4 ஜூலை, 2011

லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர்

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன்போது தமிழ் இளைஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தினுள் ஓடியுள்ளார்.

இதனையடுத்து அவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

இந்திய, இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நிறைவடைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன் போது இந்திய இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு கல்வி சம்பந்தமான பயிற்சிகளை அதிகளவில் வழங்குதல், கலகத் தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டன.

இதனைத் தவிர இலங்கை இராணுவத்தினருக்கு பல பயிற்சித் திட்டங்களையும் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் மனிதாபிமான பயிற்சிகளும் உள்ளடங்கும். ஆங்கிலப் பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையிலும் இந்தியா, இலங்கை இராணுவத்துக்கு உதவவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி

இந்திய தஞ்சை மாவட்ட திலகா திடலில் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளையொட்டி சுடரேந்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை தமிழர் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனியஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. ராசேந்திரன், தமிழர் தேசிய பேரவை தலைவர் துரை குபேந்திரன், அறிவியல் பேரவை தலைவர் பேராசிரியர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, உடல் உழைப்பு சங்க பொதுச் செயலாளர் வெ. சேவையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனியஸ் கட்சி நகர செயலாளர் ராசேந்திரன், மக்கள் விடுதலை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா முழுவதும் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நடைபெறுவதையொட்டி தஞ்சை திலகர் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி உறுதியேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும்.

கட்சி, சாதி, மத பேதங்களை கடந்து தமிழின உணர்வாளர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் எதிர்வரும் 8ஆம் திகதி அணி திரள வேண்டும் என இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு தின கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. அன்றைய தினம் ஈழத் தமிழர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட துயரங்கள் ஆவணப்படமாக திரையிடப்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

3 ஜூலை, 2011

பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவால் கனேடிய தமிழர் ஒருவர் சித்திரவதை

கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக "த நெசனல் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம் வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத் தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மிகமோசமான முறையில் இலங்கை யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம், அதன் மேல் சுமத் தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறது. எனினும் அந்த நாட்டின் சிறைகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கு தாம் ஒரு சாட்சி என்று மனேஜ்குமார் குறிப் பிட்டுள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகின்றனர்.

அத்துடன் பணம் பறிப்பதற்காக எப்போதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் 50 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப் பட்டு வருகிறார்கள் என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசாரிக்க வேண்டும்: ம.ம.ச.க

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மலேஷிய அரசியல் கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. மலேஷிய மக்கள் சக்தி கட்சியே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த கட்சியினர் மலேஷியாவிலுள்ள ஐ.நா பணியகத்திடம் மனுவொன்றை கையளித்துள் ளனர்.

ஐ.நா சபையின் நிபுணர் குழு அறிக்கை யின்படி இலங்கை மீது அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றம் விசாரணைனகளை மேற் கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். கண்ணன் தெரிவித் துள்ளார்.

மலேஷியா இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள ஒரு நாடாகும். இதனால் இலங்கை யிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அவர்களுக்குரிய உரிமையுடனும் வாழுவ தற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என மலேஷிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பலஸ்தீனத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐ.நா சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண் டும் என மலேஷிய மக்கள் சக்தி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டாராம்: பர்ஹான் ஹக்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் குறித்த பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு நேற்று முன்தினம் அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, சேத விபரங்களை வெளியிடாமை போன்ற விடயங்கள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய, தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் சரணடைய பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியதாக கூறப்படும் உறுதி, அதன் பின்னர் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பரிந்துரையே அதுவாகும் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிறுவனங்களிடமும் நிபுணர் குழு அறிக்கை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வரு கிறது. இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பான் கீ மூனை நாளை மறுதினம் 5ஆம் திகதி சந்திப்பார் என்றும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய படத்தின் மூலப்பிரதிகள் கண்டுபிடிப்பு: பஷில்

"இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற தலைப்பில் சனல் 4 அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட படத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உண்மையான, மாற்றம் எதுவும் செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டுக்கு எதிரான சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்நாட்டிலுள்ள சிலர் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். சில டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் அடிமையாக வேண்டாம் என தாம் அவர்களை கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சனல் 4இல் வெளியான காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் சிங்கள மொழியில் உரையாடுவதைப் போன்றே வீடியோ அமைந்திருந்தது.

ஆனால், தற்போது இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமிருந்து தமக்கு கிடைத்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்ற, மாற்றம் செய்யப்படாத அசல் வீடியோ என்று வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதை போன்று காட்சி அமைந்திருக்கின்றது.

சனல் 4 வீடியோவிலும், தற்போது இலங்கை யில் வெளியாகியிருக்கும் வீடியோவிலும் "காட்சிகளில் பெரிதளவு வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை'.

பின்னணியில் கேட்கும் மொழியில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. சனல் 4 தொலைக்காட்சி வீடியோவில் சிங்கள மொழி யில் குரல்கள் கேட்கின்றன. ஆனால் தற்போது இலங்கையில் வெளியாகியுள்ள வீடியோக் காட்சியில் பின்னணிக் குரல்கள் தமிழ் மொழியில் கேட்கின்றன இதேவேளை, இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நாவும் பல் வேறு நாடுகளும் கோரி வருகின்றமை குறிப் பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

2 ஜூலை, 2011

மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றன: கிழக்கு கட்டளைத் தளபதி

மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை தேடி கண்டு பிடித்து அவற்றை அழிப்போம் என்று கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு டேத்பா மண்டபத்தில் நடைபெற்ற வங்கிகளின் உத்தியோகத்தர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு புறநகர் பகுதி புதூரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வங்கிக் கொள்ளைச் சம்பவத்தையடுத்து இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்ட சம்பவமாகும். ஐந்து பேர் ஆயுதங்களுடன் சென்று இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் கடந்த ஒன்றரை வருடத்தின் பின்னர் இவ்வாறான கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நடவடிக்கை சட்டவிரோத ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவங்களோடு ஒரு சில அரசியல் வாதிகளுக்கும், சில அரசியல் குழுக்களும் தொடர்பு உள்ளன.

எந்த அரசியல் சக்தியாக இருந்தாலும், அல்லது எந்த அரசியல்வாதியக்ஷிக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உடன் நடவடிக்கை எடுப்பேன்.

இந்த நாட்டின் அரசாங்க படைகளைத் தவிர வேறு யாரும் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது. அவ்வாறு ஆயுதம் வைத்திருப்பவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் அவ்வாறு ஒப்படைத்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அவ்வாறில்லாமல் தேடி கண்டு பிடித்தால் உரியவர்களுக்கெதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மட்டக்களப்பில் சில குழுக்களிடத்தில் ஆயுதம் இருப்பது நம்பகமாக எனக்கு தெரிய வந்துள்ளது. இந்த ஆயுதங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக சுற்றிவளைப்புகள், திடீர் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் வீதித்தடைகள் என்பன மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.

பொதுமக்கள் இவ் விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரிடமாவது ஆயுதம் இருந்தால் பொதுமக்கள் எமக்கு அறிவிக்க வேண்டும்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்பு வழங்குவார்கள். இதை வெற்றிகரமாக முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

பலவிதமான பயங்கரவாதக் குழுக்கள் இங்கிருந்தன. அவ்வாறான பயங்கர வாதக் குழுக்களை அழித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு இங்கு இடமில்லை. அபிவிருத்திக்கும், சமாதானத்திற்குமே இடமுண்டு.

அபிவிருத்திக்கும், சமாதானத்திற்கும் யாராவது தடையாக இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இரண்டு வங்கி கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று களுவாஞ்சிக்குடியிலும், மற்றது, புதூரிலுமாகும். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான நடவடிக்கை கடுமையாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினரின் அறிவித்தலை கடைப்பிடித்து நடக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தெரிவுக் குழு அமைத்து நாட்டு மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது: கரு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வு வழங்கினாலும் அதற்கு ஐக் கிய தேசியக் கட்சி முழு அளவில் ஆதரவு வழங்கும். ஆனால் தெரிவுக் குழுக்களை அமைத்து நாட்டு மக்களையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்ற முயற்சிப்பதை எம் மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ. தே. க. வின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது. அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி குழுவின் தீர்வு திட்ட யோசனை உள்ளது. மேலும் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. எனவே இனியும் தெரிவுக் குழு அமைப்பது என்பது போலி நாடகமாகவே அமைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தொடர்ந்தும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கட்டாய கடமையாகும். எனவே தமிழ் மக்களுக்கான தீர்வில் ஐ. தே.க. முழு அளவில் ஆதரவு வழங்கி செயற்படும். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள காலம் கடத்தாது தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுக்கள் போதாதென்று இன்னுமொரு பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது என்பது இழுத்தடிப்பு வேலையாகும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து தீர்வு தேட வேண்டிய அவசியம் கிடையாது.

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் முன் வைக்க விரும்பும் தீர்வுத் திட்டத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டும். அத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதால் அதற்கு தேவையான திருத்தங்களை ஏனைய அரசியல் கட்சிகளுடன் விவாதித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதை விட்டு விட்டு வெறும் பேச்சு வார்த்தைகளினால் காலத்தை கடத்துவதில் பயனில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஐ.நா. செயலாளர் மூனை சந்திப்பார்



அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 5ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேசவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துøரயாடியுள்ளர்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கை காரியாலயத்துக்கான பிரதி துணை செயலாளர் அலிசியா அயர்ஸையும் இவர் சந்தித்து இலங்கையின் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...