1 மார்ச், 2010

மேற்கு ஐரோப்பாவில் புயல்- 19 பேர் பலி

புயலில் சிக்கிய வீடொன்று - பிரான்ஸ்

புயலில் சிக்கிய வீடொன்று - பிரான்ஸ்
மேற்கு ஐரோப்பா ஊடாக தாக்கியுள்ள புயல்காற்றினால் ஏற்பட்ட சேதங்களில் சிக்கி குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினிலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை உயிரிழந்துள்ள பதினைந்து பேரில் பலர் நீரில் மூழ்கியும் சிலர் முறிந்து விழுந்த மரக்கிளைகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பைனில் கார் ஒன்று மரத்தில் மோதியதில் இருவர் பலியாகியுள்ளனர்.

பிரான்சில் மின்சார கம்பிகள் சேதமடைந்துள்ளதால் அங்கு மில்லியன் கணக்கானோர் மின்சாரமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாலும் ரயில்கள் தாமதமானதாலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக