24 செப்டம்பர், 2009

முகாமிலிருந்து ஒரு சிறு தொகையினர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்




வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திறகு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் ஒரு சிறு தொகையினர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் இடைத் தங்கல் முகாமில் தங்கியிருந்த 45 குடும்பங்களில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும் ,

அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த 42 குடும்பங்களில் பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் இன்று விடுவிக்கப்பட்டு பிரதேச செயலக அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு இராணுவ பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

அதிகாரிகளின் தகவல்களின் படி கட்டம் கட்டமாக இக் குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிய வருகின்றது.

கடந்த 11 ம் திகதி வவுனியா இடை தங்கல் முகாமிலிருந்து மூன்றாவது தொகுதியாக விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணததைச் சேர்ந்த குடும்பங்களில் மட்டக்களப்பு மாவட்டததைச் சேர்ந்த 123 குடும்பங்களைக் கொண்ட 365 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர் .

இவர்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேர் சிங்கள மகா வித்தியாலயத்திலும் ,45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் குருக்கள் மட்ம் கலைவானி வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்

அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேரும் அக்கரைப்பற்றிலுள்ள இடை த்ஙகல் முகாமொன்றில் தங்க வைக்கப்டப்டிருந்தனர்.

கடந்த 13 நாட்களாக இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்களுக்கு பாதுகாப்பு தரப்பினரால் விபரங்களை பதிவு செய்தல் ,சில படிவங்களைப் +ர்த்தி செய்தல் ஆகியனவே காரணம் என அப்போது அதிகாரிகளினாலும் ,பாதுகாப்பு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக