23 ஜனவரி, 2010

இடம்பெயர்ந்தோரில்45.732 பேர் வாக்களிக்கத் தகுதி



News Photo

யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தோரில் 45ஆயிரத்து 732 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
,டிச, யாழ் மாவட்டத்தில் 15ஆயிரத்து 602 பேரும் வன்னி மாவட்டத்தில் 29ஆயிரத்து 990 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 பேரும் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 118 பேரும் வாக்களிப்பதற்காகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதித் தேர்தல் : நேற்றுமாலை வரை 730 வன்முறைகள்


No Image

ஜனாதிபதி த் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை 730 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் 33பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 16 தீவைப்பு சம்பவங்களுடன் 5 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகஎரஅ அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற மாவட்டமாக குருணாகலில் 71 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலன்னறுவையில் 63 வன்முறைச் சம்பவங்களும்இ மாத்தறையில் 56 வன்முறைச் சம்பவங்களும் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கிளிநொச்சியில் மக்கள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் : அரச அதிபர்
டில வீரகேசரி இணையம்


No Image



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள பொது மைதானத்தில் 67 கொத்தணி வாக்குச் சாவடிகளும் கரச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வாக்குச் சாவடிகளும் பூனகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 13 கொத்தணி வாக்குச் சாவடிகள் உட்பட 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ளாத பட்சத்தில்இ அவர்கள் எங்களுடைய மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கொத்தணி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேவேளைஇ அவர்கள் வாக்களிப்பினை மேற்கொள்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன" என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மக்கள் வாக்களிக்க இலவச பஸ் சேவை



No Image

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக இலவச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் ஆணையாளர் மேலும் கூறுகையில்இ

"வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வவுனியாவில் விசேட செயலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையில் சகல ஏற்பாடுகளையும் இச்செயலகம் கண்காணிக்கின்றது. தனியார் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான 1000 பஸ்கள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

22 ஜனவரி, 2010


சகல அரச நிறுவனங்Justify Fullகளிலும் தமிழ் மொழியை அமுல்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர்

சகல அரசாங்க நிறுவனங்களும் தமிழ் மொழியை அமுலாக்குவதற்கு சாத்தியமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அரச கருமமொழிகளைச் செயற்படுத்துவதற்குள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்திக் கவும் ஆவன செய்யப்பட உள்ளதாக அரசியல் விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி எம். எஸ். விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சகல அரச நிறுவனங்களிலும் அரச கருமமொழிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் அலுவலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பொறுப்புக ளும் அறிவி க்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

அரசகருமமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பொறுப்புக்க ளைக் கையளிப்பது தொடர்பாக சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கும் மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர் கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூரா ட்சி நிறுவனத் தலைவர்கள், மாகாண அர சாங்க சேவை ஆணைக் குழுச் செயலாளர் களுக்கு சுற்றுநிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டில் தீவிபத்தில் ஆணொருவர் உள்ளிட்ட ஐந்து இலங்கையர்கள் காயம்-

நாட்டில் அமைந்துள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக ஐந்து இலங்கையர்கள் காயமடைந்துள்ளனா. இந்த தீவிபத்து நேற்றுப் பிற்பகலில் இடம்பெற்றிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களில் நான்கு பெண்களும் ஆணொருவரும் அடங்குவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களைப் பரிமாறிக் கொண்டிருந்தபோதே இந்தவிபத்து இடம்பெற்றிருப்பதாக அந்நாட்டுப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்து தொடர்பிலான விசாரணைகளை குவைத் பொலிசார் ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சுகாதார வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை-

இலங்கையில் சுகாதார வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நடவடிக்கைகள் நாடெங்கிலுமுள்ள 25ஆயிரம் சுகாதார மையங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பன இதற்கான உதவிகளை வழங்கவுள்ளன. இதற்கிடையில் தெற்கு ஆசியாவின் சிறந்த சுகாதார மேம்பாட்டை இலங்கை கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்துரோக சூழ்ச்சிகளைத் தோற்கடித்து நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது-ஜனாதிபதி-

சூழ்ச்சிகளைத் தோற்கடித்து நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடலில் மாத்திரமன்றி வானிலும் கேந்திரநிலையமாக இலங்கையைக் கொண்டவந்து சிறுவர்களின் எதிர்காலத்தை வெற்றியடையச் செய்ய தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தான் ஒருபோதும் தேர்தலில் வெற்றிபெறுவதை நோக்காகக் கொண்டு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவில்லையெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை வெற்றியடையச் செய்யவே தான் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 27ம் திகதியும் ஐக்கிய இலங்கையாக காணப்படுமென்றும் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் நிட்டம்புவயில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை பொத்துவிலில் ஆறு மீன்பிடி வள்ளங்களுக்கு தீவைப்பு-


மாவட்டம் பொத்துவில் கொத்துக்கல் பிரதேசத்தில் சிலர் ஆறு மீன்பிடி வள்ளங்கள் தீவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவமானது நேற்றிரவு 8மணியளவில் இடம்பெற்றதாக பொத்துவில் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளங்களே இவ்வாறு தீவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் சுமார் 20லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கலாமெனவும் தெரிவித்த பொலீசார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கான வெளிநாடுகளின் நேரடி முதலீடுகள் அதிகரிப்பு-


இலங்கைக்கான வெளிநாடுகளின் நேரடி முதலீடுகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றுமதித்துறை அபிவிருத்தியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பல நாடுகள் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோதல்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது அரசியல் சுமுகநிலை காணப்படுவதே இதற்கான காரணமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிப்பு-

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்த ஒருவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்குமீதான விசாரணை நேற்று கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா நவரத்னம் என்பவரைக் கொலைசெய்த குற்றத்திற்காக தங்கையா சத்தியசீலன் என்பவருக்கே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த கொலையாளிக்கு எதிராக அக்கரைப்பற்று பொலீசார் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். கல்முனை மேல்நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்குள் அங்கு வழங்கப்பட்ட நான்காவது மரணதண்டனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களை சந்திக்க நடவடிக்கை-


தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர்அழைப்பு விடுத்திருந்தார். ஐக்கிய நாடுகளின் அமைப்பு, பொது நலவாய நாடுகளின் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் முருங்கன் நகரில் புளொட் அலுவலகம் திறந்துவைப்பு





தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் அலுவலகம் இன்றையதினம் முருங்கன் நகரில் தலைவர் சித்தார்த்தனால் திறந்துவைப்பு. இவ் வைபவத்தில் தொழிற்சங்கங்கள், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முன்னைநாள் மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் முன்;னைநாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக த.சித்தார்தன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில், கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் பவன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்கட்சி தலைவரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் நிர்வாக செயலர் தோழர் ராகவன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவசம்பு உட்பட மேலும் பல கட்சி முக்கியஸ்தர்களும் அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கழகத்தின் முன்னைநாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கே தொடர்க...




புளொட் தலைவர் .சித்தார்த்தன் தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்றப்பட்ட நெடுங்கேணிக்கு விஜயம்- (புகைப்படங்கள் இணைப்பு)!




கடந்த 19ம் திகதி வவுனியா வடக்குப் பிரதேசமான நெடுங்கேணிக்கு புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் குழு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த புளொட் பிரதிநிதிகள் குழு அங்குள்ள மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன்இ அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். புளொட் தலைவர் சித்தார்த்தனுடன்இ புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன்இ முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான வை.பாலச்சந்திரன்இ புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன் ஆகியோர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். (தகவல் புகைப்படங்கள்.. புளொட் ஊடகப்பிரிவு)

aaa-new_phots2_021aaa-new_phots2_008

aaa-new_phots2_007

aaa-new_phots2_026


aaa-new_phots2_032



மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் 27 ஆம் திகதி அறிவிக்க முடியும்:தேர்தல் ஆணையாளர்

No Image


எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகளை 27 ஆம் திகதி காலை அறிவிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
சர்வதேச கண்காணிப்புக் குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க நடவடிக்கை
No Image


தேர்தல் ஆணையாளரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள சர்வதேச கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் 21 ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட மட்டத்திலான முகவர்களையும் சந்திக்கவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்இ வேட்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவென சர்வதேச கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைப்புஇ பொது நலவாய நாடுகளின் சபைஇ ஐரோப்பிய ஒன்றியம்இ ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகள் சங்கம் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவற்றில் ஐக்கிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இலங்கைக்கு வரமுடியாது என்பதை காரணங்களுடன் தெரிவித்துள்ளன. இரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் தேர்தல் முடிவின் பின்னர் 28ம் திகதி தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கும் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொதுநலவாய நாடுகளின் சபை மற்றும் ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பன இந்தத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

பொதுநலவாய நாடுகளின் சபையின் கண்காணிப்புக் குழுக்கள்இ அந்த நிறுவனங்களினாலேயே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றின் கீழ் காண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. ஆசிய நாடுகளின் தேர்தல் அதிகாரிகளின் ஒன்றியம் தேர்தல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்.
மேலும் இங்கே தொடர்க...
தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகவே ஆர்ப்பாட்டங்கள் : புத்திரசிகாமணி

No Image


ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காகவே நடத்தப்படுவதாகவும் அதனால் எவ்வித காத்திரமான தீர்வுகளும் எட்டப்படப் போவதில்லை என்றும் நீதி மறுசீரமைப்பு பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துமாறு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அது தொடர்பாக பிரதியமைச்சரிடம் நாம் கேட்டபோதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

"கைதிகள் தொடர்பில் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறப் போவதில்லை.

அரசியல் கைதிகள் என்று இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் தொடர்பில் நாம் விடுதலை வழங்கி வருகின்றோம். மேலும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ்க் கைதிகளை விடுவிக்கக் கோரி வெலிக்கடையில் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டம்



No Image
பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் இன்று வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பட்டமொன்றை நடத்தினர்.

மனித உரிமைகள் இல்லம்இ சட்டத்தரணிகள்இ ஊடகவியலாளர்கள்இ தொழிற்சங்கங்கள்இ மக்கள் கண்காணிப்புக் குழுஇ ஐக்கிய சோஷலிசக் கட்சி போன்றவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கைதிகளின் உறவினர்கள்இ மனித உரிமை ஆர்வலர்கள் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பியதுடன்இ பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

கைதிகளை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி தமது உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்இ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களை விடுதலை செய்வதாகத் தெரிவித்து காலம் தாழ்த்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

அதேவேளைஇ தமது விடுதலை தொடர்பிலும்இ விசாரணைகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் கனகசபை தேவதாஸ்(வயது 53)இ இம்மாதம் முதலாம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவரது மனைவி எமக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறைச்சாலை உதவி ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவுடன் தொடர்பு கொள்ள முற்பட்டபோதுஇ அவர் அங்கு இல்லையென எமக்குத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண
தென் பகுதி ஜனநாயக சக்திகளுடன் சேரவேண்டும்
-வாசுதேவ நாணாயக்கார

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அவர்கள் தென் பகுதியிலுள்ள ஜனநாயகச் சக்திகளுடள் ஒன்றிணைய வேண்டுமென்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

இராணுவ வாதிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஜனநாயகம் அழிக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை யுத்தத்துடன் நிறைவுக் கட்டத்திற்கு வந்திருக்கின்றது. அதுபோல் தென்பகுதி தமிழ் மக்கள் சமமாக வாழ்வதற்கான சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கு தென்பகுதி ஜனநாயக சக்திகளுடன் அவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் இயல்புவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது மீன்பிடித் தடை நீக்கப்பட்டு இருக்கின்றது. தரைவழிப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த வாசுதேவ நாணாயக்கார, தேர்தல்களின் மூலம் ஜனநாயகம் புத்துயிர் பெறுகிறது. அதுபோல் வடக்கில் மாகாண சபைத் தேர்தலும், பொதுத் தேர்தலும் நடத்தப்படுவதன் மூலம் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தென்பகுதி ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்துக்கொள்வதே சிறந்ததாகும். அந்த ஜனநாயக அமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார். ஆகவே, அவரை ஆதரிப்பதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காணமுடியும் என்றும் கூறினார்.




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்
மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி
தேர்தலில் அவருக்கே வாக்கு என்கிறார்கள் மலையக மக்கள்
-வீ. இந்திரன்

30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இத்தேர்தலில் பிரதான வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் மற்றும் சில வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

இவர்களில் இருவரும் தாமே வெற்றிபெறுவதாகக் கூறி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் மலையகத்தில் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள், புத்திஜீவிகள் பலரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறுவார் என்கின்றனர்.

இதற்கான காரணம், கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினைவிட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ், கமநெகும, மகநெகும போன்ற வேலைத்திட்டத்தின் மூலம், மலையகத்தில் பாரிய அபிவிருத்தி காணப்பட்டுள்ளது. “லயன்” அறைகளுக்கு மின்சாரம் என்பது எட்டாக் கனியாகக் காணப்பட்ட நிலையில் தற்போது 90 வீதமான தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

மலையக இளைஞர், யுவதிகளும் தமது வீடுகளில் கணினி பயன்படுத்தும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். இதனை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இந்நிலையில் மலையக மக்கள் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இரத்தினபுரி எம்.ஏ.தங்கவேல் (தொழிற்சங்கப் பிரதிநிதி)

மலையக மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கூடுதல் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகள் கொங்கிறீட் போட்டு செப்பனிடப்பட்டுள்ளன. தோட்ட மக்கள் தமது தோட்டத்தலிருந்து நகரங்களுக்கு வர பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தற்போது அவ்வாறான சூழ்நிலை இல்லை. இதற்குப் பிரதான காரணம் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம், மலையகப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டதாகும். அத்துடன் சமூர்த்தி நிவாரணம் பெறுபவர்களும் மலையகத் தோட்டங்களிலுள்ளனர். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் வழங்கப்பட்ட “சனசவிய” வேலைத்திட்டம் மலையகத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற நிறுவனங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பது அவரின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என்றார்.

எஸ்.சுப்பிரமணியம், பலாங்கொடை தோட்டம்

சப்பிரகமுவ மாகாண சபைத் தேர்தலில் நாம் நமது வயிற்றுப்பிழைப்புக் குறித்து அக்கறை கொண்டதனால்தான் எமது பிரதிநிதித்துவத்தை இழந்து தற்போது அநாதையாக, அநாதரவாக இருக்கின்றோம். இந்நிலை தொடரக்கூடாது. எனவே, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை நாம் வெற்றிபெறச் செய்தால் எமது பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வரலாம். இல்லையெல் நாம் சப்பிரகமுவவில் தொடர்ந்து அநாதையாகிவிடுவோம் என்றார்.

அப்புகஸ்தென்ன தோட்டம் “இரத்தினபுரி”
ஆர்.சகாதேவன் (54 வயது)

எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தால் இலங்கை – உகண்டா போன்றதொரு நாடாகிவிடும். நமது கட்சியைவிட நாட்டைப்பற்றி சிந்திக்க தலைப்பட்டுள்ளதால் நாம் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

இரத்தினபுரி ரம்புக்கனை தோட்டம்
ஆர்.மணிமேகலா (34 வயது)

நான் நீண்டகாலமாக இத்தோட்டத்தில் வசிக்கின்றேன். தற்போது பொலிஸில் இளைஞர்கள் கைது செய்யப்படுவதில்லை நிம்மதியாகப் பயணம்செய்ய முடியும். இதற்குக் காரணம் ஜனாதிபதி மஹிந்தவின் செயற்பாடுதான். மஹிந்த சிந்தனை மூலம் நாம் பல அபிவிருத்தியை கண்டுள்ளதுடன், தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச மற்றும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

அவ்வாறு அவர்களுக்கு நியமனம் வழங்கப்படாவிட்டால் இன்று அவர்கள் தோட்ட குடியிருப்புகளைத்தான் சுற்றிச்சுற்றி வரவேண்டும். இதற்கு நன்றிக்கடனாக நாம் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க வேண்டும். நாம் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் மனிதப் பண்புகளற்ற மிருகம் என்றே கூறவேண்டும் என்றார்.



அவிசாவெலை ரி.திரவியம் (50 வயது)

நான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவராக இருக்கின்றேன். எமது கட்சியிலிருந்து யோகராஜன், சச்சிதானந்தன், எம்.எஸ்.செல்லச்சாமி போன்றவர்கள் வெளியேறியபோதும் நாமோ, மலையக மக்களோ வெளியேறவில்லை. எமது கட்சியிலிருந்து சம்பாதித்துவிட்டு எம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். அவர்களின் வெளியேற்றம் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிலையையோ, அவர் ஆட்சியமைப்பதனையோ தடுக்க முடியாது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் சரியான வேளையில் சரியான முடிவினை எடுத்துள்ளார். அவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றேன்.

குருவிற்ற பிரதேச சபையின் உறுப்பினர்
ஜே.அன்பழகன் (48 வயது)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேட்ட உறுப்பினரான நான் எமது தலைமைத்துவம் எது சொல்கின்றதோ அதனையே செய்வேன். மலையக மக்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அளப்பரிய சேவைகளை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது செய்துள்ளது. அதனால், நாம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிப்போம். அவர் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் எமது மக்களுக்கு மேலும் சேவை செய்ய முடியும்.

மடலகம தோட்டம்
கே.ஜெயராமன் (40 வயது)

பல வருடங்களாக எமது தோட்டத்திற்கு மின்சாரம் எட்டாக்கனியாகக் காணப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் எமது தோட்டம் மின்சார ஒளியைக் கண்டது. அதுமட்டுமல்லாமல் நாம் சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி. பொருட்களின் விலைவாசி அதிகரித்துக் காணப்படுவது உண்மைதான். எந்த ஆட்சியில் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. நாம் விலைவாசியை மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் எமது சமூகமும் மீண்டும் இருண்ட யுகத்திற்குச் செல்லவேண்டும்.

மலையக தோட்டங்களுக்கு சரத் பொன்சேகாவோ, ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பி. யோ எந்தவிதமான அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை. மலையக தோட்ட வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மஹிந்த ஐயாவின் காலத்தில்தான் தோட்ட வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்பட்டன. இதன்மூலம் எமது சமூகத்திற்குச் சிறந்த சேவை செய்யப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தது. எனினும், அக்கட்சிக்கு உருப்படியான வாக்குகள் எதுவுமில்லை. எனவே அவர்கள் யாருக்கு ஆதரவளித்தாலும் பாரிய வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது. இக்கட்சி தற்போது காற்றுப்போன பலூன்போன்றது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிபீடமேறுவார் என்பது உறுதி என்றார்.



ஜே.வி.பி யும் ஐ.தே.க யும் இணைந்து
அரசியலில் இராணுவவாதத்தைப் புகுத்தியுள்ளன
-அமைச்சர் டிய+ குணசேகர

இலங்கையில் முதன்முதலில் பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியது புலிகள் அன்றி ஜே.வி.பி. யே. இந்த நாட்டில் அரச பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி. யும் இணைந்து இராணுவ வாதத்தை அரசியலுக்குள் கொண்டுவந்துள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டி.யு.குணசேகர தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் ஜே.வி.பி. யினரின் வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஆதரிக்க முடியும் எனவும் அமைச்சர் இங்கு கேள்வி எழுப்பினார்.

குடிமக்கள் குரலுக்கான மேடை அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது –

‘13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கைதூக்கிய ஒரே இடதுசாரி நான் மாத்திரமே. அந்த ஒரே காரணத்திற்காக கம்ய+னிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் 534 பேரை ஜே.வி.பி கொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த தீர்வு யோசனையையும் அந்தக் கட்சி முழுமையாக எதிர்த்தது. அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் ஜே.வி.பி. முன்னிறுத்தியுள்ள இராணுவத் தளபதியைப் படிப்பறிவுள்ள மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் எவ்வாறு ஆதரிக்க முடியும். தென் ஆசியாவில் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் அனைத்தும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டு ஜனநாயகத் தலைவர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அதுபோல இந்திய ஜனநாயக நாடாக இருந்தபோதும் அந்த நாட்டுப் பிரதமர் பாதுகாப்பு அதிகாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அரசியலை இராணுவமயப்படுத்தி இராணுவத்தை அரசியல் மயப் படுத்தும் கைங்கரியத்தில் ஜே.வி.பி யும் ஐ.தே.கட்சியும் இணைந்துள்ளன” என்றார்.

இங்கு உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் செயலாளர் ஸ்ரீதரன் கூறியதாவது – வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படிப்படியாக சுமுகநிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில் இராணுவ அதிகாரத்தின் கீழ் பழக்கப்பட்ட ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்து இன்றுள்ள சமுகநிலையைக் குழப்புவது அரசியல் சாணக்கியமாகாது என்றார்.




மேலும் இங்கே தொடர்க...
தமிழரை ஒடுக்கத் தயாராகவிருந்த
பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிக்கமாட்டார்கள்
-அமைச்சர் டிய+ குணசேகர


யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இரண்டரை இலட்சம் படையினரை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறிய சரத் பொன்சோகாவை தமிழ் மக்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என அமைச்சர் டி.யு.குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டுப் படைகளின் பிரதம அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்காக சரத் பொன்சேகா சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை தமிழ் மக்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் படைக்குப் புதிதாக இரண்டு இலட்சம் படையினரைச் சேர்த்து படைப் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தான் அரசிடம் கோரியதாகவும் பொன்சேகா தனது கடிதத்தில் கூறியிருந்தார். புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் இரண்டரை இலட்சம் படையினரை அங்கு நிலைநிறுத்த வேண்டும் என்றும் முப்படையைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் தனக்கு வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். தமிழரை ஒடுக்கத் தயாராக இருந்த பொன்சேகாவை தமிழ் மக்கள் எப்படி ஆதரிக்க முடியும்.
மேலும் இங்கே தொடர்க...