28 செப்டம்பர், 2009

நாளையும் மறுதினமும் தபால் மூல வாக்களிப்பு -31,151 பேர் வாக்களிக்க தகுதி



தென் மாகாண சபைக்கான தேர்தல் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், 30 ஆம் திகதி புதன்கிழமையும் இடம்பெறவிருக்கின்றது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 38 ஆயிரத்து 394 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் மூன்று மாவட்டங்களிலிருந்தும் 31 ஆயிரத்து 151 பேரே தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றோர் இருதினங்களுக்குள் வாக்களித்துவிடவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அரசாங்க ஊழியர்கள் தத்தமது காரியாலயங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிக்கலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக