26 அக்டோபர், 2009

இந்தோனெஷியாவில் இலங்கையர்களின் உண்ணாவிரதம் முடிவு

வடக்கின் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு இந்திய நிபுணர் குழு ஒத்துழைப்பு










வடபகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த இந்திய நிபுணர்கள் குழுவினை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விரைவில் மீள் குடியேற்றும் நோக்கில் இந்தியா இந்த உதவிகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசியல் தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையில் புதுடெல்லியில் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

படகு மூலம் சட்ட விரோதமாக செல்ல முற்பட்டு, தற்போது கரையோர பாதுகாப்பு படையினரால் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தமது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.

78 இலங்கையர்கள் அடங்கிய அவுஸ்திரேலிய கப்பல் இன்று பிற்பகலில் இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியை சென்றடையுமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவர் என அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பிரிண்டன் கோனர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக