31 ஆகஸ்ட், 2009

யாழில் சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை-


இவ்வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தின் சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள 17சபைகளில், யாழ். மாநகரசபைக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அடுத்துள்ள 03 நகரசபைகளான வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி என்பவற்றிற்கும் 13 பிரதேச சபைகளுக்கும் விரைவான ஒரு தேர்தலை நடத்துமாறு கேட்டுள்ளேன். ஏனெனில் அந்தமக்கள் தாங்களாகவே அந்த பிரதேசசபைகளை ஆளவேண்டுமென்று விரும்புகின்றனர். அதன் ஊடாகவே விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் என்றும் அவர்கள் கோருகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக