14 அக்டோபர், 2009

சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமும் இன்றுடன் மூடப்பட்டது



வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமும் இன்றுடன் மூடப்பட்டுள்ளது.

இறுதியாக இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 06 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரில் 17 பேரும் இன்று விடுவிக்கப்பட்டு அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று பேரும் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த127 குடும்பங்ளைக் கொண்ட 367 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக்குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலய முகாம் கடந்த வாரம் மூடப்பட்டு விட்டது.

இருப்பினும் சிங்கள மகாவித்தியாலய இடைத் தங்கல் முகாமில் தொடர்ந்தும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .குறித்த முகாமும் இன்றுடன் மூடப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக