8 ஜனவரி, 2010

பிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு

பிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரி வித்தார்.
பிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென் மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரி யான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை க்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரி கேடியர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக