10 ஜனவரி, 2011

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 37ம்ஆண்டு


ஆண்டு தைமாதம் 10ம்திகதி யாழ். முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 37ம்ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 37வது ஆண்டு நினைவு தினம் இன்று சீரற்ற காலநிலை காரணமாக மிகவும் எளிமையான முறையில் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றையதினம் முற்பகல் புளொட் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள்- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டுசெல்லும் பணியினை புளொட் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 20ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் நான்கு இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, காரையாக்கன்தீவு ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து கல்லடி பாலர் பாடசாலையில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமைத்த உணவினையும் நேற்று புளொட் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் ஒன்பது பேர் சைபிரசில் கைது





சைபிரசில் வசிக்கும் இலங்கையர்கள் சிலருக்கும் வெளிநாட்டவர் சிலருக்குமிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றை அடுத்து இலங்கையர்கள் ஒன்பது பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் சிலருக்கும், வெளிநாட்டவர்கள் 20 பேருக்குமிடையே இடம்பெற்ற இம் மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து 9 இலங்கையர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதுவராலய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கணனிக்குள் கஞ்சா: இளைஞர்கள் ஐவர் கைது




கணனி ஒன்றில் மறைத்து வைத்துக் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த ஐந்து இளைஞர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை நகரில் இளைஞர் ஒருவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து தனது வீட்டுக் கணனியின் உட்பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு விற்பணை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது கணனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கஞ்சா பக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பக்கட் 250 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

குடாநாட்டு குற்றச் செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர்






குடாநாட்டு குற்றச் செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர்
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் நேற்று யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொது மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வீடுகளின் மேல் கற்பாறை வீழ்ந்ததில் 7 பேர் பலி: கண்டியில் சம்பவம், மீட்பு பணியில் இராணுவத்தினர்

கண்டி அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் அனிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த 10 பேரும் 2 சடலங்களும் வெளியெடுக்கப் பட்டுள்ளன. ஏனையவர்களை மீட்கும் பணயில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஸ்.செல்லம்மா (68), பிரதீப் ராஜ் (49), மற்றும் கண்டி சில்வெஸ்தர் கல்லூரியில் 4 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் வினோத் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கற்பாறைக்குள் சிக்குண்டுள்ள ஏனைய ஐந்து பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வெடி மருந்துகளை பயன்படுத்தி கற்பாறையை தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாநாட்டின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்: அஷ்ரப் சிஹாப்தீன்

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாநாட்டின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் சற்றுமுன் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த வேண்டும். மேலும் மாநாட்டின் தலைமையகம் இலங்கையில் இயங்குவதோடு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

எழுத்தாளர்களின் நலன் கருதியும் மாநாட்டுக்காகவும் நிதியம் உருவாக்குதல், சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளிக்கொண்டுவர பதிப்பகம் ஒன்றை அமைத்தல் முதலானவற்றை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

6 ஜனவரி, 2011

தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில்


தைப்பொங்கல் பண்டிகையை
யாழ்ப்பாணத்தில் கொண்டாட ஏற்பாடு



உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடு வதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.

யாழ். மத்திய கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்படவிருப்பதுடன், அன்றைய தினம் தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் முன்னணி இசை கலைஞர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்திருப்பதாக சதீஸ்குமார் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டியில் சட்டவிரோத கேபிள் டிவி நிலையம் முற்றுகை

நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் பிரதான சந்தேக நபர் கைது

மலையகப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையமொன்றை நாவலப்பிட்டி பொலிஸார் முற்றுகையிட்டு ள்ளனர்.

இதனை நடாத்திவந்த பிரதான சந்தேக நபரை தொலைத் தொடர்பு சாதனங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி நகரத்தை அண்மித்த கடுகஞ்சேனை கெட்டபிலா தோட்டத்தை உள்ளடக்கியதாகவே இச்சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையம் இயங்கி வந்துள்ளது.

கைவிடப்பட்டிருந்த வீடொன்று இதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், இங்கிருந்தே கேபிள் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சி நிலையம் நீண்டகாலமாக இயங்கிவந்த போதும் இதன் பயனாளர்கள் மற்றும் இயக்குபவர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்திருப்பதாக நாவலப்பிட்டிப் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நிலையத்திற்கும் புலிகள் இயக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது பற்றி விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக நாவலப்பிட்டிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையத்திலிருந்த அன்டனாக்கள், ரிமோட் கொன்டோலர்கள் உட்பட பல இலத்திரனியல் சாதனங்களையும், புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள் குறித்த சீடிக்களையும் மீட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நாவலப்பிட்டி மஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க முயற்சி முறியடிக்க சூட்சுமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சபையில் பிரதமர்

புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளின் மூலம் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாகவும் இதனை முறியடிக்க சூட்சுமமாக செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்திற்கென அண்மையில் பாரியளவு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும், வெளி நாடுகளும் பணத்தை வாரி வழங்கியுள்ளன. மேற்குலக நாடுகள் இன்னமும் தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளாமல் உள்ளன.

அவற்றுக்கு இலங்கைத் தூதரகத் தின் மூலமாகவே அறிவுறுத்தல்களை வழங்க முடியும் என்று நேற்று அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேர ணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘வடக்கு மக்கள் உன்னத நிலையில் வாழ்பவர்கள் அவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுவாக்க வேகமாக செயற்படவேண்டும். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 3619 பேரும் 67 பெண்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4585 ஆண்களும் 72 பெண்களும் விடுவிக்கப் படவுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 50 பேர் கடந்த டிசம்பர் மாதம் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டனர். அதேநேரம் பாதுகாப்புத் தரப்பினர் வடக்கில் நடத்திய தேடுதலின்போது 1014 விமான எதிர்ப்புக்குண்டுகள், பீரங்கிக் குண்டுகள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்களை மீட்டுள்ளனர். எனவே, புலிகளின் செயற்பாடுகளை மீண்டும் தலைதூக்காது முறியடித்து சமாதானத்தை நிலைநாட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என்றார் பிரதமர்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ஃராட்சி மன்றங்கள் கலைப்பு: விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று


சகல உள்ளூராட்சி மன்றங்களும் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட உள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக கூறினார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறி வித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் சில போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளதால் போட்டிகள் நடைபெறும் கொழும்பு, கண்டி மற்றும் ஹம்பாந் தோட்டை பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாது எனவும் அவற்றுக்கான தேர்தல் வேறொரு திகதியில் நடைபெறும் எனவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்தது.

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருக்குள்ள அதிகாரங்களின் பிரகாரமே உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் குறைக்கப்படவுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் இப் பகுதிகளுக்கு வருகை தருவதாலும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் சுதந்திரமாக தேர்தல் கெடுபிடிகள் இன்றி விளையாடு வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் தேர்தல் நடைபெற்ற யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பனவும் கலைக்கப்படாது என அமைச்சு தெரிவித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதோடு இதற்கான திகதியை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிக்க உள்ளார். அதன் பின்னர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுக்கும் என பிரதித் தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களை கலைப்பது தொடர்பில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போதும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டே வெளியிடப்படுவதாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சி கூறினார். உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் முன்னரே பிரதான கட்சிகள் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை கோரியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...