15 பிப்ரவரி, 2010


ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கவில்லை


சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராணுவ சட்டத்தின் 129ஆவது உறுப்புரையை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் முன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன.

இராணுவத்தினர் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புரிந்துள்ளனர் என ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்தே அவருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள முக்கியமான குற்றச்சாட்டாக கருதப்படுகிறது என்று நேற்று வெளியான வாரப் பத்திரிகைகள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெனரல் பொன்சேகா அங்கிருந்தவாறு இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் என்றும் அதற்கான சட்சியங்களை இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அந்த செய்திகளில் வெளியாகியிருந்தன.

இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் கீழ் இரண்டு வழக்குகள் தொடரப்படவுள்ளன என்றும் இது தொடர்பில் சட்டத் துறையினர் கலந்தாலோசித்து வருகின்றனர் என்றும் வேறு சில செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இராணுவ சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக இராணுவ நிதிமன்றத்தில் ஒரு வழக்கும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக சாதாரண நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்குமாக இரண்டு வழக்குகளே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் ஸ்டேட் ரைம்ஸ் எனும் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காணாமல் போதல் தொடர்பான 6 சம்பவங்களுடன் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்புபட்டுள்ளார் எனும் தகவலையும் பாதுகாப்பு செயலாளர் இதன் போது வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர், ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.

உரிய சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டதன் பின்னரே அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறிய இராணுவ பேச்சாளர், இராணுவ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படும் போது தான் விரும்பும் சட்டத்தரணிகளூடாக தன்னை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை முன்வைக்கவோ, மேன்முறையீடு செய்யவோ அல்லது இராணுவ நீதிமன்றத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு செல்லவோ முடியும். அதற்கான சட்ட அனுமதி ஜெனரல் பொன்சேகாவுக்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.




நவநீதம் பிள்ளையின் கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா



இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்க முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

"இது உள்நாட்டு விவகாரம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் தனிப்பட்டவர்களின் பல்வேறு நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதனை தெரிவிக்கவேண்டும்.

அடுத்த விடயம் யாதெனில் யாரும் கோரிக்கைகளை விடுக்கலாம். பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் கோரிக்கைகள் விடுக்கப்படலாம். ஆனால் எமது கைகளிலேயே விடயங்கள் உள்ளன. இது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்பதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்தம் முடிந்தவுடன் இலங்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். அவை அந்த சந்தர்ப்பங்களில் முடிவுக்கு வந்தன.

மேலும் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற இலங்கை விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அமோக வெற்றியீட்டியதையும் நினைவூட்டுகின்றோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது தற்போது மீண்டும் போர் குற்றங்கள் மற்றும் சுயாதீன விசாரணைகள் என்று கோரிக்கை விடுக்கப்படும்போது அவற்றுக்கு பதிலளிக்க முடியாது என்பதனையே கூறவேண்டியுள்ளது. " எனத் தெரிவித்தார்




அன்னத்தில் போட்டியிட இணங்காவிடின் மாற்றுக் கூட்டணியில்
களமிறங்குவோம்:ஜே.வி.பி




ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறையில் தனிமைப்படுத்தி விட்டு அரசியல் இலாபத்திற்காக செயற்பட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தார்மீக உரிமை கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் "அன்னம் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம்' இல்லையென்றால் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்திய விரிவான மாற்றுக் கூட்டணியுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவோம் என்று ஜே. வி. பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பாஸிஸவாத போக்கும் சர்வாதிகார அடக்கு முறைகளும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மேலோங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே. வி. பியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் கூறியதாவது,

"நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விட எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் பாரியளவிலான அடக்கு முறைகளையும் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் சந்திக்க நேரிடும். ஏனென்றால் அரசாங்கம் தனது பாஸிஸவாத போக்கை விஸ்தரித்து வருகின்றது.

இதன் வெளிபாடுகளாகவே ஜனாதிபதி தேர்தலின் பின் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை சட்டத்தின் தேவையெனக் கூறி அரசியல் தேவைக்காக சிறை வைத்திருத்தல், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அரசாங்கத்தின் குண்டர்கள் தாக்கும் போது பொலிஸார் மௌனமாக இருந்தமை, அதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது கண்ணீர்ப் புகை, தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை என்பவற்றைக் கொள்ளலாம். லங்கா பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறை வைக்கப்பட்டமை, லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் காணாமல் போனமை உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களும் அடக்கு முறைகளும் மேலோங்கியுள்ளன.

41 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கே இந்த நிலையென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை எவ்வாறு இருக்கும். எனவே அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கு வலுவான ஒரு கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளினால் அமைக்கப்பட வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்ந்தும் அன்னம் சின்னத்தினைக் கொண்ட கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதையே விரும்பினார். ஆனால் ஐ. தே. க. யானை சின்னத்தில் போட்டியிடுவதாக செய்திகள் பரவின. இது உண்மையென்றால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அன்னச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட முடியாது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் அன்னச் சின்னத்தில் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. தற்போதைய தேவை சின்னம் என்பதை விட நாட்டுக்கு தேவையான ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியே என்பதை சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்





ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன்



என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவுடன் யுத்த சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருமலையிலுள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம், தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மேலும் பேசிய ஐ. சம்பந்தன் கூறியதாவது.

மாவட்ட ரீதியாக வேட்பாளர் தெரிவு

நாங்கள் மாவட்ட ரீதியாக வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம், மாவட்ட ரீதியாக மக்களால் முன்மொழியப்படும் பிரதிநிதிகள் தொடர்பாக எமது கட்சியின் உயர்பீடம் கொழும்பிலே வரும், செவ்வாய், புதன்கிழமை கூடி பிரதிநிதிகளை உறுதி செய்யவுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக எமது கட்சியை விட்டு மக்களைப் பிரிக்க அரசு பல்வேறு சதிகளை செய்துவருகிறது. அதனையிட்டு நாம் கவலையடையவில்லை. நாம் எமது மக்களின் கோரிக்கையில் உறுதியாகவுள்ளோம்.

நாங்கள் எமது போராட்ட வரலாற்றில் முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.

அந்தக் காலத்தில் 94 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்பட்டு விட்டன. ஒஸ்லோப் பேச்சுவார்த்தையில் இரு பகுதியினரும் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கு இணங்க வேண்டும் என்பது முடிவாகியிருந்தது. அவை துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை.

ஆனாலும் நாம் மக்களின் கோரிக்கையை அரசியல் உரிமைகளைத் தாரை வார்த்து, ஒருக்காலும் செல்ல மாட்டோம். நாங்கள் ஒரு போதும் நாட்டை பிளவுபடுத்திச் செல்லவில்லை. இந்தியாவில், பிரான்சில், சுவிசர்லாந்தில் இருப்பது போன்று அந்தந்த மாநில மக்கள் அவர்களது தேவைகளை பரிபாலனங்களைச் செய்கிறார்கள்.

சுய நிர்ணய உரிமைகளே தேவை

அதேபோன்று எமது தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீகமாக வாழும் பகுதியில் உள்ள சுய நிர்ணய உரிமைகளையே நாம் கேட்கிறோம். நாம் இதனை பலமுறை பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தியுள்ளோம்.

அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து சாத்வீகமாக போராடவும் தயங்கமாட்டோம்.

சிங்கள மக்கள் நிச்சயமாக இதனை, எமது நிலைப்பாட்டை உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள். தந்தை செல்வா ஒரு காலத்தில் தெரிவித்தார், தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளும் சிங்களத் தலைமைகள் இந்த நாட்டில் தோன்றவில்லை. ஆனால் அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

நான் இங்கு வர முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேசிவிட்டுத்தான் வந்தேன். இத்தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் இணைந்து ஒற்றுமையாகவுள்ளோம். அண்மையில் கல்முனையில் என்னை முஸ்லிம் மக்கள் கௌரவித்தார்கள். இது தந்தை செல்வாவினால் வளர்த்து வரப்பட்ட இக்கட்சியின் கொள்கைக்குக் கிடைத்த பாராட்டாகும்.

இன்று ஜனாதிபதி சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளார். அதனால் ஜனாதிபதி ஆட்சி, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று எமது தமிழ் பேசும் மக்களும் முழுமையான வாக்களிப்பைச் செய்து மக்களின் அந்த அதிகாரத்தைத் தர வேண்டும். அதன் மூலம் எமது உரிமைகளை கோரிக்கைகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்திடம் உரத்துக் கேட்க முடியும்.

நீங்கள் அளிக்கும் அதிகப்படியான வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை நீங்கள் தேர்தலில் காட்ட வேண்டும்.

இந்த அரசு இரகசியமான சூழ்ச்சிகரமான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அதாவது எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அவர்களை சிறுமைப்படுத்தி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மையாக இருந்தால் தானே உரிமை பற்றி பேச முடியும்?

அரசின் முயற்சி ஒரு நாளும் பலிக்காது. அதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை கடந்த தேர்தலில் காட்டியுள்ளனர். இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். விவேகமாக ஆளும் கட்சியுடன் சேர்ந்துதான் அடிமைகளாகி என்றாலும் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என எவராவது சிந்தித்தால் அது தவறான வழியாகும். நாம் கடும் போக்கைச் சிந்திக்காமல் தொடர்ந்து செயற்பட்டு எமது தீர்வைப் பெறுவோம், அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்




பயன்படுத்த வேண்டும்



ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற தோரணையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து மக்களின் செயற்பாடுகளை முடக்கி விட்டு அதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அரசாங்கம் எண்ணுகின்றது. அது ஒருபோதும் நடக்காது. ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை உருவாக்க மக்கள் பொதுத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சிறைவாசம் அனுபவிக்கும் அதேவேளை கே. பி. அரச பாதுகாப்பு இல்லத்தில் சுகபோகத்துடன் இருக்கின்றார். எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி நாடு பூராவும் 20 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம். தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

"ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தமையை எதிர்த்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் எதிர்க்கட்சிகள் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை குழப்ப அரசாங்க தரப்பினர் தாக்குதல்களை நடத்திய போதிலும் கலைந்து செல்லாமல் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

அது மாத்திரமல்லாமல் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடக்கு முறையினை மேற்கொள்வதன் மூலம் ஊடக சுதந்திரத்தையும் இந்த அரசாங்கம் பறித்துள்ளது. இதன் மூலம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஊடகங்களில் வெளிவரவிடாமல் அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது.

அது மாத்திரமல்லாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம் என அரசாங்கம் கூறி வருகின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதை விட இவர்களால் வெற்றி பெறக் கூட முடியாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு வாக்களித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் ஏற்பட்ட மோசடிகள் தொடர்பாக நாம் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும்.

அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு அதற்கு மாற்று வழிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் நாம் கலந்தாலோசிக்கவுள்ளோம். அதன் மூலம் எதிர்வரும் தேர்தலை சுயாதீனமானதும் சுதந்திரமானதுமாக நடத்தி முடிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதையே ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் விரும்புகின்றனர். எனவே நாம் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இருந்த போதும் எமது கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நாம் நடத்தி வருகின்றோம். அவ்வாறு மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுமானால் அதனை எமது செயற்குழுவை கூட்டி ஆராய்ந்தே கூற முடியும்.

இன்று நாட்டில் ஜனநாயகத்திற்கெதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அதற்கெதிராக செயற்படுவோர்கள் தாக்கப்படுகின்றார்கள். அவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்பட விடாமல் அரசாங்கம் அடக்கு முறைக்குட்படுத்துகின்றது.

அதேபோன்று சுகத் ஹேலியகொட என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காது உள்ளது. எனவே ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
வன்னிப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.



வன்னிப் பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது மேலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. மருதோடை, வவுனிக்குளம், முள்ளியவளை, குமிழமுனை, ஆத்தான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலேயே இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளைமோர் குண்டுகள் 05, ரி56 ரக துப்பாக்கி மற்றும் எம்.16 ரக துப்பாக்கி என்பவற்றுக்கான ரவைகள் மற்றும் ரி.என்.ரி வெடிபொருட்கள் உள்ளிட்ட மேலும் சில இராணுவ உபகரணங்களே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர அடையாளம் தெரியாத நவீனரக பாரிய ஆயுதமொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது


இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் 

இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தும்படி இந்திய மத்திய அரசாங்கத்தைக் கோரப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அதிகாரம் குறித்து ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் தமிழக முதல்வர் கருத்துரைக்கையில், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி  

குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மதியம் கிளிநொச்சியிலுள்ள உதயநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினை காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவியின்மீது சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும், முதுகுப்புறமாக பலத்த கத்திக்குத்துக் இலக்கான எல்.அமிர்தகௌரி (65) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மட்டக்களப்பு நாவலடியில் இளம் யுவதியின் சடலமொன்றினை பொதுமக்களின் தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.


மட்டக்களப்பு நாவலடியில் இளம் யுவதியின் சடலமொன்றினை பொதுமக்களின் தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பெண் திருமலை தோப்பூர் பட்டித்திடலை சேர்ந்த செல்வராசா திலகவதி (29) என இனங்காணப்பட்டுள்ளார். இது கொலையா?, தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் தரம் ஒன்றில் கல்விகற்ற மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியருக்கு 3வருட கடுழீய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பொ.சுவர்ணராஜா விதித்துள்ளார். குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,பாதிக்கப்பட்டமாணவிக்கு ஒரு இலட்சத்து 50ஆயிரம் பணமும் வழங்கவேண்டுமென நீதிபதி பணித்துள்ளார். அத்துடன் இத்தீர்ப்பு குறித்து நீதிபதி தெரிவிக்கையில் குற்றம் புரிந்தவர்கள் சமூகத்தில் எந்நிலையில் இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படுமென்பதற்கு ஒரு சான்றாகும் என்றார். இதேவேளை காத்தான்குடியில் தனது மனைவியை தீயிட்டுகொளுத்தி கொலை செய்த நபருக்கு 10 வருட கடுழிய சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.



பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளின் ஒன்றான பிரிஸ்டல் வீதி இன்றுமுதல் மக்களின் பாவனைக்காக
 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகளின் ஒன்றான பிரிஸ்டல் வீதி இன்றுமுதல் மக்களின் பாவனைக்காக முற்றாக திறந்து விடப்படவுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தவீதி கடந்த 24வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே பாவனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இரவுநேரத்தில் அது முற்றாக மூடப்பட்டிருந்தது. கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தவீதி, கடந்த 1986ம் ஆண்டு சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து ஜே.வி.பி இன்று எதிர்ப்பு நடவடிக்கை


அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து ஜே.வி.பி இன்று எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தது. இதன்போது எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலீசாருக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்ற தாக்குதலில் பொலீஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஆறுபேரைக் கைதுசெய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் நகரில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால் வீதியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்காத நிலையில் முறுகல்நிலை ஏற்பட்டதாகவும், இந்த நிலைமையில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பொலீசாரின் உத்தரவை மீறி செயற்பட்டதால் அவர்கள்மீது தடியடிப் பிரயோகம் நடத்த நேரிட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.



ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு

 

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாத்தறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவே வெற்றிபெற்றார் என்றால் ஏன் பொதுத் தேர்தலில் மாத்திரம் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தர்க்கத்திற்குரிய விடயமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்ளிருந்து மூன்று கைக்குண்டுக

அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள்ளிருந்து மூன்று கைக்குண்டுகள் பொலீசாரினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட புலிச் சந்தேகநபர்கள் இருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த வீரக்கொடி தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட ஒருவரின் வீட்டிலிருந்தே இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

14 பிப்ரவரி, 2010

நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்

2500 பேர் இவ்வாரத்தினுள் சொந்த இடம் அனுப்பிவைப்பு


பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்படுவதற்காக வவுனியா நிவாரணக்கிராமங்களில் தற்போது சுமார் 70 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். இவர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணைந்து துரிதகெதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இவ்வாரத்தினுள் மாத்திரம் 2500 பேர் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மெனிக் பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் 350 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

அதேவேளை 700 பேர் பச்சிளைப்பள்ளி, பளை நகரம், தில்லிவளை கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளியடி ஆகிய பகுதிகளிலும் மேலும் 230 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் குமரபுரம் மற்றும் உமங்களபுரம் ஆகிய பகுதிகளிலும் இவ் வாரத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட விருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டி னார்.

வவுனியாவில் நிவாரணக்கிராமங்களி லிருந்து வெளியேறி உறவினர்களுடன் தங்கியிருக்கும் 2,216 பேர் கடந்த சனிக்கிழமை பெரிய பரந்தன், திருநகர் வடக்கு மற்றும் மேற்கு, கரச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்திருத்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கை கள் துரிதப்படு த்தப்பட்டமைக்கு அமைய சுமார் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் அவர்க ளது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தாமத மடைந்ததைத் தொடர்ந்து மீள்குடியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் 02 ஆம் திகதி முதல் மீள்குடியேற்றப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




அரச வைத்தியசாலைகள்:
98 வகை மருந்துகளை கொள்வனவு செய்ய
உயர்மட்டக் குழு இன்று இந்தியா பயணம்



அரசாங்க ஆஸ்பத்திகளுக்கென 98 வகையான மருந்துகளைக் கொள்வனவு செய்யவென உயர்மட்டக் குழுவொன்று இன்று 15 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமாகின்றது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருந்து பொருள் விநியோகப்பிரிவு, திறைசேரி என்பவற்றின் பிரதிநிதிகளும், பிரதம மருந்தாளரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இன்று இந்தியாவுக்குப் பயணமாகின்ற இக்குழுவினர் அடுத்துவரும் பத்து நாட்களுக்குள் இந்த 98 வகையான மருந்துகளையும் இந்நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு இக்குழுவி னரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறுகையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் 98 வகையான மருந்துகள் அடுத்துவரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குத் தான் கையிருப்பில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் இந்த 98 வகையான மருந்துகளையும் உடனடியாகக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இந்த மருந்துகளை உடனடியாகக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த 98 வகையான மருந்துகளும் அடுத்துவரும் 6 மாதங்களுக்குத் தேவையான அளவு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை அரசாங்க ஆஸ்பத்திரிகளின் மருந்து பொருள் கையிருப்பு நிலைமையை அடிக்கடி கண்காணிப்பதற்கும் அதற்கு ஏற்ப மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுமென அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் விசேட பிரிவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது என்றார்.


கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவும் போட்டி
25இல் பதவியிலிருந்து இராஜினாமா


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அபேட்சகராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா போட்டியிடு கின்றார். அதற்கமைய தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக அவர் நேற்று தினகரனுக்கு கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சுப் பதவிக்கான இராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா கையளிக்க தீர்மானித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா, எதிர்வரும் 21ஆம் திகதி கட்சித் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்ட கூட்டத்தில், கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்காக போட்டியிடுபவர்கள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படு மெனவும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க விண்ணப்பிக்கும் காலம் புதன் முடிவு



இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்ளிப்பதற்கு விண்ணப்பிப் பதற்கான காலம் நாளை மறுதினம் 17ம் திகதியுடன் முடிவடையவிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் தாம் தங்கியுள்ள கிராமசேவைகர் ஊடாக தங்களது விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் செயலகத்திற்கு 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் :-

இடம்பெயர்ந்திருப்பவர்கள் பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக பொதுத் தேர்தல் சட்டப்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆகவே பொதுத் தேர்தலில் வாக்களிப் பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் நாளை மறுதினம் 17ம் திகதிக்கு முன்னர் தாங்கள் தங்கி இருக்கும் பிரதேச கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.



தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்க
பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு


பொதுத் தேர்தல் காலத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு ஒன்று இம்முறை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 413 பொலிஸ் நிலையங்களிலும் 40 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல்கள் தொடர்பான தனியான கண்காணிப்பு பிரிவுகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பொலிஸார் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவின் மூலம் கண்காணிக்க ப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க இப்பிரிவு இலகுவாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தபால் மூல வாக்களிப்பு:

16 முதல் 22 வரை விண்ணப்பம் ஏற்பு


பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப் பங்கள் நாளை 16ம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப் படவுள்ளன.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தர் ஆணையாளர் ரி. கிருஷ்ணானந்தலிங்கம் அறிவித்து ள்ளார்.

தபால் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தமது விபரங் களை அறிந்து கொள்வதற்கு வசதி யாக 2008ம் ஆண்டிற்கான அத் தாட்சிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அரச அலுவலகங்களில் தற்போது பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படு த்தும் அலுவலர்களை நியமிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

பொலிஸ் மா அதிபர் - பொதுமக்கள்
சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தம்



பொது மக்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பொலிஸ் மா அதிபரை சந்திக் கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்ப ட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேலைப்பளு காரணமாகவே பொது மக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரியஷாந்த் ஜயகொடி தெரிவித்தார்.

பொது மக்கள் பொலிஸ் மா அதிபரை நேரடியாக சந்திக்கும் நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரை பொது மக்கள் நேரடியாக சந்திக்கு நடைமுறை நிறுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு மாதகாலத்திற்குள் அவசர தேவைக்கான உதவி பெற விரும்புபவர்கள் 0112-472592 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலம் தெளிவுபடுத்த முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


கனகசபை அரசியலிலிருந்து ஓய்வு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த 57 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும், தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை மேலும் தெரிவிக் கையில்:- தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள் ளமை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்த னுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தல்: தேர்தல் செயலகத்தில் நாளை கூட்டம்


பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக தேர்தல் செயலகத்தில் நாளை 16ம் திகதி முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயான ந்த திஸாநாயக்கா தலைமையில் தேர்தல் செயலகக் கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு இக்கலந்துரையாடல் நடைபெற விருக்கின்றது.

மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகள், பிரதி தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் போன் றோர் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் கூறினார்


மருதமடுவில் கிளேமோர் மீட்பு

வவுனியா, மருதமடு பிரதேசத்தி லிருந்து எட்டு கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகளை பாதுகாப்புப் படையி னர் மீட்டெடுத்துள்ளனர். இராணு வத்தின் பொறியியல் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதலின் போதே இந்த கிளேமோர் குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது என்று இராணு வப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.


சத்துணவு நஞ்சாகிய விவகாரம்;

ஒப்பந்தக்காரருக்கு விளக்கமறியல்;சி உதவியாளருக்கு சரீரப்பிணை



சத்துணவு நஞ்சாகி பத்து வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடையக் காரணமாகவிருந்த, நேற்று கைதான ஒப்பந்தக்காரரையும் உதவியாளராக செயல்பட்ட பெண்மணியையும் மாத்தளை மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது ஒப்பந்தக்காரருக்கு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் உதவியாளரான பெண்மணியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன், இறந்து பத்து வயது பாடசாலை மாணவியின் மரண சடங்குகளின் செலவீனங்களுக்கென ரூபா 50,000 வழங்கும்படியும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி இருவரும் இன்று மாத்தளை நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, சத்துணவு நஞ்சாகியமை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் நேற்று பகல் வேளை வரையும் 30 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகா விடுதலையா? அதிபர் ராஜபக்ஷே பதில்



பொறுத்தவரை,சட்டத்திற்குஅப்பாற்பட்டவர்கள்யாரும்இல்லை.பொன்சேகாவின் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை,'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் ராஜபக்ஷேயை சந்தித்து பேசினார். அப்போது, ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு அதிபர் ராஜபக்ஷே பதில் அளித்த போது, ""இலங்கையை பொறுத்தவரை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. அவரது கைது நடவடிக்கைகளில், உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும். தற்போது, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், அவர் விடுதலை செய்யப்படுவார். பொன்சேகாவின் கைதுக்கு அரசியல் பின்னணி காரணமல்ல,'' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம்



வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே இறுக்கமான நிலை காணப்படுவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட் பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளன. அவற்றின் விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களின் விபரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அல்லது நாளை திங்கட்கிழமை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் பெரும்பாலும் அரசாங்கத் தரப்புடன் இணைந்தே போட்டியி டலாமென நம்பப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அதே போல், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இன்ன மும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதேவேளை, கூட்டணிக் கட்சிக ளுக்கு ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வாரென்று வேட்பாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா தெரிவித்தார்.இது குறித்து அரசியல் கட்சிகளு டன் கலந்தாலோசனைகள் இடம் பெற்று வருவதாக ஆளுநர் குறிப்பிட்டார்




கோடன் வைஸின் குற்றச்சாட்டை இலங்கை மறுப்பு





இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் கொழும்புக்கான பேச்சாளர் கோடன் வைஸ் வெளியிட்ட தகவலை, இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, இந்த தகவல் முற்றுலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார். கோடன் வைஸ், ஏபிசி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே தமது தகவலை நம்பத்தகுந்த தரப்புக்களை கோடிட்டு வெளியிட்டிருந்தார்.

இதனை இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை பிழையான வழியில் இட்டுசெல்லும் செய்தி எனக்கூறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை மறுத்துள்ள லக்ஸ்மன் ஹுலுகல்ல, இவ்வளவு தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு பொதுமக்களை சித்திரவதை செய்தார்கள் என்பதை தாம் ஊடகவியலாளர்களுக்கு காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமையும் கோடன் வைஸின் தகவலை மறுத்துள்ளார்.கோடன் வெய்ஸ்சும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவராக இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையான கோடன் வெய்ஸ் 14 ஆண்டுகளுக்கு பின்னர், தமது ஐக்கிய நாடுகள் சபையின் பதவியை ராஜினாமா செய்து வீடு சென்ற பின்னர் முதல் தடவையாக இலங்கை தொடர்பாக சுதந்திரமான தமது தகவலை வெளியிட்டுள்ளார்.




சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி புத்தளத்திலும் ஆர்ப்பாட்


கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி புத்தளம் நகரத்தில் ஜக்கிய தேசிய கட்சி,ஜே.வி.பி,ஸ்ரீ லங்கா முச்லிம் காங்கிரஸ் என்பன கூட்டாக புத்தளத்தில் பேரணியொன்றை நடத்தியுள்ளன.

புத்தளம் நகரத்தின் பிரபல ஆளும் கட்சி பிரமுகர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் வந்த மற்றுமொரு குழுவினர் பேரணியினை குழுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையில்,ஐக்கிய தேசிய முன்னணி தமது பேரணியின் உரிய நேரத்திற்கு இப்பேரணியை முடிவுக்குக்கொண்டு வந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இரு குழுக்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.முன்னாள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார,ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் இலியாஸ் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்




அதே அதிகாரத்தின் மூலம் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும்-மகாநாயக்க தேரர்கள் கூட்டாகக்



பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பதவிகளை வழங்கியது போல தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர, ராமாஞ்ய ஆகிய பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கதேரர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக் கையை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத் திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள்.

பயங்கரவாத யுத்தம் நடைபெற்ற காலத்தில் பௌத்த பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி உள்ளிட்ட விகாரை களை அழித்து, நாட்டை இரண்டாக பிரிப்ப தற்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு, இராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்டு பயங்கரமான பயங்கரவாதிகளாக கருதப்பட்ட வர்களை அரசாங்கத்துடன் இணைத்து கொண்டு, பதவிகளை வழங்கி பாதுகாப்பு வழங்க முடிந்தது போல், நாட்டின் ஐக்கியம், இறையாண்மை மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து பிறந்த நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சரத் பொன்சேகா உள்ளிட்டோரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தியேனும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




வெற்றிலைக்கேணி மாதா கோயில், படையினரின் முகாமாக மாற்றப்பட்டது கண்டு யாழ். ஆயர் அதிர்ச்சி



யில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதா கோவில் படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர், வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்க ளுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என இராணுவம் ஆயருக்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னிப் பகுதிக்கு சென்ற ஆயர் அங்கு உள்ள பெருமளவான தேவாலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி மாதா ஆலயம், மிகப் பெரும் இராணுவத் தளமாக மாற்றப்பட்டுள் ளதுடன், அதனை சுற்றி வேலிகளும், காவல் நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேவாயலமும் சேதமடைந்துள்ளது. பெரு மளவான மக்கள் வழிபடும் இந்த தேவால யத்தை இராணுவம் முகாமாக பயன்படுத்தி வருவதால் மக்களின் மத உணர்வுகளை அது புறம்தள்ளியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே வடமராட்சி கிழக்கு கட்டைக் காட்டு பகுதியிலும் பெருமளவான ஆலயங் கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




மட்டு. மேயர் சிவகீதாவை பதவியிலிருந்து நீக்குமாறு வேண்டுகோள்




மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனை மேயர் பதவியிலிருந்நு உடனடியாக நீக்க வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வீரகேசரி வார வெளி யீட்டுக்குக் கருத்துத் தெரிவித்த இந்த அமைப் பின் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானா மேலும் கூறுகையில்,இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது அமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் புடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட தேர்தலில் எமது வேட்பாளர்களையும் நிறுத்தியது.

எமது கட்சியின் மூலம் நிறுத்தப்பட்ட வேட்பாளரான சிவகீதா பிரபாகரன் வெற்றி பெற்றதையடுத்தே அவரை மட்டக்களப்பு மாவட்ட மேயராக நியமிக்க வேண்டுமென நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் பீடத்தைக் கேட்டிருந்தோம். அதற்கமை வாகவே அவருக்கு மேயர் பதவியும் வழங்கப் பட்டது. ஆனால், அவர் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தார். இதற்கு முன்னர் கூட எமது கட்சியின் ஆலோசனைகளைப் பெறாத நிலையிலேயே சில முடிவுகளையும் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இவரை எமது கட்சியில் தொடர்ந்தும் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த விடயத்தில் எமது கட்சிக்கு தார் மிகப் பொறுப்புள்ளது. அதனை நிறைவேற் றவும் வேண்டியுள்ளது. இதன் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இவரை நீக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் எமது நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளதுடன் அவரை உடன டியாக மேயர் பதவியிலிருந்து நீக்குமாறும் கேட்டுள்ளோம்.

இதுதவிர, மட்டக்களப்பு மாநகரசபையால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேர ணையொன்றும் கொண்டு வரப்பட்டு அதிலும் கூட அவருக்கு எதிராக பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்'' என்றார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் களில் ஒருவரும் அமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இது தொடர்பாக வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

""உறுதியற்ற கொள்கையினையும் தனது மனச்சாட்சிக்கே மாறான அரசியல் விடயங்க ளிலும் ஈடுபடும் சிவகீதா பிரபாகரனை எவ்வாறு எமது கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்துவது? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையையும் அவரது அரசாங்கத்தையும் பகிரங்க மேடைகளில் அவர் எவ்வாறு விமர் சித்தாரென்பது எமக்குத் தெரியும். இப்ப டிப்பட்ட ஒருவரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துமாறு நாம் யாரிடம் போய்க் கூறமுடியும். அது எங் களுக்கே ஒரு வெட்கம் கெட்ட செயலாக அமையலாம்.

இவரின் அண்மைக்கால அரசியல் போக் குகள் எமது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப் தியைத் தோற்றுவித்துள்ளது. நாங்கள் இது தொடர்பில் விரைவில் கூடி ஆராயவுள்ளோம். மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் அங்கத்தவர். அந்தக் கட்சியினால்தான் எனது விவகாரங்களைக் கையாள முடியும். என்னை மேயர் பதவியிலிருந்து நீங்குமாறோ அல்லது நான் நீக்கப்பட்டுள்ளதாகவோ கூட் டமைப்பின் செயலாளரான சுசில்பிரேம்ஜயந் தவிடமிருந்து எவ்வித அறிவித்தலும் எனக்குக் கிடைக் கவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்று நானே தீர்மானிக்காத நிலையில் என்னைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வது பற்றி மற்றவர்கள் ஆலோசிப்பதில் எவ்வித பயனுமில்லையென்று'' அவர் குறிப்பிட்டார்



ர்க் குற்றம் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்-.நா மீண்டும் வலியுறுத்தல்



இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்கான ஐந்தாவது மாநாடு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இது தொடர்பான இலங்கையின் விசாரணைகள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என தமது அலுவலகம் தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. செயலா ளர் நாயகம் பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறு தியை நிறைவேற்றச் செய்வதில் பான் கீ மூன் தீவிரமாக இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.:

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை தான் ஜெனீவாவில் சந்தித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரும் தேர்தல் முடியும்வரை காத்தி ருந்ததைப்போல் தென்படுகிறது. ஆகவே அவருக்கு நான் மீண்டும் அதை வலியுறுத் தினேன் எனவும் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.:

இலங்கையில் யுத்தத்தின் பின்னரான உரிமை மீறல்கள் குறித்து மட்டுமல்லாது தேர்தலுக்குப் பின்னரான உரிமை மீறல்கள் குறித்தும் இலங்கையின் மனித உரிமைகள்விவகார அமைச்சர் தனது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என அவர் கூறியுள்ளார். இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகள் விவகாரம் ஐ.நா. சபை யின் மனித உரிமைகள் அவையில் முறையாக கையாளப்பட்ட விதம் குறித்து தமது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். :

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைக்குதாம் அனுமதிக்கப்போவ தில்லை என இலங்கை கூறுகிறது.இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அத்தகைய விசார ணைக்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் அத்தகைய விசாரணைகளுக்கான அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார். எனினும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தாம் சர்வதேச விசாரணையின்போது சாட்சியமளிக்கப் போவ தாக கூறியிருந்தார்





ரணிலின் தீர்மானம் குறித்து சிறுபான்மை கட்சிகள் அதிருப்தி




நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாமென சில சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடந்து கொண்டமை ஏமாற்றத்தை யும் அதிர்ச்சியையும் இக்கட்சித் தலைமைகளுக்கு ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்குமிடையில் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. அனைவரும் ஒள்றிணைந்து போட்டியிடுவது குறித்தும் இங்கு விரிவாகப் பேசப்பட்டது. இது தொடர்பில்பு ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஓர் இணக்கப்பாட்டைக் காணும் வரைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி யிடுவது குறித்து தீர்மானமெதனையும் எடுக்க வேண்டாமென மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டிருந்தனர்.

இதற்கு உடனடியாகவே ரணில் விக்கிரம சிங்க இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் அதே தினம் மாலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவைக் கூட்டி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன் யானைச் சின்னத் திலேயே போட்டியிடுவதாகவும் அந்தக் கட்சி அன்றைய தினமே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது குறிப்பிட்ட தமிழ் பேசும் கட் சித் தலைவர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் திடீர் சந்திப்பு

இது இவ்வாறிருக்க வெள்ளிக்கிழமை இரவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக் குமிடை யில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டி ருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் அங்கு வருகை தந்துள் ளனர். இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சில விடயங் கள் முன்வைக்கப்பட்டதாக நம்பகமான வட்டா ரங்கள் தெரிவித்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனநாயக மக்கள் முன்ன ணியும் போட்டியிடக் கூடாதென்றும் அதற்குப் பதிலாக கொழும்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதிலிருந்து தவிர்த்து கொள்ளுமென்றும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தாம் தமது கட்சி உயர்பீடத்துடன் பேசியே தீர்வு காணமுடியுமென ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா,சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனோகணேசன் கருத்து

இந்த விடயம் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யாழ்,வன்னி,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தமது கட்சி வேட்பானர்களை நிறுத்தவே தீர்மானித்துள்ளது. இந்த மாகாணங்களைச் சேர்ந்த எமது ஆதரவாளர்களும் நாம் இங்கு போட்டியிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைவிட்டுக் கொடுப்பதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் நாம் எமது கட்சியுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகளான நாம் அனைவரும் எவ்வாறு ஒன்றி ணைந்து எமது ஒற்றுமையைக் காட்டினோமோ அதனையே நாம் பொதுத் தேர்தலிலும் கடைப்பிடிக்க விரும்புகிறோம். தங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் சில விட்டுக்கொடுப்புடன் நாம் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே விரும்புகிறோம். எது எப்படியிருப்பினும் கிழக்கு மாகாணத்தின் திரு கோணமலை, அம்பாறை ஆகிய மாவட் டங்களில் நாம் நிச்சயமாகப் போட்டியிட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந் திரன் இது தொடர்பில் வீரகேசரி வாரவெளி யீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவை எமது கட்சி சந்தித்தது உண்மையே. சமகால அரசியல் நிலைமைகளை ஆராய்வது தொடர்பிலே எமக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தல் தொடர்பில் நாம் மனோ கணேசனுடனும் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தை நடத்தவே உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் நாம் தனித்துவமாகவே போட்டியிடவுள்ளோம். இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸுடனும் ஜனநாயக மக்கள் முன்னணி யுடனும் ஓர் இணக்கப்பாடு காண்பதனையும் நாம் விரும்புகிறோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் ஊடாகப் போட்டியிடுவதற்காக நாங்கள் எதிர்பார்த்ததனையும் விட அதிக ளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பழைய முகங்கள் மட்டுமல்ல புதிய முகங்கள் புத்தி ஜீவிகள் எனப் பலரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். எமக்குக் கிடைத்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் அடுத்தவாரம் இடம் பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி கருத்துத் தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகள் காட்டிய அதே ஐக்கியம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டு மென்பதே எமது கட்சியின் விருப்பம். அத் துடன் நாம் பெற்ற அந்த வெற்றி தொடர்ந்தும் கட்டிக்காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத் துடன் தாம் வெற்றி பெறுவோமென ஆளுந் தரப்பினர் இப்போதிருந்தே கூறிவருகின்றனர். இவ்வாறான அவர்களது எதிர்பார்ப்பை தோல் வியடைச் செய்யும் சக்தியாக நாம் மாறவேண் டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயற்படவேண்டும்.

மேலும், எமது கட்சி இந்தத் தேர்தலை எவ்வாறு முகம்கொள்வது என்பது குறித்தும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் இவ் வாரம் கூடி ஆராயவுள்ளது. என்றார். இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காட்டிய ஐக்கி யத்தையும் கண்ட உடன்பாட்டினையும் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காட்டுவதில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை யென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ் சாட்டியுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்பேசும் சிறு பான்மையின மக்களின் வாக்குகளை தமது கட் சிக்குப் பெற்றுக் கொள்வதில் காட்டும் ஆர்வத் தையும் அக்கறையையும் சிறுபான்மையினக் கட்சிகளின் ஊடாக வேட்பாளர்களை நிறுத்து வதில் காட்டவில்லையென்றும் அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

13 பிப்ரவரி, 2010

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 5 தினங்கள்:
தேர்தல் கூட்டு, வேட்பாளர் தெரிவில் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனம்



பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே இறுக்கமான நிலை காணப்படுவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட் பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத்லீ தர்வுகளை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளன. அவற்றின் விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களின் விபரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அல்லது நாளை திங்கட்கிழமை கையளிக்கப்படுமென எதிர்பார்க் கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் பெரும்பாலும் அரசாங்கத் தரப்புடன் இணைந்தே போட்டியி டலாமென நம்பப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அதே போல், தமிஸழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இன்ன மும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதேவேளை, கூட்டணிக் கட்சிக ளுக்கு ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வாரென்று வேட்பாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித் தார்.

இது குறித்து அரசியல் கட்சிகளு டன் கலந்தாலோசனைகள் இடம் பெற்று வருவதாக ஆளுநர் குறிப்பி ட்டார்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைமையிலான எதி ர்க் கட்சிக் கூட்டணி பல பிரிவுக ளாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பொதுத் தேர் தலில் யானைச் சின்னத்தில் போட்டி யிடுவதென ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவ தென முடி வெடுக்கப்பட்டுள்ளதாக வும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந் நிலையில் ஜன நாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி களும் யானைச் சின்னத்திலேயே களமிறங்கவுள்ளன.

பொதுத் தேர்தலில் யானைச்சின் னத்தில் போட்டியிடத் தீர்மானித்து ள்ளதால் மக்கள் விடுதலை முன் னணி தனித்து விடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. இந் நிலையில் ஜே.வி.பி. அதன் மணிச் சின்னத்தில் போட்டியிடுமெனத் தெரியவருகிறது.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதன் வேட்பாளர் பட்டி யலை எதிர்வரும் 20 ஆம் 21 ஆம் திகதியளவில் பூர்த்தி செய்துவிடு மென முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஏனைய கட்சிகளும் வேட்பாளர்க ளைத் தெரிவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

கூட்டணியில் இருந்து தனித்து விடப்பட்டிருக்கும் கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பாளர்களைத் தேடு வதில் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.


அரசியல் தீர்வு பற்றி இவர்கள் பேசுவது தமிழ் மக்களின் துரதிஷ்டம்

கடந்த சில நாட்களாக சரத் பொன்சேகாவின் கைது தான் சூடான விவகாரம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் சோர்ந்து போயிருந்த எதிரணிக் காரர்கள் அவல் கிடைத்தது போல நன்றாக மெல்கிறார்கள்.

பொன்சேகாவின் கைதுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

உச்ச நீதிமன்றத்தை எதற்காகத் தேர்ந் தெடுத்தார்களோ தெரியாது. இது பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவாக இருக்கலாம். நீதிமன்றத்துடனும் நீதியரசர்களுடனும் முரண்படும் பாரம்பரியம் அந்தக் கட்சிக்குத் தாராளமாக உண்டு.

ஜே. ஆர். ஜயவர்த்தன புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவந்த வேளையில் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எல்லோரையும் இராஜினாமா செய்ய வைத்துத் தான் விரும்பியவர்களை நியமித்தார். அரசாங் கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் வீடுகளுக்குக் கல்லெறிந்த கதையும் உண்டு.

இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டதென்பதை விளங்கிக் கொள்வ தற்கு அதிக நேரம் எடுக்காது. எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டமென்றால் அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்திருக் கலாம்.

இவர்கள் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்துடனேயே வந்திருக்கின்றார்கள். அதனாலேயே பொலிசாருக்கு ஆத்திர மூட்டும் விதத்தில் நடந்திருக்கின்றார்கள்.

அதன் மூலம் பொலிசாரைக் கடுமையான நடவடிக்கை எடுக்க வைப்பதே அவர்களின் நோக்கம். அதைத் தேர்தல் மேடைகளில் பிரசாரம் ஆக்கலாமே.

பொன்சேகாவின் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் பிழையான ஒரு கோஷத்தை முன்வைக்கின்றன.

பொன்சேகா சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டார் என்பதே அந்தக் கோஷம். எந்தச் சட்டத்துக்கும் உட்படாத வகையில் கைது செய்யப்படுவதே சட்டவிரோதமான கைது.

பொன்சேகா சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே கைது செய்யப்பட்டார். இராணுவ சட்டத்தின் 57வது சரத்தின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தச் சரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது.

புஇராணுவச் சட்டத்துக்கு உட்பட்ட ஒருவர் ஏதாவது குற்றச் செயலைப் புரிந்து அதன்பின் இராணுவச் சட்டத்துக்கு உட்படாதவர் என்ற நிலையை அடையும் பட்சத்திலும் அவரைக் கைதுசெய்து இராணுவப் பாதுகாப்பில் வைத்திருப் பதற்கும் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரித்துத் தண்டனை வழங்குவதற்கும் முடியும்.

குறித்த குற்றச் செயல் இராணுவக் கிளர்ச்சி, இராணுவத்தைக் கைவிட்டுச் செல்லல், முறைகேடான ஆட்சேர்ப்பு ஆகியவை அல்லாததாயின் அக் குற்றச்செயல் இடம்பெற்று ஆற மாத காலம் கடந்த பின் அவரைக் கைது செய்து விசாரிக்க முடியாது.பூ

பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை இராணுவ நீதிமன்றம் விசாரித்து அதன் தீர்ப்பை வழங்கும்.

பொன்சேகாவின் கைது விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே. வி. பியும் ஒன்றாகச் செயற்படுகின்ற போதிலும் பாராளுமன்றத் தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை.

பாராளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் கூட்டாகப் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சம்மதிக்க வைக்கும் தீவிர முயற்சியில் ஜே. வி. பி ஈடுபட்டிருக்கின்ற போதிலும் அது சாத்தியமாகுவதற்கான அறிகுறிகள் இல்லை.

ஜே. வி. பியைப் பொறுத்தவரையில் பிரதான கட்சியொன்றுடன் கூட்டுச் சேராவிட்டால் பாராளுமன்ற அங்கத்து வத்தை முழுமையாக இழக்கும் நிலை. சென்ற தடவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பாராளு மன்றத்தில் கணிசமான ஆசனங்களைப் பெற்றார்கள்.

இந்தத் தடவை அதே பாணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை.

எந்தச் சின்னம் என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது ஜீவமரணப் போராட்டம் ஆகிவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தை ஏற்றுக்கொண்டதால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைக்கு எதிரான உணர்வலை கட்சியின் சகல மட்டங்களிலும் வளர்ந்திருக்கின்றது.

மீண்டும் அன்னம் சின்னத்தை ஏற்றால் கட்சி கரைந்துவிடும் என்பது ரணிலுக்குத் தெரியும். அதனால் யானைச் சின்னத்திலேயே போட்டி என்பதில் ரணில் உறுதியாக நிற்கின்றார்.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்காக வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் முயற்சி யிலும் ஜே. வி. பி இறங்கியிருக்கின்றது. ஜே. வி. பிக்கு எப்படியாவது வேறு கட்சிகளின் உதவி தேவை. இல்லையெ ன்றால் பாராளுமன்றத்தை நினைத்தும் பார்க்க முடியாது.

இந்தக் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் மனோ கணேசனும் பங்குபற்றியிருக்கின்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர் யோகராஜன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த பின் மனோ கணேசனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உறவில் ஒரு கீறல் ஏற்பட்டிருக்கின்றது.

யோக ராஜனும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகக் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்குவது தனக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மனோ கணேசன் கருதுகின்றார் போலும்.

ஜே. வி. பி அமைக்கவுள்ள புதிய கூட்டணி அன்னம் சின்னத்தில் போட்டி யிட முடியாது. அந்தச் சின்னத்துக்குரிய கட்சியான புதிய ஜனநாயக முன்ன ணியை ஸ்தாபித்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க.

சின்னத்தை ஜே. வி. பி கூட்டணிக்கு வழங்க அவர் தயாராக இல்லை. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் முயல் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஆராய்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் அணியில் நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனங்காட்ட விரும்பவில்லை.

தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூட்டமைப்பின் சில முக்கிஸ்தர்கள் கூறுகின்றார்கள். அதே நேரம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்கிறார்.

ஹக்கீம் தமிழ் மக்களின் வாக்குகளுக்குள் ஒழிந்துகொண்டு பேசுகின்றார் என்று அமைச்சர் அதாஉல்லா அண்மையில் ழிடுசிச்:!சிநியிருந்தார்.

கிழக்கில் ஜனாதிபதிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மையானவை தமிழ் மக்களின் வாக்குகள் என்பதும் அந்த வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸின் கணக்கில் போட்டு ஹக்கீம் உரிமை கோருகின்றார் என்பதும் அமைச்சர் அதாஉல்லாவின் குற்றச்சாட்டு.

கூட்டாகச் செயற்பட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அணி சேர்வதாக ரவூப் ஹக்கீம் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது.

ஏனென் றால் இரண்டு கட்சிகளிடமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இது வரையில் இல்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த காலத்திலேயே புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ரவூப் ஹக்கீம் அப் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். பேச்சுவார்த்தையின் போதென்றாலென்ன வேறு சந்தர்ப்பத்தி லென்றாலென்ன இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கட்சிக் கொள்கையை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தீர்வுக் கொள்கை என்னவென்பது இன்று வரை எவருக்கும் தெரியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கின்றது. புலிகளின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஏற்றுத் தனிநாட்டுப் போராட்டத்துக்குக் கைகொடுத்தார்கள். இப்போது புலிகள் இல்லை. தனிநாட்டுக் கோரிக்கையும் இல்லை.

கூட்டமைப்பினர் தாங்கள் தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டுவிட் டதாக வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாகச் சொல்லவும் முடியவி ல்லை.

அதனால், தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றார்கள். எவ்வளவு காலத்துக்கு இந்தத் திட்டம் தயாரிப்பு நிலையில் இருப்பது? இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை என்பதே உண்மையான நிலை.

கொள்கை இல்லாத இரண்டு கட்சிகள் சேர்ந்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகச் சொல்கின்றார்கள். ஆண்டிகள் மடம் கட்டின கதை நினை வுக்கு வருகின்றது-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்குக் கட்டுப்படாமல் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் பாராளுமன்றத் தேர்தலிலும் தனி வழி போகின்றார் என்று செய்திகள் வெளிவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் இவர் சேர்ந்திருந்த விக்கிரமபாகு கருணாரட்னவுடன் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டுச் சேரப் போகின்றாராம். பிபுதிய இடதுசாரி விடுதலை முன்னணிபீ என்ற பெயரில் ஒரு அமைப்பைப் பாராளுமன்றத் தேர்தலுக்காக இருவரும் சேர்ந்து உருவாக்கப் போகின்றார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது-

ஜனாதிபதித் தேர்தல் பிரசார மேடைகளில் சிவாஜிலிங்கமும் விக்கிரமபாகுவும் தமிழ் மக்களின் துன்பங்கள் பற்றியும் இனப் பிரச்சினையின் தீர்வு பற்றியும் அதிகம் பேசினார்கள். ஆனால் தாங்கள் முன்வைக்கும் அரசியல் தீர்வு என்ன என்பதை இவர்களில் ஒருவராவது தெளிவுபடுத்தவில்லை.

தனிநாடு நடைமுறைச் சாத்தியமில்லை என்பது புலிகளின் தோல்விக்குப் பின் நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், இனப்பிரச்சினை பற்றிப் பேசும் தலைவர்கள் தாங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறுவதற்குக் கடமைப்பட்டுள்ளனர். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு என்று விக்கிரமபாகு கருணாரட்ன நீண்ட காலமாகக் கூறிவருகின்றார்.

சுயநிர்ணய உரிமையைப் பிரி ந்துசெல்வதற்காகப் பிரயோகிக்க வேண்டுமா அல்லது ஐக்கிய இலங் கைக்குள் பிரயோகிக்க வேண்டுமா என்பது பற்றி மக்களுக்குக் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு அவரிடம் தெளிவான பதில் இல்லை.

அதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிச் சமாளிக்கிறார். தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும் எல்லா அரசியல் கட்சிகளும் அதை எவ்வாறு பிரயோகிப்பது என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறக் கடமைப்ப ட்டுள்ளன.

அதாவது சுயநிர்ணய உரி மையின் பிரயோகம் பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக் கட மைப்பட்டுள்ளன. அதை வெளிப்படுத்தா விட்டால் கட்சியிடம் திட்டவட் டமான கொள்கை இல்லை என்று அர்த்தம்.

இனப் பிரச்சினையைப் பிரதான பேசுபொருளாகக் கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களிடம் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கை எதுவும் இல்லாதிருப்பது தமிழ் மக்களின் துரதிஷ்டம்.


இந்திய திஹிணி வலையமைப்பில் இணைய இலங்கை வங்கி திட்டம்

பிடாடாபீ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை



இந்தியாவில் உள்ள சகல வங்கிகளினதும் ஏ.ரி.எம். (திஹிணி) வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடாடாபீ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உள்ள பத் தாயிரத்திற்கும் அதிகமான ஏ.ரி.எம். வலையமை ப்புகளுடன் இலங்கை வங்கி இணைந்துகொள் வதன் மூலம், இலங்கையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்தவொரு வங்கியின் ஏ.ரி.எம். இயந்திரத்திலும் பணத்தை மீளப்பெற முடியும் என கலாநிதி காமினி விக்கிரமசிங்க கூறினார்.

இந்தியாவின் சென்னை மாநகரத்தில் மட்டுமே தற்போது இலங்கை வங்கியின் கிளை இயங்கி வருகிறது. அதனால் இலங்கை வங்கியின் ஏ.ரி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி சென்னையில் மட்டுமே பணத்தை மீளப்பெற முடிகிறது.



ரூ. 285 மில். பெறுமதியான இயந்திர உபகரணங்கள் சீனாவினால் கையளிப்பு


வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா பகுதி களில் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவென சீன அரசு 285 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களை நேற்று வழங்கியது.

இலங்கையிலுள்ள சீனத் தூதுவர், பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்காவிடம் இவற்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பெக்கோ இயந்திரங்கள், மோட்டார் கிறேடர்கள், புல்டோசர்கள் என்பன இவற்றில் அடங்குகின்றன. கொழும்பு காலிமுகத்திடலில் கையளிப்பு வைபவம் நடைபெற்றது.

சீன நாணயப்படி 17 மில்லியன் யுவான்கள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இவை சீன அரசு அன்பளிப்பாகவே வழங்குகிறது என தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மேலும் 5 மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அக ற்றும் இயந்திரங்களும் கொண்டு வரப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மேலும் 5 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குகிறது என்றும் செயலர் குமாரசிறி தெரிவித்தார்.



எனது கணவருக்கு செய்த பாவத்தின் பழியை பொன்சேகா அனுபவிக்கிறார்

மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி



சரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ் வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன்.

ஆனால், எனது கணவருக்கும் ஏனை யோருக்கும் செய்த பாவத்தையும் பழி யையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார்.

எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத்திலிருந்து விலக்கினார். சரத் பொன்சேகாவின் மனைவியுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை நான் வைத்திருந்த போதும் எனது கணவருக்கு இவ்வாறு நடந்தது.

ஆனால் இன்று சரத் பொன்சேகாவுக்கு இப்படி நடந்தவுடன் அவரது மனைவி ஒவ்வொருவரிடமும் முறையிடுவதும் பெண்கள் அமைப்புக்களை ஆதரவு வழங்கக்கோரி அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார். முன்செய்த பாவங்கள் பலித்துக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா இன்று தண்டனை பெறும் போது அவரது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனது கணவர் விலக்கப்படும் போது எனது மூத்த பிள்ளைக்கு 12 வயது. ஏனைய இரண்டு பிள்ளைகளும் 4 வயதையும், 5 வயதையும் உடையவர்களாக இருந்தனர்.

கணவர் கைது செய்யப்பட்ட போது இந்தக் குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப் பட்டேன்.

குழந்தைகளுடன் வீதியிலிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

அவரது மனிதாபிமானம், காருண்யம் என்பவற்றால்தான் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வென்று மீண்டும் ஜனா திபதியாகியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

மாத்தளை: சத்துணவு நஞ்சாகிய விவகாரம்:
பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது




சத்துணவு நஞ்சாகி 10 வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடைந்தது தொடர்பாக பாடசாலைக்கு உணவு வழங்கிய கொந்தராத்துக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை, பலாபக்வெல புத்தகோஸ சிங்கள மகா வித்தியாலயத்தில் சத்துணவு உட்கொண்ட மாணவர்களில் தனஞ்சனி கமகே என்ற 10 வயது மாணவி மரணமடைந்தார். மேலும், 129 மாணவர்கள் சுகவீனமடைந்து மாத்தளை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டனர்.

கொந்தராத்துக்காரரால் பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்பட்ட சத்துணவு நஞ்சாகியதாலேயே இந்த சம்பவம் நடத்திருக்கிறதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே கொந்தராத்துக்காரர் கைது செய்யப் பட்டிருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். ஏனையவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவர்களையும் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென மாத்தளை ஆஸ்பத்திரி அத்தியட்சகர் டாக்டர் கே. டபிள்யூ. எஸ். குமாரவன்ச தெரிவித்தார். எவருக்கும் உயிராபத்தில்லை யெனவும் அவர் கூறினார்.

மேற்படி பாடசாலை உட்பட தொம்பவெல மற்றும் கவட்டயாமுன பாடசாலைகளில் கல்வி கற்கும் கீழ் பிரிவு மாணவர்களே மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

போஷாக்கு உணவாக வழங்கப்பட்ட நூடில்ஸ் முட்டை, சொதி என்பனவுடன் மாணவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பன மேலதிக ஆய்வுகளுக்காக உடனடியாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி கே. டப். எஸ். குமார வன்ஸ மேலும் தெரிவிக்கின்றார்.

இது சம்பந்தமான பொலிஸ் விசாரணை மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலக் அபேசிரிவர்தனவின் பணிப்புரையின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜயம்பதா பண்டார மேற்கொண்டுள்ளார்.

ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு:
கண்டி மேயர் அலுவிகார பதவியிலிருந்து நீக்கம்



ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கண்டி மாநகர சபையின் மேயர் எல். பி. அலுவிகாரவை பல்வேறு ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

மேயர் எல். பி. அலுவிகார தொடர்பாகக் கிடைத்த பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் பின்னரே அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கத் தீர்மானித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, இதற்கு முன்னர் உடபலாத்த பிரதேச சபைத் தலைவர் - பாத்ததும்பர நகர சபைத் தலைவர், கங்க வட்ட கோறளை பிரதேச சபைத் தலைவர்களும் இவ்வாறான மோசடிக் குற்றச் சாட்டுக்களின் பேரில் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என்றும் முதமலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

இலங்கை வங்கிக்கு புதிய ஆட்சேர்ப்பு

1100 பேர் விரைவில் சேர்ப்பு



இலங்கை வங்கிக்கு நாடளாவியரீதியில் ஆயிரத்து நூறுபேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இவர்களுள் யாழ்ப்பாணத்தில் 40 பேர் விசேடமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிதாக ஆட்சேர்ப்பதற்காக ஏற்கனவே போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 60 ஆயிரம் பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். எனினும் ஆட்சேர்ப்பு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கென 40 உத்தியோகத்தர்கள் விசேட தகுதியின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். தமிழ் மொழியுடன் விவசாயத்துறையில் பட்டம்பெற்றவர்களே இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். விவசாயத் துறையினருக்குக் கடன் வழங்குவதுடன் அது தொடர்பான செயற்பாடுகளைக் கையாள்வதற்கே 40 பேர் விசேடமாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, அடுத்த 2012 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டுவதுடன் ஒரு ரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) ரூபாய் தொகையை ஐந்தொகை இருப்பாகப் பேணுவதற்குமான இலக்கை நோக்கி வங்கியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருவதாகவும் கலாநிதி விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசம்:
விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு



மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்தில் புலிகளால் முன்னர் புதைத்து வைக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப் பட்டுள்ளன.

லிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் நடவடிக்கையின் போது புலிகளின் பிராந்திய தளபதியாக இருந்த 34 வயதுடைய மோகன் என்றழைக்கப்படும் மகேந்திரராஜா வழங்கிய தகவலுக்கிணங்க விமானத்தை தாக்கியழிக்கும் ஆயுதங்கள், கைக்குண்டுகள், ஸ்னைப்பர் ரக ஆயுதங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட புலி முக்கியஸ்தர் கொழும்பில் புலனாய்வு பொலிஸாரின் விசாரணையில் தொடர்ந்தும் இரு க்கிறார்.

நாவற்காடு வைத்தியசாலையில் கடமையாற்றிய சிங்கள வைத்தியரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இவருக்கு தொடர்பிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத் துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா கைதுக்கு எதிரான மனு ஏற்பு
இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் 23-ந் தேதி விசாரணை



இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைதை எதிர்த்து அவரது மனைவி அனோமா, இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை முடிவடையும்வரை, இடைக்கால ஏற்பாடாக, பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இம்மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மனு மீதான விசாரணை, வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது, பொன்சேகா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பொன்சேகாவை தற்போது சிறை வைத்துள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் அட்டர்னி ஜெனரல் உறுதி அளித்துள்ளார்.



கடற்படையினர் அழைத்துச் சென்றவர்களே காணாமல் போயுள்ளனர் : உறவினர்கள் தகவல்



மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வினை வவுனியா வன்முறையற்ற சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் ரோகிதவும் வருகை தந்து மக்களுடன் உரையாடினார்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிகமானோர் கடற்படையினரால் அழைத்துச் சென்றவர்களே என்றும் அவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும் உறவினர்கள் இந்நிகழ்வின்போது தெரிவித்தனர்.

கடந்த 2 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் 150க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



லண்டனில் 'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' : தலைவர் தகவல்



லண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை பிரதான வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்ததாக அரச இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில்,

'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' என்ற பெயரில் லண்டனில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியே உலக நாடுகளில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளை நிர்வாக மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, தற்போது லண்டனிலிருந்து இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்துவித பணப்பரிமாற்றங்களுக்கும் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாதென்றும் குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கிகள் கணினிமயமாகும்

அதே வேளை, நாடளாவிய ரீதியில் செயற்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகளைக் கணினிமயப்படுத்த உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பி.பி. திலகசிறி தெரிவித்தார்.

கணினிகளைக் கொள்வனவு செய்வதற்கான சுற்று நிருபங்கள் சமுர்த்தி வங்கிகள் மற்றும் மகாசங்கம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கணினிகளைக் கொள்வனவு செய்வதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து இணையத்தள வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

களனிவெளி வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை : திணைக்களம் அறிவிப்பு



களனிவெளி வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்றும் நாளையும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொட்டாவை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கான ரயில் பாதையில் திருத்தப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாகவே குறித்த பகுதிக்கான ரயில் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து இன்று காலை 6.00 மணிக்கு புறப்பட்ட ரயில் இன்று காலை 7.43 அளவில் கொட்டாவை ரயில் நிலையத்தை வந்தடைந்த பின்னர் அந்த பகுதிகளுக்கான சேவையானது நாளை பிற்பகல் வரை இடம்பெறாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவிசாவளையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது நாளை பிற்பகல் 4.10 அளவில் இடம்பெறுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது இன்று பிற்பகல் 2.25 மணிக்கும் கொட்டாவையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயில் சேவை மீண்டும் நாளை காலை 7.43மணிக்கும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கண்டியில் 18ஆந் திகதி அனைத்து பௌத்த பிக்குகள் மாநாடு




நான்கு பிரதான பௌத்த பீடாதிபதிகள் தற்போது உருவாகியிருக்கும் நிச்சயமற்ற நிலையைப் பற்றி விவாதிக்க கண்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி மாநாடு ஒன்றை கூட்டியுள்ளனர் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து புத்த மத பிக்குகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்ல அரச பரிபாலனம் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற தன்மை என்று அவர்கள் குறிப்பிடும் விஷயம் குறித்து விவாதிக்க கண்டி வருமாறு, இந்த நான்கு பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.

இந்த நிச்சயமற்ற நிலை நாட்டின் எதிர்காலத்துக்குப் பேரழிவைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்துக்கு புத்த பிக்குகள் நெடுங்காலமாகவே பங்களிப்பு செய்துள்ளதாகவும் இந்த கடிதம் குறிப்பிடுகிறது.

கடிதத்தில் மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் தேரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மாநாடு சுதந்திரம் அடைந்த இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொன்றாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

அரசுடன் பேச்சு நடத்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை : ததேகூ



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் தாம் அழைக்கப்பட்டால் மக்களின் தேவை கருதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்தபோதே துரைரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதமிழ்பேசும் மக்களின் நலன் கருதியே நாம் பல முக்கிய தீர்மானங்களை எடுத்து வருகிறோம். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பிலும் எமது மக்களின் நலனையே முதன்மையாக நோக்குகிறோம். ஆகவே, உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிகழ்ச்சித் திட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்



தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கைது


பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தகவல் வழங்குகையில்,

"கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.70 லட்சத்தினை கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வர்த்தகரின் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த அவருடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரின் மோட்டார் வாகனத்தை மறித்துள்ள மேற்படி கப்டன், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அவ்வியக்கத்துடனான தொடர்புகள் குறித்துமான விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்படி கைதினைத் தவிர்க்க வேண்டுமாயின் 70 லட்சம் ரூபாவினை கப்பமாக வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வர்த்தகரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வர்த்தகரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள கப்டன் உரிய பணத்தையும் எடுத்துக்கொண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபரான கப்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கப்டன் கண்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரமுகர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களின் போது பிரதான வீதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

கைதான இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்" என்றார்.



டிவி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவத்தினருக்குத் தடை




நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவ அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவர்களை தங்களது நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் இராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொள்வதை உரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்தை மீறும் செயலாகும்.

ஆளுமையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் என எந்தவொரு நிகழ்ச்சியிலும் இராணுவ அதிகாரிகள் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்.

இதனையும் மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் பிரகாரம் தகுந்த தண்டனைகளை வழங்க இடமுண்டு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவே கைச்சாத்திட்டுள்ளார்.

அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.



நோர்வே-அமெரிக்க நாடுகளின் மறுப்பை ஏற்றார் வெளியுறவு அமைச்சர்



இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுக்கு நோர்வே தூதரகமும் அமெரிக்கத் தூதரகமும், அளித்த மறுப்பை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை குறித்த இரண்டு நாடுகளின் தூதரகங்களும் கடுமையான தொனியில் நிராகரித்திருந்தன. அத்துடன் அந்த தூதரகங்கள் இரண்டும், நிராகரிப்பு ஆவணத்தை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கையளித்திருந்தன.

இந்தநிலையில் குறித்த நிராகரிப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, இந்த விடயத்தை தொடர்ந்தும் விவாதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சரத் பொன்சேகாவை, கைது செய்தமைக்காக தகுந்த காரணங்கள் உள்ளதாக ரோஹித்த போகல்லாகம, நேற்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இராணுவச் சட்டப்படி, இராணுவ சட்டம் இலக்கம் 17,1949 ஆம் ஆண்டுக்கமைய சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தில் இருந்து விலகி ஒன்றரை வருடங்களுக்கு இராணுவ சட்டத்தின் மூலம் வீரர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், இராணுவ நீதிமன்றத்தில் பிரதிவாதியான சரத் பொன்சேகா தமக்காக வழக்காட எத்தனை சட்டத்தரணிகளையும் நியமிக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது இராணுவ நீதிமன்ற ஒழுங்கில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...



மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்போம்: இலங்கைப் பிரதமர்


கொழும்பு, பிப். 12: நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு (யு.பி.எஃப்.ஏ.) மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை கிடைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இப்போது அமலில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை ரத்து செய்துவிடுவோம் என்று பிரதமர் ரத்னசிறீ விக்ரமநாயக அறிவித்தார்.

இலங்கையில் இப்போது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 196 உறுப்பினர்களும் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில் கட்சி அளிக்கும் தேசியப் பட்டியலிலிருந்து தெரிந்தெடுக்கப்படும் 26 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இடம் பெறுகின்றனர்.

"இப்போதுள்ள தேர்தல் முறை சரியில்லை என்பது என்னுடைய கருத்து. இப்போது உள்ள உறுப்பினர்களை நம்முடைய உறுப்பினர்கள் என்றே நாம் அழைக்க முடியாது.

இந்த ஹோரண தொகுதியிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம், மற்றவர்கள் தோல்வி அடையலாம். ஆனால் இப்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் ஹோரணவைச் சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் வேறு பகுதியைச் சேர்ந்தவரைக் கூட கட்சிகள் தங்களுடைய பிரதிநிதியாக நியமிக்கலாம்.

இந்த சட்டத்தை மாற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்கள் தேவை. எனவே எங்கள் கூட்டணிக்கு அந்த ஆதரவை வழங்கினால் இந்தத் தேர்தல் முறையையே மாற்றிவிடுவோம்' என்றார் விக்ரமநாயக.

இப்போதைய நாடாளுமன்றம் 2004-ல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். பதவிக்காலம் முடிவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டார் அதிபர் மகிந்த ராஜபட்ச.

வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 19 தொடங்கி 26-ல் நிறைவடைகிறது. ஏப்ரல் 8-ம் தேதி வாக்குப் பதிவு.

இப்போது ஆளும் கூட்டணிக்கு 105 உறுப்பினர்களும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 உறுப்பினர்களும் உள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணிக்கு 22 உறுப்பினர்களும் ஜாதிகா ஹேள உருமய என்ற கட்சிக்கு 9 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஆளும் கூட்டணியில் இலங்கை சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, இலங்கை மகாஜன பட்சய, முஸ்லிம் தேசிய ஐக்கிய கூட்டணி, மகாஜன ஏக்சத் பெரமுன, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, தேச விமுக்தி ஜனதா கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...