21 பிப்ரவரி, 2010

பொன்சேகாவால் ஒன்றிணையும் இலங்கை எதிர்க்கட்சிகள்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியாக ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.

÷அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா மீது, கொலைக் குற்றம் சுமத்தி ராஜபட்ச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவருடைய விடுதலைக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பியுள்ளன.

÷அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிராக போட்டியிட்ட பொன்சேகாவுக்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்தன. ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதென முடிவு செய்திருந்தன. இந்நிலையில் பொன்சேகாவின் விடுதலைக்காக அவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

பொன்சேகாவின் மனைவி அனோமாவை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினர். அப்போது பொன்சேகா கைது விவகாரம் மற்றும் ராணுவ நீதிமன்ற விசாரணை குறித்தும் அவரிடம் விவாதித்தனர். ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

÷நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடுவது குறித்தும் அவர்கள் அப்போது விவாதித்தனர்.

÷நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலை எழுந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் இருந்த சூழ்நிலையைக் காட்டிலும் தற்போது நாடு புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். இதை அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இதற்காக நீண்ட விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

÷பொன்சேகா விவகாரத்துக்காக ஓரணியில் சேரும் எதிர்க்கட்சிகள், வரும் தேர்தலில் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
மிழீக்ள் விடுலை ம்



தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்படையிலேயே தேர்தலை நோக்கியதாகவே அனைத்துக் கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலான கூட்டுக்கள் அமைவதிலுமே அனைத்துக் கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு முயற்சிகள் நடைபெறவில்லை. இருந்தாலும் தமிழ் கட்சிகள் கூடியளவுக்கு ஒன்றுபட்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதையே நாங்களும் முழுமையாக விரும்புகிறோம். இதனடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றோம். ஆனால் எப்படியிருந்தபோதிலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக தேர்தலுக்கு முகம்கொடுக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே தமிழ்த் தரப்பு இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக நின்று தேர்தலை முகங்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. இப்படி நடந்தாலும் தேர்தலுக்குப் பிறகாவது இந்தக் கட்சிகளிடையே தமிழ் மக்களுடைய தீர்வு சம்பந்தமானவும், அடிப்படைப் பிரச்சினை சம்பந்தமானதும் ஆன தீர்வுகளுக்கு ஒரு புரிந்துணர்வு உருவாக்கப்பட வேண்டும். தேர்தலுக்குப் பிறகாவது இந்தக் கட்சிகள் மத்தியிலே ஒரு தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தமிழ் மக்களுடைய பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கப்படவேண்டும். இந்தத் தேர்தலிலே நாங்கள் எங்களால் இயன்றளவு விட்டுக் கொடுப்புக்களை கொடுத்து மற்றும் ஒத்துக் கொள்ளக்கூடிய கட்சிகளுடன் கூட்டமைப்பொன்றை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம். சாத்தியமான கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுப்போம்.

 

த.சித்தார்த்தன்

தலைவர்

மிழீ
க்ள் விடுலை ம்புளொட்)
மேலும் இங்கே தொடர்க...
ஆதாரம் இல்லாமல் பொன்சேகா கைது : ராஜபக்ஷே அரசு மீது ரணில் பாய்ச்சல்




கொழும்பு :"எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாமல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது, கடும் கண்டனத்துக்குரிய செயல்' என இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லாமல், சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரிய செயல். தேர்தலில் தோற்ற வேட்பாளரை கைது செய்து, சிறையில் அடைப்பது என்பது எந்த நாட்டிலும் நடக்காத விஷயம். ராணுவ சட்டப்படி ஒருவரை கைது செய்தால், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சரத் பொன்சேகா விஷயத்தில் இது நடக்கவில்லை.இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.


இதற்கிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகிதா பொகலகாமா, அமெரிக்க தூதர் பாட்ரிகா புடெனிசை நேற்று சந்தித்தார். அப்போது பொகலகாமா கூறுகையில், ""ராஜபக்ஷே அரசை அகற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக வெளியான தகவலை இலங்கை நம்பவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நட்புறவு நீடிக்கிறது,'' என்றார்.

ராஜப‌க்ச‌‌வுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் குமரன் பத்மநாதன்











இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிய வ‌ந்து‌ள்ளது. தொலைபேசி மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூற‌ப்படு‌கிறது.

அத்துடன், எதிர்வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டடைப்பு ஜனாதிபதி தேர்தலைப் போன்று ஒருமித்து நின்றால், மகிந்த ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பதுடன், சுயேட்சையாகப் பலரைக் களமிறக்கி, வாக்குகளை சிதறடித்து வெற்றிவாய்ப்பை மகிந்தவிற்கு சாதகமாக திருப்புவதற்கும் இவர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரியவ‌ந்து‌ள்ளது.

சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதிக்குமாறு இவர் தனக்கு நெருக்கமான பலருக்கு தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெ‌ரிய வந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உச்ச பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பது இவர் கடத்தப்பட்டது மற்றும் கைதானது தொடர்பான பலத்த சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...
16 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மூழ்கிய கப்பலில் தவித்த 60 மாணவர்கள் மீட்பு
-

கனடாவை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 60 பேர் கொண்ட குழுவினர் உலகை சுற்றி வர ஒரு கப்பலில் புறப்பட்டனர். 5 மாதங்களில் தங்கள் பயணத்தை தொடர அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் பயணம் செய்த கப்பல் கடந்த வியாழக்கிழமை பிரேசில் நாட்டு கடலுக்கு வந்தது. அப்போது திடீரென தண்ணீரில் மூழ்க தொடங்கியது.

இது குறித்து பிரேசில் நாட்டு கப்பற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த வழியாக வந்த சரக்கு கப்பலுக்கு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்தக்கப்பல் மீட்பு பணிக்காக விரைந்து சென்றது.

கப்பற்படை கப்பலும் விரைந்தது. இதற்கிடையே கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியபடியே இருந்தது. இதனால் அதில் பயணம் செய்த மாணவர்கள் பயத்தில் உறைந்து போயிருந்தனர்.

இந்த நிலையில் 16 மணி நேர போராட்டத்துக்கு பின் மூழ்கிய கப்பலில் இருந்த 60 மாணவர்களும், மாலுமிகள் உள்ளிட்ட 4 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பாக பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...
கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதியைக் காலி செய்யுமாறு அறிவுறுத்தல்-


கொழும்பு கோட்டை ஸ்ரீஜயவர்த்தனபுர, மாதிவெல பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதியில் தங்கியிருக்கும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நான்கு வாரங்களுக்குள் விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற பிரதிச் செயலாளர் டபிள்யூ பி.டீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணிபுரிந்துகொண்டு 16 யுவதிகளுடன் தவறாக நடந்த பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு விளக்கமறியல்-

கொழும்பு இரத்மலானைப் பிரதேசத்தில் வைத்து அங்குள்ள நிறுவனமொன்றில் தொழில் புரியும் 16யுவதிகளுடன் பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மொறட்டுவை நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிலிப்பைன்ஸ் பிரஜை இரத்மலானை மாளிகாகந்த வீதியில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டின்பேரில் கல்கிசை பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தியக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் கைது-


இந்தியக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் நேற்று இந்திய கடலோரக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இலங்கை மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளும் இந்திய காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா யாஎலயில் 1000ரூபாய் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவர் கைது-

கம்பஹா மாவட்டம் யாஎல பிரதேசத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவரைப் பொலீசார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நேற்றிரவு மேல் மாகாண குற்றத்தடுப்புப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்களிடமிருந்து போலியாக அச்சிடப்பட்ட ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 30 மீட்கப்பட்டு:ளளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யால எலயிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் என்றும் மற்றையவர் வர்த்தகர் என்றும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான 3366 முறைப்பாடுகள் பதிவு-


கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 3366 முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் பாரதூரமான 773 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாலியல் வல்லுறவு, பெண்கள் கடத்தல், பணிபுரியும் வீடுகளில் வன்முறைகளுக்கு உட்படுத்துதல், காயமேற்படுத்துதல் போன்ற வன்முறைகளே பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். பொருளாதார ரீதியில் பெண்கள் பலவீனமடைந்துள்ளமையெ இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென்றும், இதன் காரணமாகவே பெண்கள் இலகுவில் வன்முறைகளுக்கு இலக்காக சாத்தியங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் இவற்றை தடுக்கமுடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை விபத்தில் மூவர் பலி, இருவர் காயம், சாரதி கைது-


மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள ஹபரண வீதியில் உள்ள தித்தம்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியிருப்பதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தம்புள்ள பொலீசார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் வேன் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் இந்த விபத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் குழந்தை பாட்டி ஆகியோர் பலியானதுடன், தந்தையும் மற்றொருவரும் காயமடைந்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படவிருந்த ஒருதொகை கடற்சிப்பிகளுடன் நால்வர் புத்தளத்தில் கைது-


இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படவிருந்த ஒருதொகை கடற்சிப்பிகளுடன் நால்வர் கற்பிட்டி பொலீசாரினால் கைதுசெய்யப்படடுள்ளனர். இவர்கள் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி முகத்துவாரம் தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதுடன், இவர்கள் பயன்படுத்திய படகும் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. 70 பொதிகளில் இடப்பட்டிருந்த சிப்பிகளும், நான்கு சந்தேகநபர்களும் கற்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
16 ஆவது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழ் ஜனாதிபதியிடம் கையளிப்பு




16 ஆவது சார்க் மாநாடிற்கான அழைப்பிதளை நேபாள வெளிவிவகார அமைச்சர் லியொன்போ உகென் ரெஷெரிங் அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

அதேவேளை பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் பியோ மரியானியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் விஜயசிங்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.







பயிற்றப்படாத பட்டதாரியல்லாத ஆசிரியர்களுக்கு துரித பயிற்சி நெறி ஆரம்பம

_Follow Virakesari on Twitter
நாடாளாவிய ரீதியில் பயிற்றப்படாத பட்டதாரியல்லாத ஆசிரியர்களுக்கென துரித பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வழங்கப்பட்ட மலையக தோட்டபபுறப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் உட்பட பயிற்றப்படாது இருந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவென தேசிய கல்வி நிறுவகமும் கல்வி அமைச்சும் இணைந்து மேற்கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் துரித பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கெனத் தெரிவான ஆசிரியர்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தற்போது தமது பெயர்களைப் பதிவு செய்து கொண்டதாகத் தெரிய வருகிறது. குறிப்பாக மலையகப் பகுதி ஆசிரியர்கள் மிகவும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டனர்.




செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம் மாணவர்களுக்கு கண்டி மனித அபிவிருத்தித்




வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலிருந்து இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கற்கை நெறிக்கு விண்ணப்பித்துள்ள 133 மாணவர்களுக்குரிய இரண்டு கல்வியாண்டுகளுக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்கு கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் முன்வந்துள்ளதாக இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைத்துறைகளின் தலைவர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

"வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலுள்ள மாணவர்களின் நலன் கருதி இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான கற்கைநெறியைத் தொடர்வதற்கான விண்ணப்பங்களை நாம் இலவசமாக வழங்கினோம்.

இதற்கேற்ப 133 மாணவர்கள் இந்தக்கற்கை நெறிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கான இரண்டு வருடங்களுக்குரிய கட்டணத்தினை வழங்குவதற்கு கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் முன்வந்துள்ளது.

இதன்படி இந்தக் கற்கை நெறிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் நாளை 23 ஆம் திகதி இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் வவுனியா அல்லது யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய கற்கை நிலையங்களுக்குச்சென்று தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பொது தேர்தலின் பின்னர் தமிழ்பேசசும் தலைவர்கள் என்னுடன் பேச வேண்டும்-



அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுப்பிரச்சினையையும் ஆராயாமல் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் பேசும் தலைவர்கள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் அமுல்படுத்தக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்குஅளித்த செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறுகூறி யுள்ளார். சீனாவுடனான எனது தொடர்புகள் குறித்து அவர்கள் (இந்தியர்கள்) சற்று கவலையடைந் துள்ளனர். சீனா ஜப்பான் உட்பட பல நாடுகள் இங்கு முதலீடு செய்கின்றன. ஆனால் இந்தியா எனது உறவு நாடு. ஏனைய நாடுகள் நண்பர்கள் என்றே நான் எப்போதும் கூறுகிறேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்..

அச்செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:.

ஜனாதிபதி தேர்தலில் மிகப் பெரிய வெற்றி

ஜனாதிபதித் தேர்தலில் 18 சதவீத அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், மாகாண சபைகளில் பெரும்பான்மையைக் கணக்கிட்டால் அது 2.5 மில்லியனாகும். அதில் ஒரு மில்லியனை நீக்கினால் 1.5 மில்லியன் பெரும்பான்மையில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் கிராமங்களில் உள்ள மக்களின் நாடியை அறிந்தவன் நான். கொழும்பு மாவட்டத்தில் கூட, மாநகர சபைக்கு வெளியே எனக்கு மக்கள் நல்ல பெரும்பான்மையைத் தந்தார்கள். ஆரம்பம் முதலே எனக்கு பெரும்பான்மை அங்கு கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். .

வடக்கு கிழக்கு மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நான் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் வாக்களிக்க வேண்டுமென்பதற்காகவும் தமது சொந்த ஜனாதிபதியை அவர்களாகவே தேர்ந்தெடுக்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நான் தேர்தலை நடத்தினேன். அதில் 26 சதவீதம் எனக்கு திருப்தியேற்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எனக்கு சில வாக்குகள் கிடைத்துள்ளன.

இறுதியான வெற்றியின் பின்னாலுள்ள காரணிகள்.

மக்கள் அனுபவத்தை எதிர்பார்த்தார்கள். தமது நாட்டை வழிநடத்த ஒரு அரசியல்வாதியை விரும்பினார்கள். 40 வருட காலமாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். திடீரென ஒரு இராணுவ மனிதர் உள்ளே வருகிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் பேசிய விதத்தாலும் போட்ட சத்தத்தாலும் மக்களை இழிவுபடுத்தியதாலும் அவர்கள் பயமுறுத்தப்பட்டார்கள். பொருளாதார விவகாரங்களில் அவர் (சரத் பொன்சேகா) தனது அனுபவமின்மையைக் காட்டினார். .

தவறான இலக்கின் மீது....

உண்மையில் என்னைப் பற்றி எதுவும் அவர் கூறவில்லை. இறுதி நாட்களில் மாத்திரம் சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். "அவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பேன்'. "அவரை உதைத்து வெளியில் தள்ளுவேன்' என்று சோமவன்ச (ஜே. வி. பி. தலைவர் அமரசிங்க) கூறியதை அவர் அங்கீகரித்தார். ""7 மணிக்கு நான் அங்கு சென்று அவரைக் கைது செய்து 2து2 சுற்றளவுள்ளதும் ஆகக் கூடிய பாதுகாப்பு சிறையுமான கண்டி போகம்பரை சிறையில் அடைப்பேன்'' என்றும் கூறினார். இதுதான் இராணுவம் என்று அவர் நினைத்தார். அவருக்கு சரியான முறையில் அறிவுரை கூறப்படவில்லை. .

அவர்களது முழு பிரசாரமுமே ஒரு குடும்பத்திற்கு எதிராக சேறு வீசுவதாக இருந்தது. இலங்கையின் கிராமப் புறங்களில் பாரிய அளவில் ஆதரவு எனக்குக் கிடைத்தது. கிராம அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன். .

"அதிக உணவு பயிரிடும்' இயக்கமும் இதில் ஒன்றாகும். 1948 முதல் 2005 வரையான காலப் பகுதியில் தனி நபரின் வருமானம் 1000 டொலராக உயர்ந்துள்ளது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட எனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் அது 2200 டொலராக எட்டியுள்ளது. இந்த அபிவிருத்தி மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மாற்றமடைந்துள்ளது. அதனை அவர்கள் (பொன்சேகா முகாமைச் சேர்ந்தவர்கள்) புரிந்து கொள்ளவில்லை. நான் எதிர்க்கட்சியில் இருந்திருந்தõல் வாழ்க்கைச் செலவைத் தவிர வேறொன்றையும் பேசியிருக்க மாட்டேன். கடைசியாக அவர்கள் அதனைப் பேச முற்பட்ட போது காலம் பிந்தி விட்டது. விடை எங்களுக்கு கிட்டியது. .

பிரசாரத்தை அவர்கள் நடத்திய விதத்தை கிராமங்களில் உள்ள மக்கள் விரும்பவில்லை. அதாவது, என்னைக் கைது செய்வது உதைத்து வெளியில் தள்ளுவது, கொலை செய்வது போன்றவைதான். அவ்வாறு நடப்பதை மக்கள் விரும்பவில்லை. கிராம மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதை அவர்கள் (பொன்சேகா முகாம்) அறியாமல் தப்புக்கணக்குப் போட்டு விட்டார்கள். கொழும்பை விட சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் எனக்கு வாக்களித்துள்ளார்கள். கண்டியில் சிலரும் ஏனைய நகரங்களிலும் எனக்கு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் விருப்பமெல்லாம் சமாதானம் நிறைந்த ஒரு வாழ்வாகும். அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. .

விடுதலைப் புலிகளை அழித்த உரிமை யாருக்கு?.

எனக்கு வாக்குகளை அளித்ததன் மூலம் மக்கள் கௌரவத்தை எனக்கே வழங்கியுள் ளனர். தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? மக்கள் நினைவு கூர்வது தாஜ் மஹாலை நிர்மாணித் தவரையா? மேசனையா? அல்லது பிரதம பொறியியலாளரையா?.

நாடாளுமன்ற தேர்தல் பற்றி....

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன். மக்கள் எங்களுடன் இருப்பார்கள். ஏழு வருட காலத்திற்கு அரசாங்கம் உறுதி நிலையில் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். .

மூன்றிலிரண்டு பெரும்பான்மை.

இந்தப் பெரும்பான்மையைப் பெற அல்லது அதற்குக் கிட்டிய வகையில் வெற்றி பெற எமக்கு சாத்தியமாகும் எனக் கருதுகிறேன். ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தார் பின்னர் வந்து என்னுடன் இணைவார்கள். (சிரிப்பு) .

ரணில் பிரதமராவாரா?.

இது தொடர்பில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் அதை செய்யமாட்õர். (நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயற்படமாட்டார்) எனவே அப்படி ஒரு சூழ்நிலை எழாது. பிரசாரத்திற்காக ரணில் தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்ற போது எனக் காகவே பிரசாரம் செய்தார். நான் தமிழிலில் பேசி வந்தேன். தனக்கும் தமிழ் தெரியும் என்பதைக் காட்டுவதற்காக சில வார்த்தைகளை அவர் பேசியுள்ளார். "போடா. மஹிந்த ராஜ பக்ஷ போடா' "' கோத்தாபய போடா' "பஸில் போடா' என்றார். மக்கள் அதிர்ச்சியடைந் தார்கள்..

எதிர்க்கட்சியின் பங்கு.

எதிர்க்கட்சி பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். விமர்சனங்களையும் கூற வேண்டும். ஆனால் எந்நேரமும் சேற்றை வீசக்கூடாது. அரசாங்கம் கொண்டு வரும் எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது. இலங்கை யில் இது ஒரு துரதிர்ஷ்ட விடயமாகவுள்ளது. வடக்கு கிழக்கு விவகாரத்தில் நாம் கொண்டு வரப் போகும் எத்தகைய தீர்விற்கும் எதிர்க்கட்சி பங்களிப்புச் செய்ய வேண்டும். ஏனெனில் எமக்குத் தேவை நிரந்தரமான சமாதானம். .

13 ஆவது திருத்தம்.

13 ஆவது திருத்தம் அவசரத்தில் கொண்டு வரப்பட்டதாகும். முழுப் பிரச்சினையும் நன் றாக ஆராயப்படவில்லை. நாட்டின் பூகோள வியல் பற்றியும் பிரச்சினையின் வரலாறு பின்னணி குறித்தும் அறிந்துகொள்ள வேண் டியது அவசியமாகிறது. அதனைப் புரிந்து கொள்ளாமல் நாட்டிற்குப் பொருத்தமான தீர்வொன்றினைக் கொண்டு வர முடியாது. அது ஒரு நடைமுறைத் தீர்வாக இருக்க வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படலாம். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசியல் அமைப்பில் உள்ளது. அது ஏனைய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படுகிறது. காணி மற்றும் எல்லாமே அமுல்படுத்தக் கூடியவை. வட மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தினோம். ஏப்ரல் 8 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளோம். முதலில் மக்களை மீள் குடியமர்த்த நினைத்தேன். இப்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 50,000 ற்கும் குறைவானவர்களே உள்ளனர். அவர்களில் பலர் போக விரும்பவில்லை. .

மேற்கு நாடுகள் இதனை புரிந்து கொள்ளவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அறிக்கை விடுகிறார்கள். மனிதாபிமான உதவிகள் பற்றிக் கேட்கிறார்கள். மனிதாபிமான உதவி தேவையில்லை என நான் கூறுகிறேன். எமது மக்களுக்கு உணவு வழங்கி அவர்களை நாங்கள் பராமரித்துக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து எந்த நேரத்திலும் உணவை பெற்றுக் கொள்ளலாம். அபிவிருத்தி உதவியே (வடக்கில்) எங்களுக்குத் தேவையெனக் கூறினேன். சமாதானமின்றேல் அபிவிருத்தியில்லை; அபிவிருத்தியின்றேல் சமாதானமில்லை.

பொலிஸ் சேவையில் தமிழர்கள்

கிழக்கு மாகாணத்திலிருந்து சுமார் 500 தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 450 வெற்றிடங்களுக்கு 7500 இளைஞர்கள் வந்தனர். தேர்தலுக்குப் பின் நியமனங்கள் வழங்கப்படும். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள். மீண்டும் பயிற்சி அளிக்கத் தேவையில்லை. பொலிஸ் கடமைகளை மட்டும் அவர்கள் கற்க வேண்டும். தமிழ் பகுதிகளில் அநேகமாக அவர்களை பணிக்கமர்த்தினாலும் தெற்குப் பிரதேசங்களுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தமிழ் முஸ்லிம் பெரும்பான்மை

கொழும்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்த நிலை மாறி இன்று அவர்கள் 30 வீதமாகியுள்ளனர். கொழும்பின் மேயரும் ஒரு முஸ்லிம் இனத்தவரேயாகும்.

அதிகாரப் பரவலாக்கல் குறித்த பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவேன். தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றை பலமுறை அழைத்தேன். அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பிரபாகரன் இருந்தவரை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதே வழி என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். .

நாட்டின் ஜனாதிபதி நானே நாட்டின் தலைவரும் நானே. அவர்கள் என்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்னுடன் உரையாட வேண்டும். என்னுடன் இணைந்து செயல்பட முடியாதென அவர்கள் கருதினால் புதிய தலைவர்கள் வருவார்கள். அவர்களுடன் நான் கலந்துரையாட வேண்டி நேரும். மேற்கு நாடுகள் என்னை விரும்புவதில்லை. எனது சுயாதீனக் கருத்துக்களையும் அவர்கள் விரும்புவதில்லை. எனது நாடே எனக்கு முக்கியம். மற்றொரு நாட்டுக்கு நான் ஏன் விசுவாசமாக இருக்க வேண்டும். நான் கிறீன்கார்ட் வைத்திருப்பவரல்ல. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு உதவியுள்ளன. யுத்தம் முடிந்து விட்டது. இப்போது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவேண்டியுள்ளது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் உதவ முன்வரும் ஏனைய நாடுகளையும் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளேன். அபிவிருத்தி உதவிகளே இப்போது தேவையாக உள்ளது.

சரத்பொன்சேகா கைது

பொதுச்சட்டத்திலும் பார்க்க இராணுவ சட்டம் வித்தியாசமானது. சரத்பொன்சேகா இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின் கீழ் இப்போது அவர் உள்ளார். சொகுசான மாடியொன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் வெற்றி பெற்றிருந்தால் நான் போகம்பரையில் 2ஙீ2 சுற்றளவான அறையில் இருந்திருப்பேன். அவரைப் பார்க்க சட்டத்தரணிக்கும் அவரது மனைவிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொஸ்கோவில் விருந்தொன்றில் இருந்த என் மனைவியுடன் அவர் (அனேõமா) தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறினார். "கேளுங்கள், அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவீர்கள் ' என அவருக்குக் கூறப்பட்டது. சாத்தியமான யாவுமே அனுமதிக்கப்பட்டது. அவரைத் தொந்தரவு செய்ய நாம் விரும்பவில்லை. எதைச் செய்தாயோ அதன் பலனை அப்பிறவியிலேயே அனுபவிப்பாய் என புத்த சமயத்தில் கூறப்பட்டுள்ளது. நல்லதோ கெட்டதோ மறுபிறவி வரை காத்திருக்கத் தேவையில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். யாரோ ஒருவர் எம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் பார்வை இருந்தால் ஒருவரும் தீங்கு செய்ய முடியாது என்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் நலனுக்காக திருப்பதிக்கு சென்றேன்.

பொன்சேகா வென்றிருந்தால்... .

பொன்சேகா வென்றிருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமானதாக அமைந்திருந்திருக்கும். இரத்தம் சிந்த நேரிட்டிருக்கும். எங்கெங்கும் சடலங்கள் காணப்படும். வீடுகள் தீப்பற்றியெரியும். தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 26 ஜனவரியில் உங்களுக்காக நாம் வருவோம் என அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது.





இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வுதான் தீர்வு அதற்கான முயற்சிகளை



இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்றும் அதற்கான அரசியல் தீர்வு காண முயற்சி களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு:

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கும்“ வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான முடிவினை ஏற்படுத்திடும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழ் மொழியை உயர் நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாச்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஜ





சனல் 4 தொலைகாட்சி ஒளிபரப்பிய காட்சிகள் உண்மையானவையே-









அமெரிக்க
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயும் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோ ளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்ததாக கொக்னி ரெக் என்ற அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிநவீன தொழில் நுட்பங் களை பயன்படுத்தி குறிப்பிட்ட காணொளிகள் உண்மை யானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

20 பிப்ரவரி, 2010

அமெரிக்க ஏவுகணை வீச்சு: பாக். தலிபான் தலைவர் ஹக்கானி மகன் பலி





அமெரிக்க ஏவுகணை வீச்சு: பாக். தலிபான் தலைவர் ஹக்கானி மகன் பலி
திரைப்படம் திரைப்படம்
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வடக்கு வரிசிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தலிபான் தலைவர்களின் ஒருவரான ஜமாலுதீன் ஹக்கானி குருப்பை சேர்ந்த வர்கள் பாஸ்டன் மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் அங்கு 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் தலிபான்களின் தலைவர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் முகமத் ஹக்கானியும் ஒருவன் என்று தெரியவந்துள்ளது.

இவன் அல்- கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் அதிரடி தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்து இருக்கிறான். இவன் தலிபான் தீவிரவாத இயக்கத்தில் 2-வது கட்ட தலைவராக செயல்பட்டு வந்தான்.

தனது அண்ணன் சிராஜூதீன் ஹக்கானியின் தலைமையின் கீழ் கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்தான். தலிபான்களின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் 2 முக்கிய தீவிரவாதிகளை அமெரிக்க ராணுவம் கொன்றுள்ளது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முகமது ஹக்கானியின் அண்ணன் சிராஜூதீன் ஹக்கானியையும் கொல்ல அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.



சரத் கைது : கிரிபாவ பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்




ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள குருணாகல் கிரிபாவ பிரதேசசபையில், ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கிரிபாவ பிரதேச சபைத் தலைவர் ஆர்.பி. குணரட்ண தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து இந்தப் பிரேரணையை எவ்வித விவாதங்களும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றின.



நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் : அனோமா பொன்சேகா





ஜனநாயக விழுமியங்கள் உணர்வற்று செயலிழந்து போயுள்ளன. ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முழு நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த நாட்டையும் மக்களையும் சிறைவாசம் அனுபவிக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

நீதி கிடைக்க வேண்டுமாயின் கடவுளிடம் மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, பொது மக்கள் அனைவரும் தத்தமது மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகா விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உட்பட அனோமா பொன்சேகா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு முகத்துவாரம் காளி கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் உரையாற்றும் போதே அனோமா பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நாட்டைக் கொடிய யுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தான் எனது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா. அவரை இன்று அரசியலில் ஈடுபட்டார் என்ற ஒரே காரணத்திற்காகப் பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவரது விடுதலைக்காக சட்டத்துடன் போராடும் அதேசமயம், ஆலயங்களை நாடி பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதைத் தவிர வேறு வழி கிடையாது. ஏனென்றால் இன்று இலங்கையில் மிக மோசமான குடும்ப ஆட்சி மேலோங்கியுள்ளது" என்றார்.

இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் கூறுகையில்,

"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது காணப்படும் வன்முறைச் சூழலில் பாதுகாப்புகள் பறிக்கப்பட்ட நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது.

ஆனால், அரசாங்க வேட்பாளர்களுக்குச் சகல பாதுகாப்புகளும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான நிலையாகும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒருபோதும் ஜனநாயக முறையில் நடைபெறாது. எதிர்க்கட்சிகள் மிக மோசமான வன்முறைச் சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு எதிரொலிஅமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்
தூதரை நேரில் அழைத்து ஆட்சேபனை
தலாய்லாமாவை ஒபாமா சந்தித்தது தொடர்பாக, அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரை நேரில் வரவழைத்து, தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஒபாமா சந்திப்பு திபெத் பகுதியை 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனா ஆக்கிரமித்து வருகிறது. திபெத்துக்கு சுயாட்சி கோரி, திபெத்திய புத்தமத தலைவர் தலாய்லாமா, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார். ஆனால் அவரை யாரும் சந்திக்கக் கூடாது என்று உலகத் தலைவர்களை சீனா மிரட்டி வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க தலாய்லாமா திட்டமிட்டார். ஆனால் தலாய்லாமாவை சந்தித்தால், அமெரிக்க-சீன நட்புறவு பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கையையும் மீறி, நேற்று முன்தினம் தலாய்லாமாவை ஒபாமா அழைத்துப் பேசினார். அப்போது, திபெத் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பால், சீனா கடும் கோபம் அடைந்துள்ளது. சீனாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்ஸ்மேனை சீன துணை வெளியுறவு மந்திரி குய் தியாங்கை நேரில் வரவழைத்து, தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார். கடும் கண்டனம் மேலும், அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மா ஜாவோசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தலாய்லாமாவை ஒபாமா சந்தித்ததற்கு சீனா தனது கடும் அதிருப்தியையும், உறுதியான எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது. இது, சர்வதேச உறவுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளை முற்றிலும் மீறிய செயல். அமெரிக்க-சீன கூட்டு அறிக்கையையும் மீறிய செயல். திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்வதாகவும், திபெத் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அமெரிக்கா பலதடவை உறுதி அளித்துள்ளது. இந்த சந்திப்பு, அதற்கு எதிராக அமைந்துள்ளது. தலையிடாதீர் சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது. சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது. அமெரிக்க-சீன உறவுகளில் ஆரோக்கியமான, சீரான வளர்ச்சி ஏற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும். இச்சந்திப்பால் ஏற்படும் கெட்ட விளைவுகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விளக்கம் இதற்கிடையே, ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா ஏற்கிறது. அதே சமயத்தில், திபெத் பகுதியின் மனித உரிமைகள் குறித்து கவலைகொள்கிறது. அப்பகுதியின் கலாசார உரிமைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்போம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



சொந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு வந்தார்:
விமானத்தால் மோதியவரின் அடையாளம் தெரிந்தது
3 பேர் பலி



அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் உள்ள உள்நாட்டு வருவாய் சேவை அலுவலக 7 மாடி கட்டிடம் மீது நேற்று முன்தினம் இரவு ஒரு குட்டி விமானம் மோதியது. இதையடுத்து கட்டிடம் தீப்பிடித்துக் கொண்டது. இதில், விமானத்தில் வந்து மோதியவர் உள்பட 3 பேர் பலியானார்கள். 13 பேர் காயம் அடைந்தனர். இது முதலில் தீவிரவாத தாக்குதல் என்று கருதப்பட்டது.

ஆனால், ஜோசப் ஆன்ட்ரூ ஸ்டேக் (வயது 53) என்ற கம்ப்ïட்டர் என்ஜினீயர், வருவாய் சேவைப்பிரிவு மீதான கோபத்தில், இந்தச் செயலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் ஒரு இணையதளத்தில் எழுதி இருந்த தற்கொலைக் குறிப்பு சிக்கி உள்ளது. அவர் ஆஸ்டினில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு, ஜார்ஜ்டவுன் நகரில் இருந்து விமானத்தை கிளப்பி வந்து மோதியதாக தெரிய வந்துள்ளது.



சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில், ஆயுத ஒழிப்பு பற்றிய ஐ.நா. மாநாடு



அமெரிக்காவின் மூலப்பொருட்களை கொண்டுஇந்தியா, ஆண்டுக்கு 100 அணு ஆயுதங்களை தயாரித்துவிடும்பாகிஸ்தான்அலறல்சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில், ஆயுத ஒழிப்பு பற்றிய ஐ.நா. மாநாடு நடைபெற்றது. அதில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் ஜமீர் அக்ரம் பேசுகையில், ஆக்கப்பூர்வ பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்து பெறும் அணு மூலப்பொருட்களை இந்தியா அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், அது ஆண்டுக்கு 100 அணு ஆயுதங்களை தயாரித்து விடும் என்றும் கூறினார்.

அதற்கு இந்திய தூதர் ஹமீது அலி ராவ் மறுப்பு தெரிவித்தார். தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி, ஐ.நா. முயற்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

19 பிப்ரவரி, 2010

அதிபர் சகோதரர் பசிலும் இலங்கை தேர்தலில் போட்டி



கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், அவரின் நெருங்கிய ஆலோசகருமான, பசில் ராஜபக்ஷே, வரும் ஏப்., 8ம் தேதி நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் செய்தார். இலங்கையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்பகா மாவட்டத்தில், நேற்று பசில் ராஜபக்ஷே, தன் மனுவை தாக்கல் செய்தார். இவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.
இலங்கையில் பொது தேர்தலுக்கான, மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 26ம் தேதி. இந்த பொதுத் தேர்தல் மூலம் 225 உறுப்பினர்கள் பார்லிமென்டிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில், 196 பேர் மட்டுமே ஓட்டுப்பதிவு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சிய 29 பேர், பிரதிநிதிகள் அமைப்பின் கீழ் உள்ள தேசிய பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவர்.
இலங்கையின் வடபகுதியில் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க, சென்ற டிசம்பரில் இந்தியா வந்த மூன்று உறுப்பினர்கள் குழுவில், பசில் ராஜபக்ஷே இடம் பெற்றிருந்தார். அதிபரின் செயலர் லலித் வீரதுங்கா மற்றும் பாதுகாப்பு செயலரும், அதிபரின் மற்றொரு சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற இருவர். இக்குழு, போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக, இந்தியாவிடம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.



குழந்தைப் புலிகள் விடுதலை : இலங்கை அரசு அறிவிப்பு



கொழும்பு : "விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த, குழந்தை புலிகள் அனைவரும் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த 18 வயதிற்கு குறைவான குழந்தைப் புலிகள் 510 பேர், கடந்த ஆண்டு மே மாதம் அரசிடம் சரண் அடைந்தனர். ராணுவத்துடனான சண்டையில் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, சரணடைந்த அவர்களை, கோர்ட் உத்தரவின் பேரில், ஒரு ஆண்டு காலத்திற்கு மறுவாழ்வு முகாமில் வைக்க உத்தரவிடப்பட்டது. மறுவாழ்வு திட்ட பயிற்சிகள் முடிவடைந்ததும் விடுவிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. சமீபத்தில், 150 குழந்தைப் புலிகள் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 273 குழந்தைப் புலிகள், கொழும்பின் புறநகர்ப் பகுதியான ரத்மாலனாவில் உள்ள முகாமில் தங்களின் படிப்பை தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் உட்பட அனைத்து குழந்தைப் புலிகளும் மே மாதத்திற்குள் விடுவிக்கப்படுவர். சில பெற்றோர்கள், மறுவாழ்வு முகாம்களில் உள்ள தங்களின் குழந்தைகளை ஏற்க மறுக்கின்றனர். அப்படி ஏற்க மறுக்கும் குழந்தைகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அதன் பின், கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



‘ஜே. வி. பி. அலுவலகம் சோதனையிடப்படவில்லை’

பொலிஸ் பேச்சாளர்


ஜே. வி. பி. யின் தலைமை அலுவலகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது எனப் பொலிஸ் ஊடகப் பேச் சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் பிரஷாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் சோதனைத் தடையொன்றை ஏற்படுத்துமுகமாக பொலிஸார் அங்கு சென்றிருந்ததாகவும் ஆனால், கட்சி அலுவலகத்தைச் சோதனையிட அவர்கள் செல்ல வில்லையென்றும் பொலிஸ் பேச் சாளர் ‘தினகரனுக்கு’க் கூறினார்.

எனினும், பெலவத்தையில் உள்ள தமது தலைமை அலுவலகம் நேற்றுக் காலை (19) பொலிஸாரினால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜே. வி. பி. யின் பேச்சாளர் விஜித ஹேரத் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் அனு மதி பெற்றே கட்சித் தலைமையக த்தைச் சோதனையிடுவதாக பொலிஸார் கூறியதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலென்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.




29 சுயேச்சைக் குழுக்கள் நேற்றுவரை கட்டுப்பணம்



பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரை 29 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு சுயேச்சைக் குழுவும், அம்பாறையில் 4 சுயேச்சைக் குழுக்களும், கொழும்பில் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் வவுனியாவில் மூன்று சுயேச்சைக் குழுக்களும், குரு ணாகலில் 2 குழுக்களும், யாழ்ப்பாணத்தில் இரண்டு குழுக்களும், கம்பஹாவில் 5 குழுக்களும், கண்டியில், கேகாலையில், மாத்தளையில் தலா ஒரு சுயேச்சைக் குழு வீதமாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

மட்டு. மாவட்டத்தில் நூறு முகம்மது ஜமால்தீன் என்பவரின் தலைமையில் ஒரு சுயேச்சைக் குழுவும் தம்பிலெவ்வை ஜெளபர் கான் தலைமையில் மற்றுமொரு சுயேச் சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள் ளன. நேற்று நண்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவத ற்காக நேற்று வரை 4 சுயேச்சைக் குழு க்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.



இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உடன் விண்ணப்பிக்க வேண்டுகோள்


வடக்கிலும், கிழக்கிலும் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் வாழும் வாக்காளர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு உடனடியாகத் தேர்தல்கள் தலைமையகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்பதற்கான இறுதித் தினம் எதிர்வரும் 26 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர் ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், மிகக் குறைவான வாக்காளர்களே விண்ணப்பித் துள்ளனர். இதனால், திகதி நீடிப்புச் செய்யப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் பீ. குகநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

தமது அலுவலகத்திற்குக் கிடைத்துள்ள; கிடைக்கும் விண்ணப்பங்களையும் ஆணையாளருக்கே அனுப்பிவைப்பதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர், உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் தலைமையகம் ஆகிய ஏதாவதொரு அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும்.

கம்பஹா மாவட்டத்தில் பசில் தலைமை வேட்பாளர்

21 பேர் கொண்ட குழு வேட்பு மனுவில் கையெழுத்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்திற்கான வேட்பாளர் நியமனப்பத்திரம் நேற்று (19) கைச்சாத் திடப்பட்டது.

முதன்மை வேட்பாளரான முன்னாள் எம்.பியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலை மையிலான வேட்பாளர் குழு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று சுபவேளையில் நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திட்டது.

சர்வமதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் நடந்த இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் கலந்து கொண்டார்.

கம்பஹா மாவட்டத்தின் வேட்புமனுவின் 21 வேட்பாளர்கள் அடங்குகின்றனர். இதில் இரண்டாவது தலைமை வேட்பாளராக கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா போட்டியிடுகிறார். மேலும் ஜாதிக ஹெலஉறுமயவின் அதுரலிய ரத்னதேரர், அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, லசந்த அழகியவன்ன, சரத் குணரட்ன, கலாநிதி மேர்வின் சில்வா, பியசிறி விஜேநாயக்க ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரண குணவர்தன, துலிப் விஜேசேகர, அஞ்சான் உம்மா, உபாலி குணரட்ன, நீல் ரூபசிங்க ஆகியோரும் உள்ளடங்கு கின்றனர். தவிரவும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சட்டத்தரணி சிசிர ஜயகொடி, சந்தன ஜயகொடி ஆகியோரும் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மனைவி வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் சகோதரர் ருவன் ரணதுங்க மற்றும் வசந்த சேனநாயக்க, காமினி விஜேசிங்க, துஷ்யந்த வி. மஹபதுகே ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்



பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக் களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும், ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நுவரெலியா மாவட்ட த்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது.

புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ (நிஹய்ஹ ஷிலீற்ட்ஹ ஜிலீழ்ஹசீன்ய்ஹ) தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக் களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்க ளைத் தாக்கல் செய்யுமென கட்சி வட் டாரங்கள் கூறின.

ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடி வுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


நெடுந்தீவு - குறிகட்டுவான்
குமுதினியில் பயணம் செய்ய 120 பேருக்கு மட்டுமே அனுமதி


நெடுந்தீவு, குறிகட்டுவான் பயணிகள் படகு குமுதினியில் ஒரு தடவை பயணி க்கும் பயணிகளின் தொகை 120 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வியாபாரிகளோ பயணிகளோ தம்முடன் பெரிய அளவில் பொருள்களடங் கிய பொதிகளை படகில் ஏற்றிச்செல்ல முடியாது எனவும் இந்த நடைமுறைகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இங்கே தொடர்க...




ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்தவருக்கு 120 கசையடி




சவுதிஅரேபியாவில் அல் மசார்கா என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர் அரசாங்கத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்து கொண்டார். இது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் ஆகும். இதனால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஒரே நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இஸ்லாமிய சட்டப்படி குற்றம் என்பது எனக்கு தெரியாது என்று அவர் கோர்ட்டில் கூறினார்.

இந்த குற்றத்துக்கு இஸ்லாமிய சட்டப்படி கல் எறிந்து கொல்லலாம். ஆனால் நீதிபதி அதிகபட்ச தண்டனை கொடுக்காமல் அவருக்கு ஒரு மனைவிக்கு 20 கசையடிகள் என்று 6 மனைவிகளுக்கும் 120 கசையடி கொடுக்கும்படி தீர்ப்பு கூறினார். அதோடு அவர் திருக்குரான் புத்தகத்தில் இருந்து 2 அத்தியாயங்களை மனனம் செய்யவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் தடை விதித்தது.



அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது
மீண்டும் அதிபராக ஆதரவு இல்லை




அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது ஒபாமாவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. இப்போது அது சரிந்து விட்டது. 2012-ம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெறவும் அவருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.

சரித்திர சாதனை

அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக முடிந்தது இப்போது தான். இந்த சாதனையை ஒபாமா சாதித்தார். மெஜாரிட்டியான வெள்ளையர்கள் இருக்கும் நாட்டில் ஒரு கறுப்பர், அதுவும் ஆப்பிரிக்க தந்தைக்கு பிறந்த ஒரு கறுப்பர் வெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு தான்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஜனாதிபதி கென்னடியுடன் அவரை ஒப்பிட்டு பேசினார்கள். ஆனால் அவருடைய செயல்பாடுகள் நடவடிக்கைகள் எதுவும் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப இருக்கவில்லை. இதனால் அவருடைய செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.

அதிருப்தி

அவர் வெற்றி பெற்ற நேரத்தில் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து கிடந்தது. இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை. ஒபாமா இவற்றை எல்லாம் சரிசெய்து விடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் அதன் பலன்கள் எதிர்பார்த்தபடி இல்லை. அமெரிக்க இளைஞர்கள் இன்னும் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். ஒபாமா ஜனாதிபதியாகி ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையிலும் போதிய முன்னேற்றம் இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக ஒரு டி.வி.சேனல் கருத்துக்கணிப்பு நடத்தியது. 1,023 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

ஆதரவு இல்லை

2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை ஆதரிப்பீர்களா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர்கள் 52 சதவீதம் பேர் ஒபாமா ஜனாதிபதியாக ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். 44 சதவீதம் பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.

ஒபாமாவின் ஒட்டுமொத்தப்பணிகள் நன்றாக இருப்பதாக 47.8 சதவீதத்தினரும், சரி இல்லை என்று 45.9 சதவீதத்தினரும் தெரிவித்தனர்.


அமெரிக்காவில்
7 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியது
தீவிரவாதிகள் தாக்குதலா?




அமெரிக்காவில் 7 மாடி கட்டிடம் மீது நேற்று திடீர் என்று சிறிய விமானம் மோதியது. இந்த செயல் தற்கொலை படை தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 மாடி கட்டிடம் மீது மோதியது

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ் அலுவலக வளாகத்தை (எப்.பி.ஐ) அடுத்து 7 மாடி கட்டிடத்தில் வரி வசூல் அலுவலகம் உள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் (அமெரிக்க நேரம் காலை 9.40) அந்த கட்டிடத்தின் மீது `ஒரு என்ஜின்' கொண்ட சிறிய விமானம் திடீர் என்று பறந்து வந்து மோதியது. அப்போது அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் வந்து மோதியதால், அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீ அணைக்கும் படையினரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த கட்டிடத்தில் இருந்த 199 பேர்களை, பாதுகாப்பு படையினர் வெளியேற்றினார்கள். தீ அணைக்கும் படையினர், தீயை அணைத்தனர்.

தற்கொலை படை தாக்குதல்?

இந்த சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த சிலர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது, தீவிரவாதிகளின் தற்கொலை படையினரின் தாக்குதலாக இருக்குமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் என்ற பெண்,`` விமானத்தை ஓட்டி வந்தவர் மிக தெளிவாக காணப்பட்டார். விமானமும் சீரான வேகத்தில் வந்து மோதியது. நான் காரில் வந்த போது இந்த காட்சியை நேரில் பார்த்தேன்`` என்று கூறினார்.

ஏற்கனவே

அந்த சிறிய விமானம் திருடப்பட்ட ஒன்று என்பது விசாரணையில் வெளிப்பட்டு இருக்கிறது. விமானத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் கதி என்ன? என்பது அறிவிக்கப்பட வில்லை. இதில் எந்த வித தீவிரவாத தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் நிïயார்க் நகரில் இருந்த மிகப்பெரிய வணிக வளாக 110 மாடி இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது விமானத்தில் வந்து மோதியதும், இதனால் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்து 3 ஆயிரம் பேர் வரை இறந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நாளில் வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடத்தின் மீதும் தீவிரவாதிகள் விமானத்தை மோதி பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.



சீனாவின் எச்சரிக்கையையும் மீறி
தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்



திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா(வயது 74) அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், நேற்று வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை திட்டமிட்டபடி சந்தித்து பேசினார். அப்போது, திபெத்திய பிரச்சினைக்கு தீர்வு காண உதவும்படி ஒபாமாவை அவர் கேட்டுக் கொண்டார்.

வழக்கமாக ஒபாமா உலக தலைவர்களை தனது ஓவல் அலுவலகத்தில்தான் சந்திப்பார். ஆனால், தலாய் லாமாவை நேற்று அவர் தனது திட்டமிடல் அறையில் சந்தித்து பேசினார். தலைவர்கள் இருவரது சந்திப்பும் தனிப்பட்ட முறையிலானது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகைக்கு தலாய் லாமாவை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...