23 ஜூன், 2011

அரசு - த. தே. கூ . இன்று பேச்சு

அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்ப டையில் பேச்சுக்களைத் தொடர்வ தாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும் தென்பட வில்லை யென்றும் இன்றைய பேச்சுவார்த்தை அதற் கான களத்தை உருவாக்குமென்றும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதற்காகப் பாராளுமன்றத் தேர்வுக் குழுவொன்றை அமைப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகுமென்பதே கூட்டமைப்பின் தற்போதைய கருத்தாகுமென்று தெரிவித்த அவர் அது பற்றி இன்னமும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லையென்றும் அறிவிக்கும் போது அதுபற்றிச் சிந்திக்கலாமென்றும் கூறினார்.அதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஒரு போதும் கூறவில்லை என்று வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தீர்வொன்றை எட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். இதனையே சம்பந்தன் எம்.பி. தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சூரிய சக்தி இன்று விமானங்களையும் இயங்கச் செய்கிறது

சூரிய சக்தி மூலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 ஆம் திகதி ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த விமானம் தனது பயணத்தை சுவிற்சர்லாந்தின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேலாக 12,400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

200 அடி நீளமான இந்த விமானத்தில் 12,000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்தியைக் கொண்டு இந்த விமானம் 26 மணித்தியாலங்கள் பறக்கும் வல்லமை கொண்டது.

இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 50றிசீ/கீ இதனது வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானம் சுவிற்சர்லாந்தின் தயாரிப்பு என்பதுடன் இதற்காக 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

சூரிய சக்தியின் மூலம் இயக்கப்படும் இவ்விமானம் சுற்றாடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. அத்துடன் இன்னும் பல நூற்றாண்டுகளில் எண்ணெய் கிணறுகள் வற்றிவிடும் அபாயம் தோன்றுவதனால் எதிர்காலத்தில் சூரிய சக்தியின் மூலமான விமானத்தின் தேவை தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறதெனலாம். அதற்கான ஒரு முன்மாதிரியே இந்த சூரிய சக்தி விமானமாகுமென சுவிற்சர்லாந்தின் தயாரிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய உறவில் தமிழக அரசு தலையிட முடியாது

இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் தமிழக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் என குறிப்பிட்ட அமைச்சர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழக முதல மைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்ற போது தாம் இலங்கை அரசின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மா நாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் மத்திய அரசாங்கத் துடனேயே முக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதுபற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ் நாட்டுக்கு க்கிடையாது. தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடன் இலங்கை சம்பந்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம். அதில் எவ்வித பிரச்சினையுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் துறைக்கு நிகரானதாக இ. போ. சபை தரமுயர்த்தப்படும்


இலங்கை போக்குவரத்து சபை தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையை விட, தரமான சேவையை வழங்கும் நிறுவனமாகவும் தனியார் போக்குவரத்துடன் போட்டியிடக்கூடிய வகையில் எதிர்காலத்தில் புதிய நடைமுறைகள் வகுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கை போக்குவரத்து சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் கடந்த கால ஆட்சியில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்தும் இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை பாதுகாத்தல், பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான, அதனுடன் தொடர்புடைய நிர்வாகத்தினருக்கும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். இந்தச் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரத்னாயக்க, பிரதி அமைச்சர் ரோஹண குமார திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிக் கட்டத்தில் தமிழர்களை புலிகள் சுட்டுக் கொன்றனர் தமிழர்கள் புலிகளால் பணயம் வைப்பு

அமைதியை ஏற்படுத்தியதற்கு தமிழ் மக்கள் பாராட்டு

‘கார்டியன்’ கட்டுரைக்கு இலண்டனில்
வசிக்கும் இலங்கைத் தமிழர் பதிலடி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ தமிழ் மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தியதாகவும் பிரிட்டனில் வாழும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட எஸ். வாசுதேவன் என்பவர் அங்கிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கார்டியன் பத்திரிகை இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவம் யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அண்மையில் விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக எஸ். வாசுதேவன் என்பவர் அந்த பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

‘உங்களது பத்திரிகையில் கடந்த 13.06.2011ஆம் திகதியில் பிரசுரித்திருந்த கட்டுரைக்கு அதிருப்தி அடைந்தே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்த கட்டுரையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கிறேன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் நான் இலங்கைக்கு நான்கு முறை சென்றுள்ளேன். அதன்போது யுத்தத்துக்கு முகம் கொடுத்த பலருடன் கலந்துரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர்களின் கருத்துக்கு முற்றும் முரணான செய்தியே உங்களது பத்திரிகையிலிருந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

நான் சந்தித்த மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தப்பி வந்தவர்களாவர். அவர்களை இலங்கை இராணுவம் தியாகத்துடன் இன்னும் பாராமரித்து வருகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது தியாகத்தால் 6,000 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதில் எல்.ரி.ரி.ஈ யினால் தமிழ் மக்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.

மேற்படி கட்டுரையில் கூறப்பட்டிருந்த 40 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்தனர் என்ற தகவல் தவறானது என்பதை குறிப்பிடுகின்றேன். இது பிரிட்டன் தமிழ் போரம் அழைப்பினால் வெளியிடப் பட்டது. இது குறித்து நீங்கள் உண்மையான விசாரணை செய்வதாக இருந்தால் 2009ம் ஆண்டு காயமடைந்தோர் பற்றிய தகவலை பெற்றிருக்க வேண்டும்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது யுத்த சூன்ய பிரதேசத்திற்குள் எல்.ரி.ரி.ஈ தனது கனரக ஆயுதங்களுடன் போரிட்டது. இந்த பகுதிக்குள் அவர்கள் தமது கனரக ஆயுதங்களை கொண்டுவந்தது மட்டுமல்லாது மருத்துவமனை வளாகத்திற் குள்ளும் ஆயுதங்களை கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையால் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களையே யூடியூப் இணையத்தளத்தில் உங்களால் காண முடிகிறது. இதனை தமிழர்களும் உறுதிப்படுத்துவார்கள். எல்.ரி.ரி.ஈ அப்பாவி தமிழ் மக்களை கொன்றது மட்டுமல்லாது அவர்களது உடைமைகளையும் கொள்ளையிட்டனர்.

எல்.ரி.ரி.ஈக்கு சமாதான வழியில் அரசியல் தீர்வை பெற பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் புறக்கணித்தனர். இதனால் எல்.ரி.ரி.ஈயை முடிவுக்கு கொண்டு வருவதை விட இலங்கை அரசுக்கு வேறு வழி இல்லாமல் போனது. ஆம், எல்.ரி.ரி.ஈக்கு எதிராக இலங்கை அரசு கடுமையான யுத்தத்தை முன்னெடுத்தது. ஆனால் அவர்கள் இப்போது இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். இலங்கை அரசு யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இதன் மூலம் நல்ல தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை தமிழ் மக்கள் ஏனைய மக்களுடன் இணைந்து இலங்கையில் அமைதியாக வாழ்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனவே, பழைய கசப்பான சம்பவங்களை கிளரி அமைதியை குலைக்க வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.வாசுதேவன் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

22 ஜூன், 2011

பான் கீ மூன்: உறுதியற்ற நிலைப்பாடு




இலங்கையைப் பொறுத்தவரை ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஒரு உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார் என்று மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய இயக்குனரான பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் தலைமைச் செயலராக பான் கீ மூன் அவர்கள் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார் என்று பல மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

இது குறித்துக் கருத்துக் கூறுகையிலேயே பிராட் அடம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் செயற்பாடு ஒரு கலவையான விஷயம், என்று கூறிய பிராட் அடம்ஸ் அவர்கள், '' பர்மா விஷயத்தில் அவர் நிறைய அறிக்கைகளை விட்டார். ஆனால் பர்மிய அரசுக்கு எதிராக செயல்படுவதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். அவருக்கு ஒரு கோர்வையான திட்டம், யுக்தி இல்லை. சீனாவைப் பொறுத்த வரை கடந்த இரு தசாப்த காலத்தில் நடந்த மிகவும் மோசமான ஒடுக்குமுறையின் போது அவர் அமைதி காத்தார்'' என்று கூறியுள்ளார்.

இலங்கை நிலைமை குறித்தும் அவர் தமிழோசையுடன் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

''இலங்கையைப் பொறுத்தவரை அவர் மிகவும் உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார். போர் முடிந்த பின், இலங்கைக்கு சென்று, மஹிந்த ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்களும் மற்றவர்களும் தந்த நல்ல அறிவுரையை மீறி,அங்கே சென்றார். மஹிந்த ராஜபக்ஷ, தனது அரசுக்கு நம்பகத்தன்மையைப் பெற அந்த விஜயத்தைப் பயன்படுத்திக் கொண்டார்'' என்றார் பிராட் அடம்ஸ்.

இலங்கையில் போர் தொடர்பான பிரச்சினைகள் பற்றி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பு சுமத்தும் வழிமுறை உருவாக்கப்படும் என்று மஹிந்த கொடுத்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு சரியான முடிவெடுப்பதில் பான் கீ மூன் தவறிழைத்துவிட்டார் என்றும் பிராட் அடம்ஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க விசா நடைமுறைகளில் மாற்றம்

இலங்கையுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியம், இலங்கை மக்கள் தமது நாட்டுக்கு விஜயம் செய்வதையும் அங்கு கல்வியைத் தொடர்வதையும் பெரிதும் விரும்புகின்றது. இருந்தபோதிலும், சட்ட ரீதியற்ற முறையில் நாட்டுக்குள் நுழைவதையும் சட்டரீதியற்ற குடியேற்றத்தையும் தவிர்க்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளதோடு அவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்காக பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் தெரிவித்தார்.

இதன்பொருட்டு மாணவர் விசாக்கள் மற்றும் குறுங்கால விஜயத்திற்கான விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ள அதேநேரம், வதிவிட விசா வழங்குவதற்கான நடைமுறைகளையும் அடுத்த வருடம் முதல் திருத்தியமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான குடிவரவு நடைமுறைகள், விசா வழங்கல் நடவடிக்கைககள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு விளக்கமளிக்கும் போதே பிரதி தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையும் பிரித்தானியாவும் நீண்ட கால பொருளாதார, காலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்ட நாடுகளாகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றது. இந்நாடுகளுக்கிடையில் பயணம் செய்யும் நடவடிக்கை இப்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

முதலாவது இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன. இதனால் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமன்றி, இந்நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமுள்ளது.

இரண்டாவது, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சி நிலை இப்போது சீரடைந்து விட்டது. இதன் காரணமாக எதிர்விளைவுகளைச் சந்தித்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரமும் மீட்சியடைந்து, மீளவும் முன்னேறிச் செல்கின்றது. இதனால் வர்த்தக முயற்சிகளை முன்கொண்டு செல்லும் நோக்கிலும், வேறு நோக்கங்களுக்காகவும் பிரித்தானியாவுக்கு சென்று வருவோரின் தொகை அதிகரித்துச் செல்கின்றது.

எனவே இவ்வாறான ஒரு காலகட்டத்தில், நல்ல நோக்கங்களுக்காக பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புகின்ற அனைவராலும் நேர்மையான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்ற விசா விண்ணப்பங்களை நாம் வரவேற்கின்றோம். ஆனால், போலியான அல்லது குடிவரவு சட்டங்களுக்கு புறம்பான விண்ணப்பங்கள் குறித்து இறுக்கமான சட்ட நடைமுறைகளை கையாள வேண்டியுள்ளது. இதற்காக குடிவரவு கொள்கைகள் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து பெருமளவானோர் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்; செல்கின்றனர். இப்போது சட்டரீதயிக்ஷிக அங்கு 2 இலட்சம் இலங்கையர் வாழ்கின்றனர். கடந்த வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களில் 70 வீதமானவற்றுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 20 ஆயிரம் பேர் விசாவினைப் பெற்றுள்ளனர். இவர்களுள் 8000 பேர் குறுங்கால விஜய (விசிட்) விசாவையும் 7000 பேர் மாணவர்களுக்கான விசாவையும் பெற்றுள்ளனர்.

சாதாரணமாக 15 நாட்களுக்குள் விசா வழங்கப்படுகின்றது. அது நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதற்கான காரணம் தெளிவாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படுகின்றது. விசா ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து நடைமுறை தொடர்பிலும் எமது இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். இதற்கென ஆலோசனை முகவர்களின் உதவி அத்தியாவசியமற்றது என்றே கருதுகின்றேன் என்றார்.

ஐக்கிய இராச்சியத்தின் கரையோர கண்காணிப்பு முகவரகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ் உக்பா விளக்கமளித்து உரையாற்றுகையில்,

தவிர்க்கமுடியாத பல்வேறு காரணங்களினால் பிரித்தானியா தனது குடிவரவு சட்ட விதிகளை இறுக்கமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத குவியேற்றத்தை தடுப்பதும் சட்டத்திற்கு முரணாக நாட்டில் தங்கியிருத்தலை கட்டுப்படுத்துவதுமே இப்புதிய நடைமுறைகளின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக உலக நாடுகளின் அரசங்கங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

பிரித்தானியாவில் உயர்தரம் வாய்ந்த கல்வியகங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் பலர் நேர்மையாக கல்வி நடவடிக்கைகளை தொடர்கின்றனர். ஆனால், இதனை சில உள்நாட்டு விண்ணப்பதாரிகளும் ஏன் குறைந்த தரத்திலான ஒரு சில பிரித்தானிய கல்வியகங்களும் துஷ்பிரயோகம் செய்கின்றமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் பிறந்த 2 இலட்சம் பேர் பிரித்தானியாவில் சட்டரீதியாக வசிக்கின்றனர் என்றாலும் சட்டத்திற்கு முரணாக எத்தனைபேர் அங்குள்ளனர் என்பது குறித்த மிகச் சரியான தரவுகள் எம்மிடம் இல்லை. நிச்சயமாக அத்தொகை மேற்குறிப்பிட்டதை விட கணிசமானளவு அதிகமாகவே இருக்கும். அவர்களுள் 26 பேரே அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையில் இருந்து விசாவுக்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுள் மாதத்திற்கு 200 விண்ணப்பங்கள் போலியான ஆவணங்களுடன் மோசடியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்படியாயின் நாளொன்றுக்கு சராசரியாக இவ்வாறான 10 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

பிரித்தானியாவுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 30ஆயிரம் பேர் குடிபெயர்ந்து வந்துள்ளனர். இலட்சக் கணக்கில் உள்ள குடியேற்றவாசிகளின் தொகையை ஆயிரக்கணக்காக குறைப்பதற்கு எமது அரசாங்கம் விரும்புகின்றது.

இதற்கமைய கொண்டுவரப்படும் புதிய விதிமுறைகளின் படி, கல்வியைத் தொடர்வதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், கூடியபட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதற்கும் கல்வி கற்கவும் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பியாக வேண்டும். அவர் மீண்டும் பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பின், அவர் விசாவுக்காக விண்ணப்பிக்கும் போது அவருக்கு இன்னுமொரு விசா வழங்குவதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும். காலாநிதி போன்ற பட்டப் படிப்புகளை தொடரும் குறிப்பிட்ட சில தரப்பினருக்கு இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனினும் பொதுவாக இவ்விதி கடைப்பிடிக்கப்படும்.

பிரித்தானியாவில் கல்வியைத் தொடர விரும்பும் விண்ணப்பதாரி, பிரித்தனிய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றால் மட்டுமே பகுதிநேரமாக தொழில்புரிவதற்கு அனுமதிக்கப்படுவர். அங்கீகரிக்கப்படாத, தனியார் கல்வியகங்களில் கற்கைகளுக்காக பதிவு செய்யும் எவருக்கும் வேலை செய்வதற்கான அனுமதி கிடைக்காது.

இவ் விதி புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கே செல்லுபடியாகும். எவ்வாறிருந்த போதும், அவர்கள் இதற்குப்பிறகு வேறொரு கற்கை நெறிக்கு பதிவு செய்ய முற்படுகின்றபோதோ அல்லது தமது விசா காலத்தை புதுப்பிக்க முனையும் போதோ இப்புதிய நடைமுறைக்கு உள்வாங்கப்படுவர்.

அத்துடன் , பிரித்தானியாவில் பட்டப்படிப்பு ஒன்றை பூர்த்தி செய்யும் ஒருவர், தமது தகுதிக்கமைய தொழில் செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை முறையாக பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இரு வருடங்கள் தொழில்நிமித்தம் தங்கியிருக்க அனுமதி கிடைக்கும்.

அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவினை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள மிக முக்கிய கம்பனிகளின் அதிகாரிகளுக்காக எக்ஸ்பிரஸ் சேர்விஸ் எனப்படும் விஷேட விசா நடைமுறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அது மட்டுமன்றி, சிலர் என்னென்ன காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்பது எமக்குத் தெரியும். எனவே, மிகவும் சிறந்த, நேர்மையான பிரஜைகளுக்கு மட்டுமே வதிவிட விசாவை வழங்கும் வகையில் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் குடிவரவு விதிகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானித்துள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

2020 க்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுவிடும்: தினேஷ்

வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக இதுவரையில் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எதிர்வரும 2020 ஆம் ஆண்டுக்குள் மேற்படி மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள சகல கண்ணிவெடிகள் மற்றும் மிதி வெடிகளும் அகற்றப்பட்டு விடும் என்று அரசாங்கம் நேற்று சபையில் அறிவித்தது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப. ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கையின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார் .

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்புக்கள், எஞ்சியுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு எடுக்கும் காலப்பகுதி ஆகியவை தொடர்பிலேயே ரவி கருணாநாயக்க எம்.பி.கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் பதிலளிக்கையில், சுவிற்சர்லாந்து, டென்மார்க், பிரிட்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் படி 258.51 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு சுவிற்சர்லாந்துக்கும் 1336.29 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு டென்மார்க்கிற்கும் 650.59 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கு 1273.90 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2002 முதல் இன்று வரையில் மேற்படி நான்கு நாடுகளும் நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தரப்பினாலும் 5594.89 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புகளில் கண்ணிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கென இதுவரையில் 149 கோடியே 28 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, சீனா,அவுஸ்திரேலியா, யு.என்.எச்.சி.ஆர். ஐ.ஓ.எம். மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவை கண்ணிவெடிகள் மிதிவெடிகளை அகற்றுவதற்கான உபகரணங்களை வழங்கியுள்ள அதேவேளை யுனிசெப் மற்றும் அமெரிக்கா ஆகியன 65 வாகனங்களையும் வழங்கியுள்ளன.

மேற்படி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் வடக்கு கிழக்கில் கண்ணிவெடி, மிதிவெடிகளை அகற்றுவதற்காக அதிகமான நன்கொடைகளையும் வழங்கியுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அனைத்தும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் முற்றாக அகற்றப்பட்டுவிடும். இந்த இலக்கினை கொண்டே அரசு செயற்பட்டுவருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த இலக்கினை எட்டுவதற்கு அரசு எதிர்பார்க்கிறது. கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்றது என்றார்
மேலும் இங்கே தொடர்க...

ஆணுறையில் மறைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : இலங்கை வாலிபர் கைது

கொழும்பில் இருந்து விமானத்தில் திருச்சி சென்ற இலங்கை வாலிபர் ஆணுறையில் தங்கக் கட்டிகளை கடத்தியதால் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற விமானத்தில் பயணி ஒருவர் தங்க பிஸ்கட்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, திருச்சி விமான நிலையங்களில் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர்.

கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையம் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், இலங்கையைச் சேர்ந்த வாலிபர் முகமது நஜிமுன் என்ற பயணியை ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் சந்தேகப்படும்படியான பொருள் இருந்தது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து டாக்டர்கள் மூலம் உள்ளே இருந்த பொருளை வெளியே எடுத்தனர். ஆணுறைக்குள், 12 தங்க பிஸ்கட் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரித்தனர். நேற்று அவரை கைது செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29ஆவது இடம்

மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 29ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் பொரின் பொலிஸி (வெளிவிவகாரக் கொள்கை) எனும் சஞ்சிகையினால் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும் சூடான் 3ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கையின் அயல் நாடுகளில் பாகிஸ்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 12ஆவது இடத்தில் உள்ளது. மியன்மார் 18ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 25ஆவது இடத்திலும் நேபாளம் 27ஆவது இடத்திலும் உள்ளன.

60 நாடுகளைக் கொண்ட இப்பட்டியலில் பூட்டான் 50 ஆவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் உள்ள நாடுகளில் பெரும்பாலானவை ஆபிரிக்க நாடுகளாகும்.

இலங்கை தொடர்பான குறிப்பில் 2010 ஆண்டின் சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையின் படி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கை பொதுமக்கள் மீது எறிகணைகள் வீசுவதிலும் ஏனைய அக்கிரமங்களிலும் தங்கியிருந்தது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் கடைசியாக வெளியான புள்ளிவிபரங்களின் படி 327,000 பேரில் சிலர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க பிளவுகள் இன்னும் நிலவுகின்ற போதிலும் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கம் கடந்த காலத்தை மறக்க ஆர்வம் கொண்டிருப்பதாக தோன்றுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...