31 டிசம்பர், 2009

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அரச தாதியர்சங்கம் ஆர்ப்பாட்டம்-

அரச தாதியர் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கையானது நண்பகல் 12மணிமுதல் 1மணிவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 15அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரே நேரத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 06ம் திகதி மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும், எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் பிறிதொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாதியர் சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் முறை, முதலாவது தரப்பிற்கான பதவியுயர்வை 14வருட சேவைக்காலத்தில் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமலை மீனவர்களுக்கு மீன்பிடித்தடை நீக்கம், யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நீக்கம்-
திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடித் தடையானது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். மீனவச் சங்கங்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் இன்றையதினம் காலையில் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தவகையில் திருமலையில் சகல பகுதிகளுக்கும் சென்று மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் நாளை நள்ளிரவுமுதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுவரை காலமும் நள்ளிரவு 12.00மணிமுதல் அதிகாலை 4.00மணிவரை யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கென யாழ்ப்பாணம் செல்கின்றனர் வேட்பாளர்கள்-

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண குடாநாட்டிற்கு எதிர்வரும் தினங்களில் விஜயம் செய்யவுள்ளனர். இந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன 2010, ஜனவரி முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார். அதுபோல் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனவரி 02ம் திகதியும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி 18இலும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இவர்கள் யாழ். குடாநாட்டில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
முன்னாள் கடற்படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் நட்டஈடு கோருகிறார்-

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500மில்லியன் ரூபா நஷ்டஈடுகோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத்பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டிசில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்டநடவடிக்கையில் இறங்கநேரிடும் என்று அக்கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதியின் அறிவித்தலின்பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொதுமக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித்துள்ளது என்றும் முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட மருதானை ஐ.தே.கட்சி அமைப்பாளர் கைது-

ஐக்கிய தேசியக் கட்சியின் சுதுவெல தேர்தல் தொகுதி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கித்சிறி ராஜபக்ஷ இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடாட்ந்து மருதானைப் பொலீசிலும் கட்சியினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருதானைப் பகுதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் அவரை கைதுசெய்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். சுதுவெல பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் கித்சிறி ராஜபக்ஷவிற்கு தொடர்பிருப்பதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். முகத்தை மூடிய குழுவொன்று கித்சிறி ராஜபக்ஷவை கடத்திச் சென்றதாக அவரது பாரியாரும் ஆதரவாளர்களும் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

30 டிசம்பர், 2009

பதிவுச்சான்று கோரவேண்டாமென
பொலிசாருக்கு கண்டிப்பான உத்தரவு
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அறிவிப்பு
அவசர அலுவல்களின் நிமித்தம் கொழும்புக்கு வருபவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மீண்டும் அறிவுறுத்தல்களை அனுப்புவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான நிமல் மெதிவக தெரிவித்தார்.

பதிவுநீக்கம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதிப் பொலிஸ் மாஅதிபர், ஒருமாதம் வரையிலான குறுகிய காலம் கொழும்பில் தங்கியிருப்பதற்குப் பொலிஸில் பதியவேண்டுமென்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு அமைய, அவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முன்பு, மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வருவதற்குப் பொலிஸ் பதிவு நீக்கப்பட வேண்டுமென மலையகக் கட்சிகள் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. அதன்பின்னர், அவசர அலுவல்கள் காரணமாகவோ, உறவினர், நண்பர்களைப் பார்ப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கொழும்பில் வந்து தங்குபவர்கள் பொலிஸில் பதியவேண்டிய அவசியம் இல்லையென அரசாங்கம் அறிவித்தது.

ஆனால், சில பொலிஸ் நிலையங்களில் முறையான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி பொலிஸ் பதிவு கோரப்பட்டதாகத் தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின. எனினும், இவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எனப் பொலிஸ் மாஅதிபர் மெதிவக தெரிவித்தார்.



2012 முதல் கொழும்பில் இருந்து பளை வரையிலான
ரயில் சேவைகள் மீள ஆரம்பிப்பு
இந்திய

அரசாங்கத்தின்

கத்தின் 140 மில்லியன் ரூபா கடனுதவியுடனும் ஓமந்தையில் இருந்து பளை ரையான 96 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகளை மீளமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார். இந்தியக் கம்பனியொன்றினூடாக ரயில் பாதைகள் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதோடு இதுதொடர்பான ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் 30 மாதங்களில் ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகள் முழுமையாக நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பளையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளை சீன அரசின் உதவியுடன் முன்னெடுப்பது குறித்து பேச்சு நடத்தப்படும் எனவும் பொது முகாமையாளர் கூறினார்.

தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஓமந்தை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரை 28 ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதோடு ஓமந்தை ரயில் நிலைய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஓமந்தையில் இருந்து பளை வரையான ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணிகளுடன் இணைந்ததாக ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொது முகாமையாளர் கூறினார். ரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் பொறுப்புகளை அரச நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனியார் துறையினர் பொறுப்பேற்றுள்ளனர். இதுதவிர வடக்கின் தோழன் திட்டத்தினூடாகவும் நிதி திரட்டப்படுகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 4 ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, யாழ்தேவி, உத்தரதேவி ஆகிய பயணிகள் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதோடு, ஒரு எரிபொருள் ரயிலும் ஒரு சரக்கு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ரயில்களை இந்தியாவில் இருந்து தருவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் கூறினார்.

பயங்கரவாதச் செயற்பாடுகள் காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் முழுமையாக நாசமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வட பகுதிக்கான ரயில் சேவைகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் விலைகள் குறைப்பு

அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை குறைத்ததையடுத்து யாழ்குடாவில் பாண் மற்றும் பெற்றோல் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.

பாண் விலைகள் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (30) முதல் பெற்றோல் விலைகள் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடபகுதிக்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த காலங்களில் யாழ்குடாவில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் தென்பகுதியiவிட அதிக விலைக்கே விற்கப்பட்டன. ஏ-9 பாதை திறக்கப்பட்டதையடுத்து யாழ்குடாவிலுள்ள மக்களுக்கு தென்பகுதி விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாகவும் அரச அதிபர் கூறினார்.

யாழ்குடாவில் ஒரு இறாத்தல் பாண் 43 ரூபாவுக்கு விற்கப்பட்டதோடு தற்பொழுது 36 ரூபாவுக்கு பாண் விற்கப்படுகிறது. இதுதவிர பாண் சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

யாழ்குடாவில் சகல பொருட்களும் தட்டுப்பாடின்றிக் காணப்படுவதாகவும் வடபகுதி விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் தென்பகுதிக்குத் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதப் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டதையடுத்து வடபகுதிக்கான போக்குவரத்துச் சேவைகள் தடையின்றி இடம்பெறுவதோடு யாழ் பகுதி மக்கள் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் சென்றுவர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏ-9 வீதி திறக்கப்பட்டதையடுத்து பெருமளவிலான தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக அரச அதிபர் குறிப்பிட்டார். இதனால் யாழ்ப்பாணத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கம் : உதய நாணயக்கார
Wind Mill

யாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்..

இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்காட்சிகள் தேர்தல் பிரசாரம் நடத்த மட்டு. மாநகர முதல்வர் மறுப்பு


Sri Lanka Navy (SLN) vessels

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டக்களப்பு நகரில் மைதானம் வழங்க மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காந்தி சிலை சதுக்கத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குமர்று கோரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரம் பெற்ற தேர்தல் முகவர் சேகுதாவூத் பஷீர் (மாகாண சபை உறுப்பினர்) மாநகர ஆணையாளரிடம் எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருந்தார்.

மாநகர ஆணையாளரிடம் இதற்கு விண்ணப்பம் செய்திருந்த போதிலும்இ அதற்கான பதிலை மாநகர முதல்வரே தங்களுக்கு எழுத்து மூலம் வழங்கியுள்ளதாக சேகு தாவூத் பஷீர் தெரிவித்தார்.

"குறிப்பிட்ட இடத்தில் முன்கூட்டியே நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்" என மாநகர முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளதாக சேகு தாவூத் பஷீர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
முல்லை. மறுவாழ்வுப் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி

No Image
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

அச்செய்தியில்இ

"மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

அதேவேளைஇ போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் சுமார் பதினைந்து மாதங்களின் பின்னர் அதன் சொந்த இடத்தில் செயற்படத் தொடங்கியிருக்கின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஏனைய அரச திணைக்களங்களும் அங்கு செயற்பட்டு வருவதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி தெரிவித்தார்.

கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணியின் முன்னேற்றத்திலேயே இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் வேகமும் தங்கியிருப்பதாக அவர் கூறுகின்றார்" என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து . பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு


காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்ய
ப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சகல காவல்துறை உயரதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டமை குறித்த அறிவிப்பு சுற்று நிருபம் மூலம் சகல காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இந்தோனேசியாவில் தங்கியிருந்த 47பேர் ரோமேனியா மற்றும் ஆஸியில் மீள்குடியமர்வு-

இந்தோனேஷியாவின் கரையோரப் பகுதியில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 47இலங்கை அகதிகள் சென்றுள்ளதாக இந்தோனேஷியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ருமேனியா 16 அகதிகளுக்கும், அவுஸ்திரேலியா 31 அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கனடாவும் அவுஸ்திரேலியாவும் 15 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

88 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது-கபே-


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 88 வன்முறைச் சம்பவங்கள் தம்மிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கமான கபே தெரிவித்துள்ளது. இவற்றுள் 12 பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவ்வமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும் பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது 06 வன்முறைச் சம்பவங்கள் இறுதியாக இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த தேர்தலின்போதான வன்முறைச் சம்பவங்களை விட இம்முறை வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கீர்த்தி தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 105முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட பிக்கு தம்பர அமிலதேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில்


தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரரை எதிர்வரும் ஜனவரி 08ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரகம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பணமோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தம்பர அமிலதேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தி நேற்றையதினம் கொழும்பு புறக்கோட்டை அரசமரத்தடி சந்தியில் பிக்குமாரினால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றும் இடம்பெற்றிருந்தது. பிக்கு தம்பர அமிலதேரர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என ஜே.வி..பி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் பஸ்சேவை ஆரம்பம்-

சுமார் 20வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இலங்கைப் போக்குவரத்து பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச.டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பஸ்சேவையை நடத்தி வருகின்றன. ஏற்கனவே திருமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதிமுதல் யாழ்ப்பாணத்திற்கும் கல்முனைக்குமிடையிலான பஸ் சேவையும் கல்முனை இ.போ.ச டிப்போவினால் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
மேலும் இங்கே தொடர்க...

29 டிசம்பர், 2009



வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 27,875 ஏக்கர்
மேட்டு நிலத்தில் பயிரிட நடவடிக்கை
- பெரும்போகத்தின்போது 10,592 ஏக்கரில் பயிர்ச்செய்கை

வட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்ட உள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டு நிலங்களில் மீண்டும் பயிhச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ் மாவட்டத்தில் 10,963 ஏக்கரிலும் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ்குடாவில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




கிழக்கில் மேலும் மூன்று ரயில் பஸ்
சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவை விரைவில் ஆரம்பிப்பு


கிழக்கு மாகாணத்தில் உள்ள+ர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக மேலும் 03 ரயில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

ஏற்கனவே மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இரு உள்ள+ர் ரயில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு விரைவில் வாழைச்சேனை உள்ள+ர் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்தார்.

கிழக்கில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக 05 ரயில் பஸ் சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். வாழைச்சேனை உள்ள+ர் ரயில் பஸ் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ரயில் பஸ் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு ரயில் பஸ்கள் கந்தளாய் மற்றும் திருகோணமலை பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்ட உள்ளன.

போர்நெருக்கடி காரணமாக கிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்ததோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து கிழக்கில் இயல்பு வாழ்க்கை முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது தெரிந்ததே.




வழக்குகள் தொடரப்படாதுள்ள கைதிகள்
விரைவில் விடுவிக்க விசேட ஏற்பாடுகள்
சட்ட மாஅதிபர் தெரிவிப்பு


வழக்குகள் எதுவுமின்றிச் சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ் தெரிவித்தார்.

இதற்காக விசேட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். வழக்குத் தொடரவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் நேரடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்த சட்ட மாஅதிபர், இது தொடர்பில் பதினொரு சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

பெரும்பாலும் அடுத்தமாத முற்பகுதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று சட்ட மாஅதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 தமிழ்க் கைதிகள் வருடக்கணக்காக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு இந்த வாரம் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய இவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சட்ட மாஅதிபர் கூறினார்.

இது தொடர்பில் கடந்த வாரம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டதுடன், விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்தார்.

வழக்குகள் தொடரப்படாத நிலையில் களுத்துறை, மகசின், வெலிக்கடை, ப+ஸா உள்ளிட்ட சிறைகளில் தமிழ்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதேநேரம், ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஜனாதிபதியின் பணிப்பின்பேரிலேயே தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 738 பேரை இவ்வாரம் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுள் 700 பேரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படுபவர்களுள் 38 பேரும் இவ்வாரம் விடுதலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...



முதல் முயற்சி தோற்று விட்டது: அமெரிக்க விமானங்களை தகர்க்க மீண்டும் முயற்சிப்போம்;









நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் உமர் பாரூக் அப்துல் முதலாப் (வயது23). இவன் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தான்.

இவன் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றான். அந்த விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது உமர்பாரூக் அப்துல் தான் மறைத்து எடுத்து வந்திருந்த ரகசிய திரவப் பொருட்கள் மற்றும் பவுடரை கலந்து வெடி மருந்தாக்கிஇ அந்த விமானத்தை தகர்க்க சதி செய்தான்.

அவன் வெடிமருந்து கலவையை உருவாக்கிக் கொண்டிருந்தபோதுஇ விபரீதத்தை அறிந்த சக பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அவனது பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. 300 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

டெட்ராய்ட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியதும்இ உமர் பாரூக் அப்துல் கைது செய்யப்பட்டான். வெடிமருந்து கலவை தயாரித்த போதுஇ அது வெடித்ததால் உமர்பாரூக் அப்துல் காயம் அடைந்திருந்தான். மிக்சிகன் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு உமர் பாரூக் அப்துல் சிறையில் அடைக்கப்பட்டான். அமெரிக்காவில் எந்த நகரில் அவன் சிறை வைக்கப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே உமர் பாரூக்அப்துலின் குடும்பம் மற்றும் பின்னணி குறித்த எல்லா தகவல்களையும் அமெரிக்க போலீசார் திரட்டி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் உமர்பாரூக் அப்துல் அல்- கொய்தா இயக்கத்துடன் தொர்புடையவன் என்று தெரிய வந்துள்ளது. ஏமன் நாட்டில் உள்ள அல்கொய்தாவின் கிளை ஒன்று உமர்பாரூக்குக்கு நவீன பயிற்சிகளை கொடுத்துள்ளது. பிறகு வெடிமருந்து பவுடரை கொடுத்து அவனை விமானத்தில் தீவிரவாதிகள் அனுப்பி உள்ளனர்.

அப்துல் வைத்திருந்த வெடி மருந்து பவுடரை அரேபிய பகுதி அல்கொய்தா தீவிரவாதிகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த சதி திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் பிடிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் அன்று விமானத்தை தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான் என்று அல்கொய்தாவின் அரேபியன் பிரிவு பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டி ருப்பதாவது:-

அமெரிக்க விமானத்தை நூதன முறையில் தகர்க்க முயற்சி செய்தது நாங்கள்தான். ஏமன் நாட்டில் எங்கள் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத் தியது. அதற்கு பழிக்கு பழி வாங்கவே நாங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டோம்.

எங்களது முயற்சி எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துவிட்டது. தாக்குதல் தியாக செயலுக்காக நைஜீரியா வாலிபரிடம் அதிநவீன தொழில்நுட்ப கருவியை கொடுத்து அனுப்பி இருந்தோம்.

உயர் தொழில்நுட்பத்தில் தயாரான அந்த கருவி சேர்க்கையில் கடைசி நிமிடத்தில் கோளாறு ஏற்பட்டு விட்டது. இதனால்தான் அது வெடிக்காமல் போய் விட்டது.

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் எங்கள் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து விட்டனர். அமெரிக்கர்களே உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தவர்களுக்குத்தான் நீங்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் மீது நாங்கள் எந்த முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் தாக்குதல் நடத்துவோம். பழிக்கு பழி வாங்குவது நெருங்கி விட்டது. எனவே அமெரிக்கர்களே இனி இது போன்ற தாக்குதல்களை நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.

உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் நாங்கள் அழைக்கிறோம். எதிரிகளை கொல்லுங்கள். அரேபியா பகுதிகளை அமெரிக்க படைகள் அதர்மமாக ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்து நைஜீரியா வாலிபர் தியாகம் செய்துள்ளார்.

அமெரிக்க உளவுத் துறையின் திறமையையும் பலத்த பாதுகாப்பையும் மீறி அவர் வெடி பொருட்களுடன் ஊடுருவி சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அந்த இணையத்தள தகவலில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
காணாமற் போனோரை கொண்டுவந்து விடுவதாகக் கூறி பலலட்சம் ரூபாய் மோசடி-
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து காணாமற்போனவர்களது உறவினர்களிடமிருந்து 8லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடியொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. காணாமற் போனவர்களின் வீடுகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் காணாமற்போனோரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, குறித்த தொகைப் பணத்துடன் யாழ். சிறைச்சாலைக்கு முன்பாக வருமாறும், அவ்விடத்தில் வைத்து காணாமற் போனவர்கள் விடுவிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் ஐந்திற்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியின் பணிப்புரைக்கமைய குறித்த இடத்திற்கு சென்றபோது அவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்த ஒருவர் விரைவில் காணாமற்போனவர்களை அவ்விடத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். குறித்தநபர் சுமார் 8லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...