23 மே, 2011

ஆளுமை பயிற்சித்திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை

பல்கலைக்கழகம்

உயர் கல்வியமைச்சு அறிவிப்பு; திட்டமிட்டபடி தொடரும்

பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்கும் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சியை இடைநிறுத்துமாறோ அல்லது ஒத்திவைக்குமாறோ எந்தவித மான உத்தரவுகளையும் பிறப்பிக்கவி ல்லையென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண அரசாங்கத் தகவல் திணைக்களத் துக்குத் தெரிவித்துள்ளார்.

ஆளுமை பயிற்சித்திட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் எம்மிடம் கோரியிருந்தது. எனினும், இப்பயிற்சித் திட்டத்தை 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப் பட்டிருப்பதுடன், இதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் நாம் நீதிமன்றத்துக்குப் பதிலளித்துள்ளோம் என்றார்.

மூன்று வாரங்களைக்கொண்ட இந்த ஆளுமை பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகள், உணவு, சீருடை என்பன வழங்கப்படும். 185 மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் 22,000 மாணவர்களுக்கும் ஆளுமை பயிற்சி கட்டாயமாக வழங்கும் திட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது. 10,000 மாணவர்கள் இன்று தமது பயிற்சிகளை ஆரம்பிக்கின்றனர்.

இந்த ஆளுமை பயிற்சியானது மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி இல்லையென்று தெரிவித்திருக்கும் அவர், பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்கள் தமது திறமைகளையும், ஆளுமையையும் வளர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே இப்பயிற்சி வழங்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நெடியவன் கைது: உன்னிப்பாக கவனிக்கிறது இலங்கை

புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின்னரான நிலைமைகளை உன்னிப் பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெடியவனின் கைது மற்றும் அவர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் பற்றி அவதானித்து வருவதுடன், நெடியவனின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையைப் பாதிக்குமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நோர்வேயில் புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சியான கொன்ச வேர்டிவ் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. புலி பயங்கரவாதிகள் நோர்வேயில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என நோர்வே எதிர்க்கட்சி குறிப்பிட்டு ள்ளது.

புலிகள் அமைப்புக்காக ஐரோ ப்பா உட்பட பல்வேறு நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயில் வசித்து வந்த நெடியவன் ஹொலன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறைச்சாலைகளில் கூரையில் ஏறி கைதிகள் போராட்டம்

வெலிக்கடை, போகம் பரை மற்றும் மஹர சிறைச் சாலைகளின் கூரைகளில் ஏறி சுமார் 50 பேர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வெலிக்கடை சிறையின் கூரையில் 25 கைதிகளும், போகம் பரை சிறையில் 21 கைதிகளும், மஹர சிறையில் நால்வரும் இவ்வாறு கூரைகளில் ஏறி உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட்டதோடு பதாதைகளையும் தாங்கி நின்றனர்.

கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை வெலிக்கடை சிறையின் கூரையில் ஏறிய நான்கு கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1989க்கு முன்னர் இடம்பெற்ற பொது மன்னிப்பு காலத்தை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மரண தண்டனை மற்றும் ஆயுட் தண்டனை கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று சிறைக் கைதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகநிலை தோன்றியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்தார்.

மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து மஹர சிறைச்சாலையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய கைதிகள் போராட்டத்தைக் முடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளதாகவும், போகம்பரை சிறையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் கைதிகளும் இதேபோன்று தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

நல்ல ஒழுக்கத்தை பேணும் கைதிகள் வருடத்துக்கு ஒரு முறை வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சிபாரிசு நீதி அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கைதியின் பிரதிநிதிகள் ஏற்றிக்கொண்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறினார்.

கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளை கீழே இறங்கச் செய்யும் அடிப்படையில் செயலாற்றவில்லை என்றும், அவர்களுக்கு வழங்கக் கூடிய நிவாரணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற 900 பேர் 5ம் திகதி சமூகத்தில் இணைப்பு






புனர்வாழ்வு பெற்ற 900 பேர் எதிர்வரும் 5ஆம் திகதி சமூகத்தில் இணைக்கப் படவுள்ளனர்.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்தார்.

சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படு வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 900 பேரின் பட்டியல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் பயிற்சிகள் வழங் கப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளுடன் உள்ள முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பாக இம்முறை அக்கறை செலுத் தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 4095 பேர் தற்போது புனருத்தாரண முகாம்களில் உள்ளதாகவும் அவர்கள் படிப்படியாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுவார்களென்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

20 மே, 2011

நோர்வேயில் நெடியவன் ஐரோப்பிய பயங்கரவாத சட்டத்தின் கீழ்கைது

நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொலன்ட் நாட்டு சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்ட போதே நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

இவர் ஐரோப்பிய பயங்கரவாத சட்டப்படியான வழக்கை எதிர் நோக்கி உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ""இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா வின் அறிக்கையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

நாம் அவர்களுக்கு கூறியுள்ள செய்தி உள்ளக ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள் என்பதே. அதற்கு இந்தியா உதவும். போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல கவலைகள் இந்தியாவுக்கு உள்ளன.

அவர்கள் உள்ளக ரீதியாக நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் வேறு இடங்களிலிருந்து அழுத்தங்கள் வரும் என்று இந்திய அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியுள்ளது. அரசியல் ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை துரிதப்படுத்துமாறு இந்திய தலைவர்கள் இலங்கையிடம் கேட்டுள்ளனர்.

13வது திருத்தத்தின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்றை இந்தியா வலியுறுத்தியுள்ளது. அத்துடன் போரின் பின்னர் காணாமல் போனவர்களின் பட்டியல் ஒன்றை தயாரிக்கும் படியும், அவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கி, அவசரக்கால சட்டத்தையும் விலக்கிக்கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரு அமெரிக்கப் பிரஜைகள் விமானநிலையத்தில் கைது

அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானத்தின் மூலம் துப்பாக்கியொன்றை கொண்டு செல்ல முயற்சித்த இரு அமெரிக்கர்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

பிஸ்டல் போன்ற துப்பாக்கியொன்றை பாகங்களாக பிரித்து கொண்டு செல்ல முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாங்கள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் எனவும் விடுமுறையை கழிக்க இலங்கை வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பொருள் ஸ்கேனர் இயந்திரத்தில் தெரிந்தவுடனேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக் கொடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது முன்னாள் இராணுவத் தளபதியின் உடல்நிலை தொடர்பிலான மருத்துவ அறிக்கையொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் சரத் பொன்சேகாவின் உடல் நிலை இதுவரை தேறாமையினால் அவருக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய வழக்கை இம்மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிபதிகள் தீர்மானித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் தாம் விடுதலை செய்யப்படாததை ஆட்சேபித்து கைதிகள் சிலர் கூரை மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிகள் ஏழு பேரே இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...