குதல் நடத்தவோ இடையூறு ஏற்படுத்தவோ இல்லை
இராணுவப் பொலிஸார் முற்றாக மறுப்பு; மனைவியும் சட்டத்தரணியும் நேற்று சந்தித்துப் பேச்சு



சரத் பொன்சேகாவை கைது செய்யச்சென்ற இராணுவப் பொலிஸார் அவரை தாக்கவோ அல்லது அவருக்கு இடையூறு ஏற்படுத்தவோ இல்லையென்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் மோசமாக நடத்தப்பட்டதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை இராணுவப் பொலிஸ் பிரிவு முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இராணுவப் பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

சரத் பொன்சேகாவை கைது செய்யச் சென்ற அதிகாரிகள் அது பற்றி அவருக்கு எடுத்துக் கூறினர். ஆனால், அவர் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைக்கப் பிடிவாதமாக மறுத்ததால் அவருடைய மறுப்பையும் ஏனைய கருத்துக்களையும் பொருட்படுத்தாது அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை கடற்படைத் தலைமைய கத்தில் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான வதிவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை நேற்று முன்தினம் அவரது மனைவி அனோமா பொன்சேகாவும், அவரால் பிரேரிக்கப்பட்ட சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பார்வையிடச் சென்ற அவர்கள் சுமார் 3 மணித்தியாலங்கள் சந்திப்பு நடத்தினர்.

பொன்சேகா கேட்டுக் கொண்டதற்கமைய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்ப ட்டுள்ளது. இவ்வாறு தடுத்துவைக்கப்படும் ஒருவருக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உணவை மாத்திரமே சாப்பிட முடியும் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் சுகாதார நலன்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி என்ற விடயங்களை கருத்திற்கொண்டு அவர் விரும்பும் உணவை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது இராணுவப் பாதுகாப்பிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் பிரிவு 57 (1) கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.






உச்ச நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: குழப்பம் விளைவிக்க ஐ.தே.க., ஜே.வி.பி முயற்சி
கல்வீச்சில் 3 பொலிஸ் உட்பட ஐவர் காயம்; 12 வாகனங்கள் சேதம் கொழும்பு, புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயன்ற ஐ. தே. க., ஜே. வி. பி. ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அவர்கள் கற்களை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். சுலோகங்களை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு கற்களை எறிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடத்திய தாக்குதல்களில் பொலிஸார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சுக்களால் மூன்று பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் படுகாயமடைந்துள்ளதுடன் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். பொலிஸாரின் எட்டு வாகனங்களும், பொதுமக்களின் நான்கு வாகனங்களையுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் சேதப்படு த்தியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், நிலைமையை கட்டுப்படுத்த கண் ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யப் பட்டதாகக் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் வாழைத் தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இராணுவ சட்ட விதிமுறை களுக்கு அமைய இராணுவப் பொலி ஸாரால் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா வுக்கு ஆதரவு தெரி வித்தே நேற்று எதிர்க்கட்சி ஆதரவா ளர்கள் ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். நீதிமன்றம் என்பதை மறந்து ஆர்ப் பாட்டக்காரர்கள் அந்த இடத்தில் பெரும் அமளி துமளிகளை ஏற் படுத்தியுள்ளதுடன் கல்வீச்சுக்களை நடத்தியுள்ளனர். ஐ. தே. க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, டாக்டர் ஜயலத் ஜயவர்தன, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக களமிறங்கிய சிறி துங்க ஜயசூரிய உட்பட ஜே. வி. பி. ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்தச் சம்பவத்தை செய்தி சேகரிக்கச் சென்ற பல ஊடகவிய லாளர்கள் கல்வீச்சுக்குள்ளானார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து நீதிம ன்றத்தின் செயற்பாடுகளில் ஸ்தம் பிதநிலை காணப்பட்டதுடன் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரி வித்தார். எதிர்க்கட்சியின் இந்த செயற் பாட்டால் கொழும்பு புறக்கோட்டை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பெரும் வாகன நெரிசல் காணப்பட்டது. கல் வீச்சினால் காயப்பட்ட பொலிஸார் மற்றும் பொதுமக்கள் கொழும்பு தேசிய வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.


பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் மும்முரம்

ஆசனங்களை பகிர்வதில் தொடர்ந்தும் மந்திராலோசனை



ஏப்ரல் மாதம் எட்டாந்திகதி நடைபெற வுள்ள புதிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

பாராளுமன்றம் நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாதம் 19ம் திகதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் பிரகட னப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டிய ல்களைப் பூர்த்தி செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண மட்டத்தில் வேட்பாளர்களுக்கான நேர்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்யவுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி களுக்கு மாவட்ட மட்டத்தில் வேட்பாளர் களைப் பகிர்வது குறித்து, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் பிரேம் ஜயந்த், எவ்வாறெனினும் எதிர்வரும் 20ம் திகதிக்குள் வேட்பாளர்கள் நியமனப்பத் திரங்களில் கைச்சாத்திடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் அளவில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்க ளைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சகல கூட்டணிக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முடிவொன்று எட்டப்படுமென்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சகல மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிக ளிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கருத்து முரண்பாடு எழுந்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பால் போட்டியிடுவது பற்றிய தீர்மானம் எதனையும் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடு வதென ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் 9 பேர் தேர் தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும், இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இன்னும் ஆலோ சனை நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்க முடியாமல் அதன் உயர்மட்ட கலந்துரையாடலை நிறுத் தியுள்ளது.

ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித் துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பே இறுதி முடிவெடுக்க ப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

பாராளுமன்றம் கலைப்பு

பதின்மூன்றாவது பாராளுமன்ற த்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதியுடன் நிறைவ டைவதால், நேற்று முன்தினம் (09) நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பின் 70 (1) சரத்தின் 11 ம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி பாராளு மன்றத்தை கலைத்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்ப ட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஏப்ரல் எட்டாந்திகதி தேர்தல் நடைபெறு மென தேர்தல்கள் மேலதிக ஆணை யாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி பிதினகரனுக்பீகுத் தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் பிரகட னப்படுத்தப்பட்டுள்ளவாறு வேட் பாளர் நியமனப் பத்திரங்கள் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 ஆசனங் களைப் பெற்று வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங் களையும், தமிழ்த் தேசியயகூட்ட மைப்பு 22 ஆசனங்களையும் பெற்றி ருந்தன. ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களைப் பெற்ற அந்தத் தேர்தலில் 75% மக்கள் வாக்களித் திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பியுடன் இணைந்து 42 இலட்சத்து 23 ஆயிரத்து 970 வாக்கு களைப் பெற்று (45.60 சதவீத வாக் குகள்), ஐக்கிய தேசிய கட்சி 35 இலட்சத்து 04 ஆயிரத்து 200 வாக்குகளையும் (37.83% சதவீதம்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6,33,654 வாக்குகளையும், ஜாதிக ஹெல உறுமய 5,54,076 வாக்குக ளையும் பெற்றிருந்தன.

புதிய பாராளுமன்றம்

அடுத்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் எட்டாந்திகதி நடை பெறுவதுடன் ஏப்ரல் 22ம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும்.

புதிதாக அமையவிருப்பது 14 வது பாராளுமன்றம். என்றாலும் 1978ம் ஆண்டின் அரசியலமைப்பின்படி ஏழாவது பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்குத் தேர்தல் வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களும் போனஸ் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப் படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக