வேண்
23 ஜூலை, 2010
போராட்டத்தைக் கைவிட்ட மாற்று இயக்க உறுப்பினர்களுக்கும்
வேண்
நியாயமான அகதிகளை ஆஸி, ஏற்க வேண்டும் : ஐநா பிரதிநிதி
நியாயமான அ
கதிகளை அவுஸ்திரேலியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவையின் பிராந்திய பிரதிநிதி ரிச்சர்ட் டவல் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியாயமான அகதிகள் என ஐக்கிய நாடுகள் சபையினால உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவுஸ்திரேலியா அவர்களுக்கான அகதி அந்தஸ்த்தை வழங்காமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான பாதுகாப்பு விசா வழங்கும் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவில் கணிசமாக குறைவடைந்துள்ளதாக ரிச்சட் டவல் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனினும் அவர்களுக்கான பாதுகாப்பு விசாக்களை வழங்குவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்னிற்பது ஏன் எனவும் அவர் விளக்கம் கோரியுள்ளார்.
நியாயமான அகதிகள் என ஐக்கிய நாடுகள் சபையினால உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவுஸ்திரேலியா அவர்களுக்கான அகதி அந்தஸ்த்தை வழங்காமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகளுக்கான பாதுகாப்பு விசா வழங்கும் நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவில் கணிசமாக குறைவடைந்துள்ளதாக ரிச்சட் டவல் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவின் அகதிகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனினும் அவர்களுக்கான பாதுகாப்பு விசாக்களை வழங்குவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்னிற்பது ஏன் எனவும் அவர் விளக்கம் கோரியுள்ளார்.
தென்கொரிய போர்க்கப்பல் இலங்கைக்கு நல்லிணக்க விஜயம்
தென்கொரியாவிற்கு
ச் சொந்தமான கடற்படை போர்க்கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கை வந்துள்ள வாங் ஜியோன் என்ற இந்தக் கப்பல் மூன்று நாட்கள் இங்கு தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் கப்பல் வந்துள்ளதாக கொரியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் இந்தியா,பங்களாதேஷ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சொந்தமான போர்க்கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் கப்பல் வந்துள்ளதாக கொரியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் இந்தியா,பங்களாதேஷ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சொந்தமான போர்க்கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் போர் மூளும்
மும்பை தாக்குதல் போன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் ராணுவக் கூட்டுப் பணிகள் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் புதன்கிழமை கூறியதாவது:
மும்பை தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சிறிய பயங்கரவாதிகள் குழுதான் நடத்தியது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுவிடும் அளவுக்கு அதன் விளைவுகள் இருந்தன.
இரு நாடுகளிடையே போர் ஏற்படாவிட்டாலும், போர் ஏற்படும் அளவுக்கு பயங்கரவாதத் தாக்குதல் பயங்கரமாக அமைந்திருந்தது.
இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அது இந்தியா-பாகிஸ்தான் போர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுபோன்று நடக்காதிருக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்றார் அவர்
இரட்டைக் குழந்தைகளுடன் தாய் உருக்கமான சந்திப்பு
ஆஸ்திரேலியாவில் அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை பெண் குழந்தைகளை அவர்களின் தாய், 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தார்.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மாலிக் (24). இவருக்கு தலை ஒட்டிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவரது வறுமையை அறிந்த ஆஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனம், 3 வயதான அந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்தன. கடந்த டிசம்பரில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 32 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை அளிக்கப்படும் அந்தக் குழந்தைகளை அவர்களின் தாய் லவ்லி மாலிக், இந்த மாத தொடக்கத்தில் சந்தித்துள்ளார்.
டாக்காவிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் வந்த அவர், இரு குழந்தைகளையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருப்பார்கள் என்றும், அவர்கள் வங்கதேசம் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்களின் தாய் லவ்லி மாலிக் தெரிவித்தார்.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர் மாலிக் (24). இவருக்கு தலை ஒட்டிய இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவரது வறுமையை அறிந்த ஆஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனம், 3 வயதான அந்தக் குழந்தைகளைத் தத்தெடுத்தன. கடந்த டிசம்பரில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 32 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை அளிக்கப்படும் அந்தக் குழந்தைகளை அவர்களின் தாய் லவ்லி மாலிக், இந்த மாத தொடக்கத்தில் சந்தித்துள்ளார்.
டாக்காவிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் வந்த அவர், இரு குழந்தைகளையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருப்பார்கள் என்றும், அவர்கள் வங்கதேசம் திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்களின் தாய் லவ்லி மாலிக் தெரிவித்தார்.
17ஆவது திருத்தம் தொடர்பில் ஐ.தே.க., ஐ.ம.சு.மு. பேச்சு
அரசியல் யாப்பின் 17ஆவது திருத் தத்தை அமுல் செய்வது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழு ஒன்று நேற்று வெளிவிவகார அமைச்சர் பேரா சிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவர்த்தை நடத்தியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
17வது திருத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்த யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி தூதுக்குழுவினர் அமைச்சர் பீரிஸை சந்தித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசம் கோரியிருந்ததால் அவை பற்றி பேசவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று திரு. மைக்கேல் பெரேரா மேலும் தெரிவித்தார்.
17வது திருத்தித்திற்கான அரசியல்யாப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகள் அமைச்சர் டியு?? குணசேகர தலைமையிலான குழுவொன்று பரிசீலனை செய்து வருகிறது. நாட்டின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல்யாப்பின் 17வது திருத்தத்தை அமுல் செய்வது அவசியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதராக ஜனநாயக தேசிய முன்னணி சட்ட சடவடிக்கை
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது தினமாக பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆனுமதி மறுக்கப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்த செயலாகும் என்று கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறது.
ஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் உட்பட பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை மீறி அவர் நேற்றும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முரளி 800வது விக்கட்டை கைப்பற்றி சாதனை
இலங்கை சுழற்பந்து வீச்சு வீரர் முத்தையா முரளிதரன் காலியில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான நேற்று அவரது 800வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் 800 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாது வீரர் முரளி ஆவார். முரளி டெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது
17வது திருத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்த யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சி தூதுக்குழுவினர் அமைச்சர் பீரிஸை சந்தித்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசம் கோரியிருந்ததால் அவை பற்றி பேசவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று திரு. மைக்கேல் பெரேரா மேலும் தெரிவித்தார்.
17வது திருத்தித்திற்கான அரசியல்யாப்பு மாற்றங்கள் தொடர்பான யோசனைகள் அமைச்சர் டியு?? குணசேகர தலைமையிலான குழுவொன்று பரிசீலனை செய்து வருகிறது. நாட்டின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசியல்யாப்பின் 17வது திருத்தத்தை அமுல் செய்வது அவசியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதராக ஜனநாயக தேசிய முன்னணி சட்ட சடவடிக்கை
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது தினமாக பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆனுமதி மறுக்கப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்த செயலாகும் என்று கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறது.
ஜெனரல் பொன்சேகா பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் உட்பட பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை மீறி அவர் நேற்றும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டார் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முரளி 800வது விக்கட்டை கைப்பற்றி சாதனை
இலங்கை சுழற்பந்து வீச்சு வீரர் முத்தையா முரளிதரன் காலியில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான நேற்று அவரது 800வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் 800 விக்கட்டுகளை கைப்பற்றிய முதலாது வீரர் முரளி ஆவார். முரளி டெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது
இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதுவர் தெரிவித்த கருத்து குறித்து சீற்றம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக கொண்ட பலஸ்தீன இலங்கை நட்புறவுச் சங்கம், இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் இளைப்பாறிய இராணுவ அதிகாரி டொனால்ட் பெரேரா இஸ் ரேலை ஆதரித்துத் தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீற்றம் அடைந்துள்ளது. பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் இஸ்ரேல் அவர்கள் மீது போர் தொடுக்க வேண்டும் என்று டொனால்ட் பெரேரா ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்தின் இணை தலைவரும் அரசாங்க அமைச்சருமான அதாவுட செனிவிரத்ன இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தூதுவர் பெரேரா என்னதான் சொன்னாலும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு ஆதரவானது என்றும் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு ஊக்குவிப்பதே என்றும் தெரிவித்தார்.
எவராலும் அறிக்கைவிட முடியும் ஆனால் இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு நாங்கள் பலஸ்தீனர்களின் அனுதாபிகள் என்பதே என்றும் அமைச்சர் செனிவிரத்ன மேலும் தெரிவித்தார்.
இமிதியாஸ் பார்கீர் மார்கார் எச்சரிக்கை இதற்கிடையில், நட்புறவுச் சங்கத்தின் மற்றுமொரு இணை தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான இமிதியாஸ் பாக்கீர் மார்கார் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் பெரேரா தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்திற்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இத்தகைய பொறுப்பற்ற கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்த தூதுவர் பெரேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமிதியாஸ் கேட்டுக் கொண்டார்.
இஸரேலே இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு போர்ப்பயிற்சி அளித்து உதவிய இஸ்ரேல், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகøளை தோற்கடிக்கவும் உதவியது என்று ஒரு எழுத்தாளர் எழுதியதை சுட்டிக்காட்டிய இமிதியாஸ், தற்போது இலங்கை இராணுவத்தில் பொறுப்பான பதவி வகித்த பெரேரா இஸ்ரேலை ஆதரித்து பேசுவதையும் ஒப்பிட்டுக் காட்டினார். பலஸ்தீனர்களுக்கு விடுதலை தேவை, இந்த நிலைப்பாட்டை இலங்கை ஆதரிக்கிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்டதால் அந்த நாடு பலஸ்தீனர்கள் மீது தொடுத்துள்ள யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்றில்லை எனக் குறிப்பிட்ட இமிதியாஸ் இத்தகைய அறிக்கைகள் விடப்படுவது தொடருமானால் இலங்கை இஸ்லாமிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்ப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்
பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்தின் இணை தலைவரும் அரசாங்க அமைச்சருமான அதாவுட செனிவிரத்ன இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், தூதுவர் பெரேரா என்னதான் சொன்னாலும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு ஆதரவானது என்றும் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு ஊக்குவிப்பதே என்றும் தெரிவித்தார்.
எவராலும் அறிக்கைவிட முடியும் ஆனால் இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு நாங்கள் பலஸ்தீனர்களின் அனுதாபிகள் என்பதே என்றும் அமைச்சர் செனிவிரத்ன மேலும் தெரிவித்தார்.
இமிதியாஸ் பார்கீர் மார்கார் எச்சரிக்கை இதற்கிடையில், நட்புறவுச் சங்கத்தின் மற்றுமொரு இணை தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான இமிதியாஸ் பாக்கீர் மார்கார் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் பெரேரா தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்திற்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இத்தகைய பொறுப்பற்ற கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்த தூதுவர் பெரேரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இமிதியாஸ் கேட்டுக் கொண்டார்.
இஸரேலே இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு போர்ப்பயிற்சி அளித்து உதவிய இஸ்ரேல், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகøளை தோற்கடிக்கவும் உதவியது என்று ஒரு எழுத்தாளர் எழுதியதை சுட்டிக்காட்டிய இமிதியாஸ், தற்போது இலங்கை இராணுவத்தில் பொறுப்பான பதவி வகித்த பெரேரா இஸ்ரேலை ஆதரித்து பேசுவதையும் ஒப்பிட்டுக் காட்டினார். பலஸ்தீனர்களுக்கு விடுதலை தேவை, இந்த நிலைப்பாட்டை இலங்கை ஆதரிக்கிறது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்டதால் அந்த நாடு பலஸ்தீனர்கள் மீது தொடுத்துள்ள யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்றில்லை எனக் குறிப்பிட்ட இமிதியாஸ் இத்தகைய அறிக்கைகள் விடப்படுவது தொடருமானால் இலங்கை இஸ்லாமிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்ப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்
கட்டணங்களை குறைக்காவிடின் வேலைநிறுத்தப்போராட்டம்-தனியார் பஸ் சங்கம்
மேல் மாகாண தனியார் பஸ் சேவையாளர்களுக்கான குறுந்தூர போக்குவரத்துக் கட்டணம், பயணிகளுக்கான சேவைக் கட்டணம், போக்குவரத்து அனுமதிக் கட்டணம் போன்ற பல்வேறு கட்ட ணங்களை மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை அதிகரித் துள்ளது. அவ்வதிகரிப்பினை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் குறைக்காவிடின் மேல் மாகாணத்தில் தாம் வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையார்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஒழுங்கான நேர அட்டவணையின்மையினால் போக்குவரத்து சேவையில் பாரிய சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆகையினால் உரிய முறையிலான நேர அட்டவணையினையும் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் அந்தச் சங்கத்தின் தøலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பானது தனியார் பஸ் உரிமையாளர்களை பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆகையினாலேயே அதனை உடனடியாக குறைக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக் எமக்கு விருப்பமில்லை. இருந்த போதிலும் எமது பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கா விட்டால் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதை தவிர வேறு வழியும் இல்லை. இதனை சகல பஸ் உரிமையாளர்களுடனும் கலந்தாலோசித்தே தீர்மானித்தோம். அத்தோடு எமக்கு தொடர்ச்சியாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத போதும் இவ்வாறு புதிது புதிதாக கட்டணங்களை அதிகரிப்பதானது முறையற்ற செயலாகும்.
நினைத்த நினைத்த நேரங்களில் எல்லாம் பொலிஸார் பஸ் தரிப்பு நிலையங்களை மாற்றுகிறார்கள். அவ்வாறு மாற்றுவதால் பயணிகள் உட்பட சகலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். அவ்வாறு மாற்றுவதற்கு பொலிஸாருக்கு உரிமையுமில்லை.
பஸ் தரிப்பு நிலையங்களை அவ்வாறு மாற்றியமைப்பதானால் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு பெற்றதன் பின்னரே அது மாற்றியமைக்க வேண்டும். அண்மையில் கொழும்பு சலாக்கா பகுதியில் இருந்த பஸ் தரிப்பிடம் மாற்றப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் உட்பட போக்குவரத்து பஸ்சாரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல முறைகள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே தான் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென்று முடிவெடுத்துள்ளோம். எமது இந்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை.
ஒழுங்கான நேர அட்டவணையின்மையினால் போக்குவரத்து சேவையில் பாரிய சிக்கல்கள் தொடர்ந்து கொண்டேயுள்ளன. ஆகையினால் உரிய முறையிலான நேர அட்டவணையினையும் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் அந்தச் சங்கத்தின் தøலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பானது தனியார் பஸ் உரிமையாளர்களை பெரிதும் அசௌகரியத்துக்குள்ளாக்கியுள்ளது. ஆகையினாலேயே அதனை உடனடியாக குறைக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக் எமக்கு விருப்பமில்லை. இருந்த போதிலும் எமது பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கா விட்டால் வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதை தவிர வேறு வழியும் இல்லை. இதனை சகல பஸ் உரிமையாளர்களுடனும் கலந்தாலோசித்தே தீர்மானித்தோம். அத்தோடு எமக்கு தொடர்ச்சியாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்காத போதும் இவ்வாறு புதிது புதிதாக கட்டணங்களை அதிகரிப்பதானது முறையற்ற செயலாகும்.
நினைத்த நினைத்த நேரங்களில் எல்லாம் பொலிஸார் பஸ் தரிப்பு நிலையங்களை மாற்றுகிறார்கள். அவ்வாறு மாற்றுவதால் பயணிகள் உட்பட சகலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். அவ்வாறு மாற்றுவதற்கு பொலிஸாருக்கு உரிமையுமில்லை.
பஸ் தரிப்பு நிலையங்களை அவ்வாறு மாற்றியமைப்பதானால் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு பெற்றதன் பின்னரே அது மாற்றியமைக்க வேண்டும். அண்மையில் கொழும்பு சலாக்கா பகுதியில் இருந்த பஸ் தரிப்பிடம் மாற்றப்பட்டுள்ளது. அதனால் பயணிகள் உட்பட போக்குவரத்து பஸ்சாரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் செயற்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல முறைகள் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே தான் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென்று முடிவெடுத்துள்ளோம். எமது இந்த முடிவில் எவ்வித மாற்றமுமில்லை.
ஐநாவின் நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் கெஹெலிய
ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அரசாங்கம் இன்று உறுதியாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், இலங்கை அரசு முன்னர் தெரிவித்தது போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
விசாரணைக்குழு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் செற்பாடுகளும் அவர்களின் தீர்மானங்களுக்கும் அமையவே இலங்கை அரசாங்கத்தின் செற்பாடு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அரசாங்கம் இன்று உறுதியாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், இலங்கை அரசு முன்னர் தெரிவித்தது போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
விசாரணைக்குழு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் செற்பாடுகளும் அவர்களின் தீர்மானங்களுக்கும் அமையவே இலங்கை அரசாங்கத்தின் செற்பாடு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்
மன்னாரில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல்
மன்னார் தலைமன்னார் வீதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஊடகவியவாளர் ஒருவர் இன்று இரவு 8.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார்.
54 வயதுடைய அந்தோனிமார்க் என்பவரே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வாகனங்கள் அதிகளவு சென்றதால் வெள்ளை வானில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த ஊடகவியலாளரிடம் இருந்த ஆவணங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட ஊடகவியவாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தன்னை தாக்கிய இனந்தெரியாத நபர்களையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் குறித்த வேனில் இருவர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரர் மற்றும் சன்டே டைம்ஸ் ஆகிய ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளர்
54 வயதுடைய அந்தோனிமார்க் என்பவரே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வாகனங்கள் அதிகளவு சென்றதால் வெள்ளை வானில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த ஊடகவியலாளரிடம் இருந்த ஆவணங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட ஊடகவியவாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, தன்னை தாக்கிய இனந்தெரியாத நபர்களையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் குறித்த வேனில் இருவர் இருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரர் மற்றும் சன்டே டைம்ஸ் ஆகிய ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)